Monday, May 7, 2018

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும் 


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥

tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥


tato = அப்போது

dvaṅdva = இருமைகள்

an = இல்லை

abhighātaḥ  = தோற்கும்

இருமைகள் மறையும் என்றால், அது ஏன் மறைய வேண்டும் என்ற முதல் கேள்வி வரும் அல்லவா ?

இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்.

மகிழ்ச்சி வேண்டும், துக்கம் வேண்டாம். 

உயர்ந்தது வேண்டும், தாழ்ந்தது வேண்டாம் 

என்று தானே எல்லோரும் நினைக்கிறார்கள். பின் எதற்கு இருமை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இருமை வேண்டும் என்று அல்லவா தோன்றுகிறது. 

நாளில், பகல் எப்போது முடிகிறது, இரவு எப்போது ஆரம்பிக்கிறது ?

வறுமை எங்கு முடிகிறது ? செல்வம் எங்கு ஆரம்பிக்கிறது? எவ்வளவு இருந்தால் செல்வந்தன் என்று சொல்லலாம் ?

துன்பம் எங்கு முடிகிறது ? இன்பம் எங்கு ஆரம்பிக்கிறது ?

முதலில் இந்த இருமைகளே கிடையாது. வாழ்க்கையில் எல்லாமே ஒரு தொடர்ச்சியான ஒன்று தான்.  இங்கு இது முடிகிறது, இங்கு இது தொடங்குகிறது என்று ஒன்றுமே இல்லை. எல்லாம் ஒரே தொடர்தான். 

நாம் தான் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். 

இவன் நல்லவன், இவன் கெட்டவன், 
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் 

என்று பிரித்து வைத்துக் கொண்டு, இது வேண்டும், அது வேண்டாம் என்று சங்கடப் படுகிறோம். 

வாழ்க்கை பிரிக்க முடியாத ஒன்று. நாம் பிரித்து வைத்துக் கொண்டு வருத்தப் படுகிறோம். 

ஆண் பெண் பாகுபாடு கூட இல்லை என்று அர்த்த நாரி என்று வைத்தார்கள். 

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். 

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
          காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
     வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே 
          மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
     நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
          நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
     எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
          என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 

நரர்களுக்கும், சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே. 

எல்லாமே தேவை என்று தான் இயற்கை படைக்கிறது. நாம் தான் இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரித்து வைத்துக் கொண்டு துன்பப் படுகிறோம். 

உடல் relaxed ஆக இருக்கும் போது ...என்று சொல்லும் போது...உடல் எப்போது relaxed  ஆக இருக்கும் ?

மனதில் ஆசை பெருக்கெடுத்தது ஓடாத போது , காமம், கோபம் , பொறாமை, போட்டி கொந்தளிக்காத போது மனம் சாந்தப் படும். 

சூரியன் எந்தப் பக்கம் உதித்தால் எங்களுக்கு என்ன என்று ஆனந்தமாக இருப்போம் என்கிறார் மணிவாசகர். 

"எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்."

ஞாயிறு எங்கு எழுந்தால் என்ன ? கிழக்கில் எழுந்தால் என்ன ? மேற்கில் உதித்தால் என்ன...அதைப் பற்றி எல்லாம் ஒரு கவலையும் இல்லை என்கிறார் மணிவாசகர். 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.

விடுங்கள். எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள். அனைத்தையும் உங்கள் பிடியில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உலகம் இருந்தது. உங்களுக்கு பின்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இது இருக்கும். தளைகளை எல்லாம் விட்டு விட்டு , ஆனந்தமாக இருங்கள். 

உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். மக்கள் இப்படி இருக்க   வேண்டும், மகன் மருமகள் இப்படி இருக்க வேண்டும், என்று வரையறுக்காதீர்கள். அந்த வரையறைக்குக் காரணம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது  என்ற அபிப்ராயம். 

அவற்றை விடுங்கள். 

வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுகமாக இருக்கும். 

அது எப்படி விட முடியும் என்று வாதம் பண்ணினால் , என்ன சொல்ல ?

இன்னும் நாள் ஆகும் , காத்திருக்க வேண்டியது தான்....

http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248_7.html


Sunday, May 6, 2018

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும்

யோக சூத்திரம் - 2.48 - இருமைகள் மறையும் 


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥

tato dvaṅdva-an-abhighātaḥ ॥48॥


tato = அப்போது

dvaṅdva = இருமைகள்

an = இல்லை

abhighātaḥ  = தோற்கும்

எப்போது உடல் relaxed ஆக இருக்கிறதோ, அப்போது இருமைகள் தோற்று அழியும்

நமது உடலில் தலை, கழுத்து, மார்பு, வயிறு என்றெல்லாம் இருக்கிறது அல்லவா ?

தலை எங்கே முடிகிறது? கழுத்து எங்கிருந்து தொடங்குகிறது ?

கழுத்து எங்கே முடிகிறது? மார்பு எங்கிருந்து தொடங்குகிறது?

அங்கே ஏதாவது கோடு போட்டு இருக்கிறதா ? இது வரை தலை, இதற்குப் பின் கழுத்து என்று?

இல்லை.

இருந்தும் நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

உடம்பு ஒன்று தான். அதில் பிரிவு என்பதே கிடையாது.

காரில் இருப்பது போல இது டையர் , இது கதவு, இது brake , என்று உதிரி பாகங்கள்  கிடையாது. உடம்பு பூராவும் ஒன்று தான்.

இதன் அடுத்த நிலை,  நாம் உடம்பு வேறு, மனம் வேறு என்று பிரித்து வைத்து இருக்கிறோம்.

இவை இரண்டு அல்ல ஒன்று தான். உடலும் மனமும் ஒன்று சேர்ந்தததுதான் நாம்.

Psychosomatic என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உடலும் மனமும் ஒன்று சேர்ந்த கலவை நாம்.

எனவே உடல் அசைந்தால் மனம் அசையும், மனம் அசைத்தால் உடல் அசையும்.

மனதை நம்மால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. எனவே, உடலை relaxed ஆக வையுங்கள் என்கிறார்.

சரி அப்படி வைத்தால் என்ன ஆகும் ? எதற்காக அப்படி வைக்க வேண்டும்?

அப்படி வைத்தால், இருமைகள் மறையும் என்கிறார்.

அது என்ன இருமை?

இன்பம், துன்பம்
நல்லது கெட்டது
உயர்ந்தது தாழ்ந்தது
பாவம் புண்ணியம்

என்று வாழ்வில் பல இமைகள் இருக்கின்றன. இவை  அனைத்தும்  போய்  விடும் என்கிறார்.

அது எப்படி போகும்?

அப்படியே போனாலும், அது நல்லாவா இருக்கும். பாவமும் புண்ணியமும் போய் விட்டால்  பின் பாவம் செய்யலாமா? எதுக்கு புண்ணியம் செய்யணும் ?

இப்படிப் பட்ட கேள்விகள் எல்லாம் வரும். அதுக்கு என்ன பதில் ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/05/248.html

Thursday, May 3, 2018

யோக சூத்திரம் - 2.47 - உடம்பே ரிலாக்ஸ் ப்ளீஸ்

யோக சூத்திரம் - 2.47 - உடம்பே ரிலாக்ஸ் ப்ளீஸ் 


प्रयत्नशैथिल्यानन्तसमापत्तिभ्याम् ॥४७॥

prayatna-śaithilya-ananta-samāpatti-bhyām ॥47॥

prayatna = பிரயத்தன , முயற்சி

śaithilya = தளர விடும் போது

ananta = ஆனந்தம்

samāpatti = சமாதி

abhyām = இரண்டும் ॥47॥


மனதும் உடலும் நெகிழ்ந்து இருக்கும் போது சமாதி நிலை அடைய முடியும். அது அளவற்ற ஆனந்தம் தரும்.

śaithilya என்ற அந்த வார்த்தைக்கு  சரியான தமிழ் சொல் கிடைக்க மாட்டேன் என்கிறது.

Relaxation என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் கிட்ட வருகிறது. இப்போதைக்கு relaxation என்றே வைத்துக் கொள்வோம்.

நமது உடம்பு எந்நேரமும் ஒரு முறுக்கில் (tension ) ஆகவே இருக்கிறது.

காலை எழுந்தவுடன் இந்த பதட்டம் ஆரம்பமாகி விடுகிறது.

அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், என்று ஆயிரம் எண்ணங்கள்  ஓட ஆரம்பிக்கிறது. மனதில் அழுத்தம் ஏற ஏற உடலில் அது  பிரதிபலிக்கிறது.

உடலில் பல ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கிறது.  அவை ஒன்றோடு ஒன்று  கலந்து  உடலுக்குள் யுத்தம் ஆரம்பிக்கிறது.


உடம்பு relaxed ஆக இருப்பதே இல்லை.

அதற்கு பலப் பல காரணங்கள்.

உணவு முறை. வேலையில் வரும் அழுத்தம். உறவுகள் தரும் அழுத்தம்.  சரியான ஓய்வு கிடையாது.

ஆசைகள். பொறாமைகள். பயங்கள். சந்தேகங்கள். என்று ஆயிரம் விஷயங்கள்  உடலை ரிலாக்ஸ் பண்ண விடுவதில்லை.

ரொம்ப முயற்சி  செய்தால்,சில நிமிடங்கள் relaxed ஆக இருக்கலாம். உடனே மனம் சொல்லும் "என்ன சும்மா உக்காந்து கிட்டு இருக்க.. எழுந்திரு...எவ்வளவு  வேலை இருக்கிறது...ஓடு " என்று விரட்டும்.

எந்நேரமும் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

உடம்பை relaxed ஆக வைத்தால் மனமும் relax ஆகும்.

எதிர் காலம் பற்றிய பயம், கனவுகள், சந்தேகங்கள்,ஆசைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த நேரம், இந்த நொடியில் மனதையும் உடலையும் relax ஆக வைக்கப் பழகினால், எல்லை அற்ற ஆனந்தம் வரும் என்கிறார் பதஞ்சலி.

ஆசனம் என்றால் ஸ்திரம் மற்றும் சகஜம் என்று பார்த்தோம்.

அடுத்தது, ஆசனம் என்பது relaxed ஆக இருப்பது.

உடலை வருத்தக் கூடாது. அதை கசக்கிப் பிழியக் கூடாது. அது ஒரு மலர் போல மென்மையாக மலர வேண்டும். உடலில் அழுத்தம் நிகழ்ந்தால் அது மனத்திலும் நிகழும்.

உடலை தளர விடுங்கள். மனதும் மென்மையாகும்.

http://yogasutrasimplified.blogspot.com/2018/05/247.html




Friday, April 27, 2018

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம்

யோக சூத்திரம் - 2.46 - ஸ்திரம் சுகம் ஆசனம் 




स्थिरसुखमासनम् ॥४६॥

sthira-sukham-āsanam ॥46॥

sthira = ஸ்திரம் - உறுதியாக

sukham = சுகம்

āsanam  =ஆசனம் ॥46॥

அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு படிகளை பார்த்தோம் - இயமம், நியமம்.

மூன்றாவது அங்கம் - ஆசனம்.

ஆசனம் என்றால் என்ன?


ஆசனத்தைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் கூறுகிறார்.


உடலை வளைத்து, நெளித்து, வயிறை உள்ளே இழுத்து, காலை மடக்கி தலையை தொடுவது எல்லாம் ஆசனம் கிடையாது. 

பதஞ்சலி இரண்டே இரண்டு கூறுகளைக் கூறுகிறார்.

ஸ்திரம் - சுகம். அது தான் ஆசனம். 

அப்படினா என்ன?

நீங்கள் உங்கள் உடலின் போக்கை நன்றாக கவனித்துப் பாருங்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல்  உங்களால் ஒரு நிலையில் இருக்க முடியாது. சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தால் கூட, உடல் நெளியும். காலைத் தூக்கி மேலே வைப்பீர்கள். அப்புறம் மடித்து வைப்பீர்கள். எழுந்து நடப்பீர்கள்.  ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள். 

ஒரு இடத்தில் உடல் நிலையாக இருக்காது. 

"அப்படி ஒன்றும் இல்லையே. நான் நினைத்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒரு நிலையில் என்னால் இருக்க முடியுமே" என்று சொல்வீர்களானால், யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று. 

சுகமாக இருக்குமா ? ஒரே நிலையில் ஒரு அரை மணி நேரம் அசையாமல் இருந்தால்  சுகமாக இருக்குமா ? இருக்காது. 

உறுதியாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சுகமாகவும் இருக்க வேண்டும். 

ஏன் என்றால்...மனம் உடலைத் தொடரும். உடல் அலைந்து கொண்டே இருந்தால் மனமும் அலையும். உடல் நின்றால் மனம் நிற்குமா என்றால் இல்லை. ஆனால், மனதை ஒரு முகப் படுத்த வேண்டும் என்றால் முதலில் உடலை சமன் செய்ய வேண்டும். 

உடம்பு அலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் உடலை கஷ்டப் படுத்தவும் கூடாது. 

உடம்பு எப்போது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

நிதானமாக சாப்பிட்டு, தேவையான அளவு உடல் உழைப்பு செய்து, வேண்டிய அளவு அதற்கு ஓய்வு கொடுத்தால் அது உறுதியாகவும் சுகமாகவும் இருக்கும். 

எது சுகமாக இல்லையோ அது ஆசனம் இல்லை. காலை மடக்கி பத்மாசனம் போட்டால் வலிக்கிறதா. அப்படி என்றால் உங்களுக்கு அது ஆசனம் அல்ல. மற்றவர்களுக்கு அது ஆசனமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அது ஆசனம் அல்ல. 

எந்நேரமும் படுத்து தூங்குவதுதான் சுகமாக இருக்கிறது. அது ஒரு ஆசனமா என்றால், அது உங்களுக்கு ஸ்திர நிலையைத் தருகிறதா ? தராது. தொந்தியும் தொப்பையும் பெருத்து ஒரு நிலை இல்லாமல் அலைய வேண்டி வரும். 

எனவே உடல் உறுதியாகவும் இருக்க வேண்டும். சுகமாகவும் இருக்க வேண்டும். 

உடலை எப்படி சுகமாக இருக்க வைப்பது ?

அடுத்த சூத்திரத்தில் சொல்கிறார். 

நாளை அதைப் பார்ப்போமா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/246.html

Tuesday, April 24, 2018

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி

யோக சூத்திரம் - 2.45 - சரணாகதி 



समाधि सिद्धिःईश्वरप्रणिधानात् ॥४५॥

samādhi siddhiḥ-īśvarapraṇidhānāt ॥45॥


samādhi = சமாதி நிலை

siddhiḥ = சித்திக்கும்

īśvara = ஓர் உயரிய சக்தியிடம்

praṇidhānāt  =  = சரண் அடையும் போது  ॥45॥

ஈஸ்வர சக்தியிடம் சரண் அடையும் போது, சமாதி நிலை சித்திக்கும். அல்லது சமாதி நிலையம், புலன்களுக்கு அற்புத சித்தியும் கிடைக்கும். 

ஆஹா...சமாதி அடைய எளிய வழி கிடைத்து விட்டது. சித்தி அடைய சுலபமான வழி கிடைத்து விட்டது. சரணாகதி அடைந்தால் போதும். எல்லாம் அடைந்து விடலாம். இதோ இப்போதே சரணாகதி அடைந்து விடுகிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடலாமே.

சரணாகதி அடைவதில் என்ன சிக்கல். சண்டை போடுவதில் தான் சிக்கல். சரண் அடைவதில் என்ன சிக்கல்.

சண்டை போடுவதை விட பெரிய சிக்கல்.

எதற்காக சரண் அடைவது? சமாதி அடைய, சித்தி பெற. எங்கே ஆசை இருக்கிறதோ, அங்கே சரணாகதி இல்லை. நான் சரண் அடைகிறேன், எனக்கு அதைக் கொடு என்றால்  அது வியாபாரம்.

எப்போது எதிர்பார்ப்பு இருக்கிறதோ , அப்போது அது ஒரு வர்த்தகம் தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண் அடைய முடியுமா ?

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்பார் திருமூலர்.  இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஒரு ஆசை தானே. உள்ளதுக்கெல்லாம் பெரிய ஆசை இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பது தான். பேராசை. ஆசையை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே  உலகில் உள்ள மிகப் பெரிய ஒன்றுக்கு ஆசைப் படுவது எப்படி  சரியாகும் ?

மிகப் பெரிய ஆசை, மிகப் பெரிய துன்பத்தில் தான் போய் முடியும்.

இரண்டாவது, சரண் அடைவது என்றால், எல்லாம் நீ பார்த்துக் கொள் என்று சோம்பேறியாக  இருப்பது அல்ல. கிடைத்தவற்றை பிரசாதமாக ஏற்றுக் கொள்வது.

வாழ்க்கை எதைத் தருகிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வது.

அது வேண்டும், இது வேண்டாம் என்று சண்டை பிடிப்பது
கூடாது.
யோசித்துப் பாருங்கள், நமக்கு கிடைத்த ஏதாவது  ஒன்றை நாம் முழுமையாய்  ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ?

மற்றவற்றை விடுங்கள்.  நம்மை நாம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோமா ?

நமது மூக்கு சரி இல்லை, பல் வரிசை சரி இல்லை, உயரம் பத்தாது, முடி  கொடுக்கிறது,  உடல் பருமன் அதிகமாக இருக்குறது, அதிக உயரம், கலர் கொஞ்சம்  கம்மி, அறிவு பத்தாது, தொப்பை அதிகமாக இருக்கிறது, என்று நம்மை பற்றி  நமக்கு எவ்வளவு எதிர் எண்ணங்கள் இருக்கிறது.

நம்மையே நம்மால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாமா மற்றவர்களை  ஏற்றுக் கொள்ளப் போகிறோம் ? அப்புறம் இந்த உலகில் உள்ள  பொருள்கள், நிகழ்வுகள்.

சதா சர்வ காலமும் ஏதோ ஒரு குறையுடனேயே சுத்திக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு பணம் வந்தாலும், எவ்வளவு வசதி வந்தாலும், எவ்வளவு நல்லது நடந்தாலும்  இன்னும் கொஞ்சம் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், அது சரி இல்லை, இது சரி இல்லை என்று குறை பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அப்படி குறை படுவதால் என்ன ஆகிறது ?

நமது மூளை அந்த குறையின் மேலேயே சதா சர்வ காலமும் தன் சக்தியை செலவிடுகிறது.

அதனால் நமது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன.

நாம் சந்தோஷமாக இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நாம்  ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

நாம் கவலையோடு, பயத்தோடு இருக்கும் போது சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை நம்மை பலவீனப் படுத்துகின்றன.

வாழ் நாள் பூராவும்  கவலை, பயம், என்று இருந்தால் உடல் என்ன ஆகும்.

மனமும் உடலும் நைந்து போகும்.

நமக்கு வாழ்க்கையில் கிடைத்தவை எல்லாம் நல்லவையே என்று அவற்றை  எடுத்துக் கொண்டால்  மனமும் உடலும் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும். புலன்கள் புது சக்தியைப் பெரும்.

அது சித்தி பெற வழி வகுக்கும்.

சித்தி என்பது நீண்ட தூரம் போன பின் கிடைப்பது.

அதன் முதல் படி, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை இரசிப்பது. இனிமையாக வாழ்வது. குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல், எல்லாம் இனிதே என்று இருப்பது.

நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும், இந்த உலகையும் அப்படியே ஏற்றுக் கொள்வது.

யோசித்துப் பாருங்கள். எவ்வளவு ஆனந்தம் என்று.

இன்னும் எழுதலாம். நீங்களே உங்கள் மனக் கண்ணில் நினைத்துப் பாருங்கள்.

எதிர் நீச்சல் போடாதீர்கள். வாழ்க்கையோடு ஒன்றிப் போங்கள் . மிக மிக சுகமாக இருக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/245.html




Saturday, April 21, 2018

யோக சூத்திரம் - 2.44 - இறைவனை அடைய

யோக சூத்திரம் - 2.44 - இறைவனை அடைய 


स्वाध्यायादिष्टदेवता संप्रयोगः ॥४४॥

svādhyāyād-iṣṭa-devatā saṁprayogaḥ ॥44॥

svādhyāyād = தன்னை அறிவதன் மூலம்

iṣṭa = இஷ்ட, விரும்பிய

devatā = தேவன், தேவதை

saṁprayogaḥ = ஒன்றாக முடியும்

கடவுளை அடைய வேண்டும். முக்தி அடைய வேண்டும். கைலாயம் போக வேண்டும். வைகுண்டப் பதவி அடைய வேண்டும். இறைவன் திருவடியில் ஒன்றாக இருக்க வேண்டும். கடவுளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிறார்கள்.

அதற்கு என்ன செய்யலாம் ?

பூஜை செய்யலாம், கோவிலுக்குப் போகலாம், தீர்த்த நீராடலாம், முடி கொடுக்கிறேன், காணிக்கை போடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளலாம், தினமும் சுலோகம், பாடல்கள் பாடலாம், விரதம் இருக்கலாம், பழைய புத்தகங்களை படிக்கலாம்...என்று பெரிய பட்டியல் இருக்கிறது.

இதை எல்லாம் செய்தால் இறைவனை அடைய முடியாது என்கிறார் பதஞ்சலி.

தன்னை அறிவதன் மூலம் தான் விரும்பிய தேவன்/தேவதையோடு ஒன்றாக இருக்கலாம்  என்கிறார்.

அந்த இஷ்ட தேவதை சிவன்/முருகன்/பிள்ளையார்/ சக்தி/விஷ்ணு/அல்லா/இயேசு என்று யாராக  வேண்டுமானாலும் இருக்கலாம்.

யாரை விரும்புகிறீர்களாளோ அவர்களை அடையலாம்.

இன்னும் சொல்லப் போனால், நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை அடைவீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வமாகவே  ஆகி விடுவீர்கள் என்கிறார்.  ஒன்றாக இருக்கலாம் என்கிறார்.

மனிதன் , தான் யார் என்று அறிவதே இல்லை. என்னைப் பற்றி அறிய என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அது அந்த அறிவின் முதல் படி.

கடவுள் இருக்கிறார் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? கடவுளை ஏன் அடைய வேண்டும் ? ஏதோ சொன்னார்கள், செய்கிறேன். காரணம் எல்லாம் தெரியாது என்று  இயந்திர கதியில் செல்லாமல், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய வேண்டும். நான் யார், ஏன் இதைச் செய்கிறேன், இதன் அர்த்தம் என்ன என்று அறிய வேண்டும்.

தன்னை அறிவததைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

சிந்தியுங்கள்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/04/244.html



Friday, April 20, 2018

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் - பாகம் 2



कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥

kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥

kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்

siddhir = சித்தி

aśuddhi = களங்கங்களை

kṣayāt = விலக்கிய பின்

tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥

உடலும் மனமும் அவற்றில் உள்ள அழுக்குகளை தவத்தின் மூலம் நீக்கிய பின், சித்தி அடையும். 

தவறான உணவு பழக்க வழக்கத்தால் எப்படி உடல் மாசு படுகிறது என்று பார்த்தோம். மேலும் ஒரு வகையில் உடம்பு மாசு படுகிறது என்ற இடத்தில் முந்தைய blog முடிந்தது. 

அது என்ன இன்னொரு வழி ?

நம் மனதில் ஏற்படும் அழுந்தங்களால் உடல் மாசு படுகிறது. 

உதாரணமாக, 

கவலை அதிகமானால் சரியாக சாப்பிடத் தோன்றாது. அப்படியே சாப்பிட்டாலும், சரியாக  செரிமானம் ஆகாது. 

கோபம், காமம், பொறாமை போன்றவை ஏற்படும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பல விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி விடுகின்றன.  ஏன் என்றால்,நம்மால் நம் உணர்வுகளை சரி வர வெளிப் படுத்த முடிவதில்லை. 

மேலதிகாரியின் மேல் கோபம். என்ன செய்ய முடியும் ?

கணவன் மேல் கோபம் - என்ன செய்து விட முடியும்?

அரசாங்கத்தின் மேல் கோபம் - ஒன்றும் செய்ய முடியாது. 

அது போல பொறாமை. "ஐயோ அவனுக்கு கிடைத்து விட்டதே " என்ற பொறாமை , தூங்க விடாது, நிம்மதியாக இருக்க விடாது. அதற்காக, அவனுக்கு கிடைத்ததை தட்டி பறிக்கவா முடியும்? 

இப்படி நம்முள் எழும் பல உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லை. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் அல்லது  அவற்றை சமாளிக்க உதவும் ஹார்மோன்கள் தங்கள் வேலையை செய்கின்றன. ஆனால், உணர்ச்சிகளை வெளிக் காட்ட முடியாமல், அந்த ஹார்மோன்கள் செய்வது அறியாது உடலிலேயே தங்கி விடுகின்றன. 

சரி, அதற்கு என்ன செய்வது ?

முதலில் இந்த உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்து விடு பட வேண்டும். அதற்காக உணர்ச்சியற்ற சடப் பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல அர்த்தம். 

உணர்ச்சிகளின் மூலத்தை அறிய வேண்டும். அவை எங்கிருந்து பிறக்கின்றன. எப்படி வளர்கின்றன என்று அறிய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் பிடியில் இருந்து  விடுபட வேண்டும். 

உணர்ச்சிகள் நம் மனதை மட்டும் அல்ல, உடலையும் மாசு படுத்துகின்றன என்று அறிய வேண்டும். உணர்வுகளை சம நிலைப் படுத்த வேண்டும். 

அப்போது மனம் மட்டும் அல்ல , உடலும் தூய்மை அடையும். 

அப்போது சிந்தி அடையலாம். 

நிதானமாக யோசித்துப் பாருங்கள்..

உங்கள் உணவு பழக்கங்கள், உங்கள் உணர்வு பழக்கங்களை...அவை இரண்டையும் சரி செய்தால்  உடலும் மனமும் சரியாகும். 

சித்தி கிடைக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான மனமும் உடலும் கிடைக்கும் அல்லவா?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243-2.html

Wednesday, April 18, 2018

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம்

யோக சூத்திரம் - 2.43 - சுய ஒழுக்கம் 



कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात् तपसः ॥४३॥

kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ॥43॥

kāyendriya = காயம் + இந்திரியம். காயம் என்றால் உடம்பு. காயமே இது பொய்யடா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ? உடம்பும் புலன்களும்

siddhir = சித்தி

aśuddhi = களங்கங்களை

kṣayāt = விலக்கிய பின்

tapasaḥ = தவத்தின் மூலம் ॥43॥

உடலும் மனமும் அவற்றில் உள்ள அழுக்குகளை தவத்தின் மூலம் நீக்கிய பின், சித்தி அடையும். 

இந்த சூத்திரத்தில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன.

பொறுமையாக ஒவ்வொன்றாக பார்ப்போம்.

சித்தி அடையும் = சித்தி என்றால் மிகுந்த சக்தியை பெறுவது. அஷ்டமா சித்திகள் என்று சொல்லுவார்கள்.  அமானுஷ்யமான சக்திகளை பெறுவது.  உடலை விட்டு வெளியில்  செல்வது, சாதாரண கண்ணுக்குத் தெரியாதவற்றை காண்பது, போன்ற சக்திகள். இந்த சக்திகள் நமது புலன்களுக்கு  கிடைக்கும். எப்போது  என்றால்

உடலிலும் மனத்திலும் உள்ள களங்கங்களை களைந்த பின்.

உடலில் நாம் பல விதங்களில் களங்கங்களை  சேர்த்து வைக்கிறோம். அளவுக்கு அதிகமாக உண்பது. தேவை இல்லாதவற்றை உண்பது. புகை, மது, காப்பி, டீ போன்றவற்றை இடை விடாமல் ஒரு நாளில் பல தடவை உட்கொள்வது. காலையில எழுந்தவுடன் ஒரு காப்பி குடிக்காட்டி எனக்கு வேலையே ஓடாது ...என்று பலர்  சொல்லக் கேட்டு இருக்கிறோம். இது போன்ற நஞ்சுகளை  கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்புக்குள்ளே நாமே ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.  மாமிச உணவு, pizzaa , burger என்று நாவுக்கு அடிமையாகி ,உடம்புக்கு ஒவ்வாதவற்றை திணிக்கிறோம்.

நம் உடம்பு முடிந்த வரை இவற்றில் உள்ள நஞ்சுகளை பிரித்து வெளியேற்றும். வெளியேறாத நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.

ஏன் முழுவதுமாக வெளியேற்றுவது இல்லை ?  அதற்கு கால அவகாசம் வேண்டும்.  அது முதலில் சாப்பிட்ட நஞ்சை வெளியேற்றிக் கொண்டு இருக்கும் போதே  அடுத்த டம்ளர் காப்பியை உள்ளே தள்ளுகிறோம். அது  சரியாவதற்குள்  ஒரு சமோசா, கொஞ்சம் நூடுல்ஸ், என்று இடை விடாமல் எதையாவது  உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம்.

வீட்டில் பெண்மணிகள் தரையை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வார்கள். அப்போது குழந்தைகள்  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். "...டேய் கொஞ்ச நேரம் ஒரு  இடத்துல இருடா...தரை காயட்டும் "   என்பார்கள்.  காய்வதற்குள்  அழுக்கு காலை வைத்தால் அந்த அழுக்கு ஆழமாக படியும்.

அது போல, உடம்பு முன் உண்ட உணவில் உள்ள வேண்டாதவற்றை நீக்கும் போது , மேலும் உண்டால், உடம்பு பழைய உணவில் உள்ள நஞ்சை விட்டு விட்டு  புது உணவை கவனிக்க போய் விடும். அப்போது , வெளியேற்றப் படாமல் உள்ள  நஞ்சு உடலிலேயே தங்கி விடும்.

அதை நீக்க ஒரே வழி, பட்டினி கிடப்பதுதான். விரதம் , உபவாசம் என்று சொன்னார்கள்.  விரதம் இருப்பது சொர்கம் போக அல்ல, உடம்புக்கு கொஞ்சம்  ஓய்வு கொடுக்க.

அன்னிக்கு விரதம் இருந்தால், நேரே சுவர்க்கம், இன்னிக்கு விரதம் இருந்தால்  வைகுண்டம்/கைலாயம், இன்னும் சில நாள் விரதம் இருந்தால் கணவனின் ஆயுள் கூடும்  என்றெல்லாம் சொல்லி வைத்தது உடலின் கூறுகளை அறிந்து  கொள்ள முடியாதவர்களுக்காக.

இப்படி தவறான உணவு பழக்கத்தால் உடலில் அசுத்தம் ஏறிக் கொண்டே போகிறது.

அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கியமான வழியில் உடலில் அசுத்தம் ஏறுகிறது .

அது என்ன என்று நாளை பார்ப்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/243.html

Saturday, April 14, 2018

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும்

யோக சூத்திரம் - 2.42 - திருப்தியும் மன மகிழ்வும் 


संतोषातनुत्तमस्सुखलाभः ॥४२॥

saṁtoṣāt-anuttamas-sukhalābhaḥ ॥42॥

saṁtoṣāt = திருப்தியில்

anuttamas = மிகச் சிறந்த

sukha = சுகம், சந்தோஷம், மகிழ்ச்சி

lābhaḥ = கிடைக்கிறது, அடையலாம்  ॥42॥

மன திருப்தியின் மூலம் மிகச் சிறந்த மகிழ்ச்சியை அடையலாம். 

அது தான் தெரியுமே, சாமியாராகப் போய் விடு, எதற்கும் ஆசைப் படாதே, என்று எல்லோரும் சொல்லுவதைத்தானே பதஞ்சலியும் சொல்கிறார். அது எங்களுக்குத் தெரியும். அடுத்த சூத்திரத்துக்குப் போகலாம் என்று என்று நீங்கள் அவசரப் படுவதற்கு முன்....ஓரிரு வார்த்தைகள். 

திருப்தி என்றால் ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது என்று அர்த்தம் அல்ல. ஏதேதோ வேண்டும், இருந்தாலும், ஆசைப் படுவது தவறு என்று சொல்லப் பட்டதால், ஆசைகளை அடக்கிக் கொண்டு, அதே சமயம் அந்த ஆசைகள் நிறைவேறாததால் மனதில் ஒரு துக்கத்தையும் ஏந்திக் கொண்டு அலைவது அல்ல. 

அதில் என்ன மகிழ்ச்சி இருக்கும் ?  சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லி விட்டு போன  நரி மாதிரி ஆகி விடக் கூடாது. 

திருப்தி என்றால், இருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இது எல்லாம் கிடைத்திருக்கிறது. அதில் மகிழ்ச்சி கொள்வது. 

நாம் என்றாவது நம்மிடம் இருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்திருக்கிறோமா ?  இந்த உடம்பு, இந்த மூளை, இந்த நாடு, இந்த மொழி, குடும்பம், பிள்ளைகள், கணவன்,மனைவி, நட்பு, உறவு, என்று ஆயிரம் விஷயம் இருக்கிறது மகிழ்ச்சி கொள்ள. ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அத்தனை நாள் இருக்கிறது கொண்டாட. ஒரு வாழ் நாள் போதாது கொண்டாடி முடிய. 

நாம் கொண்டாடுவது இல்லை. 

இருப்பதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், இல்லாத ஒன்று நாளை கிடைத்து விட்டால் மட்டும்  மகிழ்ச்சி வந்து விடுமா ? 

உங்களிடம் இன்று இருக்கும் பல விஷயங்கள் , ஒரு காலத்தில் நீங்கள் "அது மட்டும்  கிடைத்து விட்டால் அப்புறம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று நினைத்து ஏங்கியவை தான். இப்போது அவை கிடைத்து விட்டன . எங்கே மகிழ்ச்சி ?

இன்று இன்னொரு பட்டியல் இருக்கிறது. 

இந்த சிக்கலில் இருந்து விடுபட்டால், அந்த விஷயம் நடந்து விட்டால் என்று எப்போதும்  ஒரு பட்டியல் இருந்து கொண்டே இருக்கிறது. 

இவை அனைத்தும் நடந்தாலும் மகிழ்ச்சி வரப்போவது இல்லை. 

ஏன் என்றால், மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை. 

இருப்பது போதும் என்று சுணங்கி இருப்பது அல்ல திருப்தி. இருப்பதை கொண்டாடுவது  திருப்தி. 

கொஞ்சம் மெலிந்தால் நல்லா இருக்கும், கொஞ்சம் எடை போட்டால் நல்லா இருக்கும், கொஞ்சம் சிவப்பாக இருந்தால் நல்லா இருக்கும், இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நல்லா இருக்கும்,  பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் படித்தால்  மகிழ்ச்சியாக இருக்கும் என்று இருப்பதை எல்லாம் நீங்கள்  புறம் தள்ளி விடுகிறீர்கள். 

இருப்பது எதுவுமே சரி இல்லை என்று மறுதலிக்கிறீர்கள். எந்நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை. 

என்ன நடந்தாலும் சரி, இன்று மகிழ்ச்சியாக இருக்கப் போவது இல்லை என்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நடந்தால், அப்போது மகிழ்ச்சியாக இருப்பேன் என்று  சொல்லும் போது உங்கள் மகிழ்ச்சி என்றோ ஒரு நாள், எதிர் காலத்தில் இருக்கிறது. இன்று , இப்போது மகிழ்ச்சியாக இருக்கப் போவது  இல்லை என்று முடிவுடன் இருக்கிறீர்கள். 

அதை மாற்ற வேண்டும். 

அது வரும் போது வரட்டும். அல்லது வரமாலேயே போகட்டும். 

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்று முடிவு எடுங்கள். எனக்கு எவ்வளவோ இருக்கிறது  சந்தோஷப்பட. அவற்றைக் கொண்டு நான் இன்று  சந்தோஷமாக இருப்பேன் என்று முடிவு எடுங்கள். 

அது தான் திருப்தி என்று சொல்லுவது. 

எது நடந்தாலும், எது கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி கொள்ளுவது. 

வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருப்பேன் 

பிள்ளை பிறந்தால் சந்தோஷமாக இருப்பேன். 

பிள்ளைகள் நல்லா படித்தால் சந்தோஷமாக இருப்பேன் 

அதுகளுக்கு ஒரு நல்ல வேலை   கிடைத்தால் ...

அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டால் 

அதுகளுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால்  

என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். 

இன்று வாழுங்கள். இது தான் வாழ்க்கை என்று கொண்டாடுங்கள். 

கிடைத்த ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லுங்கள். 

மற்றவர்கள் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். பல  சிக்கல்களுக்கு  அது தான் காரணம். 

இந்த கணத்தில் இருந்து வாழத் தொடங்குங்கள். எல்லாவற்றிற்கும் சந்தோஷப் படுங்கள். 

Tuesday, April 10, 2018

யோக சூத்திரம் - 2.41 - உடல் பற்றிய சிந்தனை

யோக சூத்திரம் - 2.41 - உடல் பற்றிய சிந்தனை  


सत्त्वशुद्धिः सौमनस्यैकाग्र्येन्द्रियजयाअत्मदर्शन योग्यत्वानि च ॥४१॥

sattva-śuddhiḥ saumanasya-ikāgry-endriyajaya-ātmadarśana yogyatvāni ca ॥41॥

sattva = தெளிவு, தூய்மை

śuddhiḥ = சுத்தம்

saumanasya = மகிழ்ச்சி,

ikāgry = ஏகாக்ரிய =  ஒருமித்த சிந்தனை

endriyajaya = இந்திரிய ஜெய = புலன்களை வெல்லுதல்

ātmadarśana = தன்னை அறிதல்

yogyatvāni = யோகி அடைவான்

ca = மேலும்

மனத் தெளிவு பிறக்கும் போது, மனதில் ஒரு துள்ளலான மகிழ்ச்சியும், ஒருமித்த மன நிலையும் (concentration ), புலன்களை வெற்றி கொள்ளுதலும் நிகழும். 

முந்தைய சூத்திரத்தில் நமக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிந்தித்தோம்.

ஒன்று உடலை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அல்லது, இந்த உடல் சரி இல்லை   என்று அதை சரிப்படுத்த ஏதேதோ செய்கிறோம். நமது உடலை நாமே  ஏற்றுக் கொள்ளாத போது , அதை மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? மற்றவர்களை நம்மை வெறுத்து விடுவார்களோ என்று பயப் படுகிறோம். இந்த உடலை மேலும் மெருகு ஏற்ற பாடு படுகிறோம்.

அது ஒரு புறம் இருக்க, நம் உடலை நாம் சரி இல்லை என்று வெறுத்து ஒதுக்கும் போது, இன்னொரு உடலைத் தேடுகிறோம். அதன் பெயர் காதல், அன்பு என்று நாமே   சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் அது ஒரு உடல் சார்ந்த  தேவை. அவ்வளவுதான்.

இப்படி உடலுக்கும் மனதுக்கும் ஒரு இடை விடாத போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

தினமும் ஒரே விதமான உணவை உண்டால், உடம்புக்கு நல்லது. ஆனால், மனம் சலிப்புறும். என்ன , தினமும் ஒரே வகை உணவுதானா என்று.

தினம் தினம் புதுப் புது உணவாக உண்டால், மனம் மகிழ்ச்சி அடையும், உடம்பு ஏற்றுக் கொள்ளாது. வயிற்றுக் கோளாறு வரும்.

இந்த உடம்பு, மனம் இதற்கு இடையில் நடக்கும் போராட்டம் மிகப் பெரிய போராட்டம். பெரும்பாலான சமயம் இதை நாம் அறிவது இல்லை.

எத்தனை விளம்பரப் படங்கள், அழகு சாதனப் பொருள்கள், உடைகள் , அலங்காரங்கள், காதல், ஆண் பெண் உறவு பற்றி எவ்வளவு கதைகள், சினிமா...எல்லாம் இந்த உடல் மற்றும் மனம் பற்றிய சிக்கலின் வெளிப்பாடு.

இந்த சிக்கலைத் தாண்டிச்  செல்ல வேண்டும்.

யோகி, இந்த உடலைத் தாண்டிச்  செல்கிறான்.

தன் உடம்பை மட்டும் அல்ல, இன்னொரு உடம்பின் தேவையையும் தாண்டிச் செல்கிறான்.

தனிமை அவனுக்குச் சுகம்.

தனிமை கண்டதுண்டம்மா , அதில் சாரம் இருக்குதம்மா என்பான் பாரதி.

உலகிலேயே மிக இனிமையானது என்று ஒளவையாரை கேட்டபோது , அவள் சொன்னாள் ,இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று.

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்! 
இனிது இனிது ஏகாந்தம் இனிது; 
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்; 
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்; 
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் 
கனவினும் நனவினும் காண்பது தானே!


இந்த உடலைத் தாண்டிச் செல்லும் போது, மனத் தெளிவு  பிறக்கிறது.அதன் மூலம் துள்ளலான ஒரு  மகிழ்ச்சியும், புலன் அடக்கமும், தன்னை அறிதலும் நிகழும்.

நாம், இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மாறினால் தான் , உண்மையில் நாம் யார் என்று அறிய முடியும். நாம், உடலிலேயே கட்டுண்டு கிடக்கிறோம். ஒன்று நம் உடல் அல்லது பிற உடல்.

நீங்கள் உன்னிப்ப்பாக கவனித்துப் பார்த்தால் தெரியும், மகிழ்ச்சியாக  இருக்கும் போது  உடல் பற்றிய சிந்தனை இருக்காது.

தலைவலி வந்தால்தான் தலை பற்றிய சிந்தனை  வருகிறது. இல்லை என்றால்  தலையைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

வயிற்று வலி வந்தால், அனைத்து சிந்தனையும் வயிற்றின் மேலேயே இருக்கும்.

வயிற்று வலி இல்லை என்றால் , வயிற்றைப் பற்றி சிந்திப்போமா?

வலி வந்தால் உடல் பற்றிய சிந்தனை என்று அர்த்தம்.

மாத்தி யோசிப்போம். உடல் பற்றிய சிந்தனை இல்லை என்றால் வலி இல்லை என்று அர்த்தம்.

உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை.

பெரும்பாலான மனக் குழப்பங்களுக்கு காரணம் உடல் தான்.

தசரத இராஜாவின் முன்னோர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் விதேகன். வி என்றால்  இல்லை என்று அர்த்தம்.

நாயகன் = தலைவன்.

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

விதேகம் என்றால் உடம்பு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல, உடம்பு பற்றிய சிந்தனை  இல்லாதவன். உடலைக் கடந்து சென்றவன். தான் என்பது இந்த உடல் அல்ல என்று அறிந்தவன்.

உடலைத் தாண்டி செல்லும் போது புலன்களை வெற்றி கொள்வது தானே நிகழும்.

புலன்களை வென்றால் நாம் யார் என்று அறிவோம். Self Realization என்று சொல்லுவார்களே அது நிகழும்.

உடம்புகளோடு உள்ள தொடர்பு பற்றி சிந்தியுங்கள். பல உண்மைகள் புலப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/04/241.html



Wednesday, April 4, 2018

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு

யோக சூத்திரம் - 2.40 - உடம்போடு உள்ள தொடர்பு 


शौचात् स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ॥४०॥

śaucāt svāṅga-jugupsā parairasaṁsargaḥ ॥40॥

śaucāt = தூய்மை

svāṅga = தங்கள் உடம்போடு

jugupsā = தூர நின்று, விலகி நின்று,

paraira = மற்றவர்களிடம் இருந்து

asaṁsargaḥ = தொடர்பு இன்றி ॥40॥

தங்கள் உடம்போடும், மற்றவர்கள் உடம்போடும் சேராமல் தள்ளி நிற்பார்கள். 

மற்றவர்கள் உடம்பில் இருந்து தள்ளி நிற்கலாம். அது முடியும். நம் உடம்பை விட்டு நாம் எப்படி தள்ளி நிற்க முடியும் ?

நமக்கு  நம் உடம்போடு உள்ள தொடர்பு எப்படி பட்டது ?

சிலருக்கு தங்கள் உடம்பை ரொம்ப பிடிக்கும். "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்" என்று பெருமிதம் கொள்வார்கள். ஆண்களாக இருந்தால், கண்ணாடி முன் நின்று கையை முறுக்கி "ஹா எப்படி என் தசைகள், 6 பேக் வயிறு " எண்ணி மகிழ்வார்கள். 

சிலருக்கு தங்கள் உடம்பை கண்டாலே பிடிக்காது. முடியை வெட்டுவார்கள்,  டை அடிப்பார்கள்,  பவுடர் பூசுவார்கள், கண் மை , உதட்டுச் சாயம்,  என்று ஏதாவது   செய்து பார்க்க சகிக்கும்படி முயற்சி செய்வார்கள். 

"என்ன செய்தாலும் இந்த தொப்பை குறைய மாட்டேன் என்கிறது" என்று நடையாய் நடப்பார்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அல்ல. வயிறு சுருங்கி  பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று. 

எந்நேரம் பார்த்தாலும்  உடம்பு பற்றிய கவலை. சிலர் அறுவை சிகிச்சை கூட செய்து  கொள்கிறார்கள். வெட்டி, ஒட்டி, ஏதாவது செய்து அழகாக இருக்க வேண்டும்  என்று முயற்சி செய்கிறார்கள். 


சிலருக்கு ஏதாவது  உபாதை இருக்கும். இது மட்டும் இல்லை என்றால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அந்த வியாதியைப் பற்றி சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். 


இன்னும் சிலருக்கு வயதாகிறதே என்ற கவலை.  நரை வரும். தோல் சுருங்கும்.  நினைவு தவறும். அது பற்றிய கவலை. 

பெண்களுக்கு வயதானால், கணவன் தங்கள் மேல் அன்பு காட்ட மாட்டார்களோ என்ற கவலை வரும். 

இப்படி , நம் உடல் நம்ம அலைக்கழிக்கும். நமது சிந்தனையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். 

யோகிகள், தங்கள் உடலைப் பற்றி கவலைப் படமாட்டார்கள். அது வேறு எவருடைய உடலோ என்று தள்ளி நின்று பார்ப்பார்கள். 

அதற்காக உடலை கவனிக்காமல் விட்டு விட மாட்டார்கள். உடல் ஒரு கருவி. அது நன்றாக இயங்கினால் தான் , அதன் மூலம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொள்ள முடியும். 

உடலை பாதுகாப்பது, அதன் மூலம் இன்பம் அனுபவிப்பது என்பது அல்ல குறிக்கோள். உடல் மூலம் உயரிய நிலையை அடைய வேண்டும். 

ஏணி மூலம்  உயரே போவது போல. ஏணியையே பார்த்துக் கொண்டிருந்தால்  மேலே போக முடியுமா ? அதற்காக ஏணியை சரிவர பராமரிக்காமல் இருந்தால் மேலே போக முடியுமா ?

அது போல நம் உடலை நாம் கையாள வேண்டும்.

சரியா ?

Sunday, April 1, 2018

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால்

யோக சூத்திரம் - 2.39 - பற்றற்று இருந்தால் 


अपरिग्रहस्थैर्ये जन्मकथंता संबोधः ॥३९॥

aparigraha-sthairye janma-kathaṁtā saṁbodhaḥ ॥39॥

aparigraha =பற்றற்று

sthairye = உறுதியாக இருந்தால்

janma = பிறவி

kathaṁtā  = காரணம்

saṁbodhaḥ = அறிவு, ஞானம் ॥39॥

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும்.

பற்றற்று இருந்தால் பிறவி பற்றிய ஞானம் பிறக்கும். யாருடைய பிறவி ?

நம் பிறவி மட்டும் அல்ல, அனைத்து பிறவிகளைப் பற்றிய ஞானமும் கிடைக்கும். அது மட்டும் அல்ல, இந்தப் பிறவி, முன் பிறவி, இனி அடுத்து வருவது என்ன என்ற அறிவும் கிட்டும்.

மொத்தமாக சொல்வதானால் இந்த உலகின் மொத்த பிறப்பு, இறப்பு பற்றிய இரகசியம் தெரியும்.

எப்போது என்றால் பற்றறு இருந்தால்.


பற்றறு இருப்பதற்கும் , இந்த ஞானம் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம் ?

இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ?


நாம் எதன் மேல் பற்று கொள்கிறோமோ அதை பாதுகாப்பதில், அதை நம்மோடு வைத்துக் கொள்வதில் , அதற்கு எந்த தீங்கும் வந்து விடாமல் இருக்க கவலைப் பாடுவதில் நம்  வாழ் நாள் எல்லாம் செலவழிந்து விடும். அது போய் விடுமோ என்ற பயம். போய் விட்டால் வருத்தம். துக்கம்.

அது பிள்ளையாக இருக்கலாம், கணவன்/மனைவியாக இருக்கலாம், பணம், அதிகாரம், புகழ், அறிவு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நமது எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் அதை நோக்கியே இருக்கும்.

உதாரணமாக, காலில் ஒரு அடி பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நகம் பிய்ந்து வந்து விட்டது. வலியோடு வலி. மருத்துவரை பார்த்து , மருந்து வைத்து கட்டெல்லாம் போட்டாகி விட்டது. வலி குறைந்தாலும்  முற்றிலுமாக போய் விடவில்லை.

நமது சிந்தனை, நோக்கம் எல்லாம் அந்த வலியின் மேலேயே இருக்கும். வேறு எதிலும் நாட்டம் இருக்காது.

ஒரு தலைவலி வந்தால் அது போகும் வரை, அதே சிந்தனையாக இருக்கும்.

அது போலத்தான் ஒவ்வொரு பற்றும். அவை நம்மை கட்டிப் போடுகின்றன.

பற்று வேறு. ஆசை வேறு. அனுபவிப்பது என்பது வேறு.

ஆசை என்பது இல்லாத ஒன்றின் மேல் வருவது. நமக்கும் அது வேண்டும் என்று விரும்புவது. கப்பலில் போக ஆசை, விமானத்தில் business class இல் போக ஆசை.

நாட்டுப் பற்று. மொழிப் பற்று. இனப் பற்று. பற்று என்பது பற்றிக் கொள்வது. விடாமல் இறுக  பற்றிக் கொள்வது. அதுதான் சிறந்தது என்று நினைப்பது. மற்றவை எல்லாம் துச்சம் என்று நினைப்பது. என் மொழிதான் சிறந்தது. என் மதம் தான்  உயர்ந்தது. என் கடவுள் தான் ஒரே உண்மையான கடவுள் என்று கூறுவது.

பிள்ளைகள் மேல் அன்பு இருக்க வேண்டும். பற்று இருக்கக் கூடாது.

இராமன் கானகம் போனபோது கோசலை இறக்கவில்லை. தசரதன் இறந்தான். இராமன் மேல் கோசலை வைத்தது அன்பு. தசரதன் வைத்தது பற்று.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றற்ற நிலையே பிறப்பை அறுக்கும் என்பார் வள்ளுவர்.

பிற்ப்பு பற்றிய ஞானம் கிடைக்கும் என்கிறார் பதஞ்சலி. ஞானம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் ? மீண்டும் பிறவி வேண்டும் என்று விரும்புவோமா ? அல்லது இந்த பிறவிச் சுழலில் இருந்து மீள வழி தேடுவோமா ? அதை நமது விருப்பத்துக்கு  விட்டு விடுகிறார் பதஞ்சலி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

மெய் பொருள் கண்டவர்கள் , மீண்டும் இங்கு வந்து பிறக்காத வழிகளை கண்டு பிடிப்பார்கள்  என்கிறார் வள்ளுவர்.

கிடைத்தவற்றை அனுபவிக்கலாம். அவற்றின் மேல் பற்று கூடாது.

அது உறவானாலும் சரி. பொருளானாலும் சரி.

பற்று விடும் போது, அறிவு விசாலம் அடையும். என் மதம், என் அறிவு, என் மொழி, என் பிள்ளைகள் என்பதைத் தாண்டி அறிவு நடுப் புள்ளியில் வந்து நிற்கும். சரி தவறு என்பது தெளிவாகத் தெரியும். ஞானத்தின் எல்லை விரியும்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று கால எல்லைகளைத் தாண்டி அது நிற்கும்.

கொஞ்சம் விட்டு விலகி நின்று பாருங்கள். அதன் சுகம் தெரியும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/04/239.html

யோக சூத்திரம் - 2.38 - பிரம்மச்சரியம்

யோக சூத்திரம் - 2.38 - பிரம்மச்சரியம்




ब्रह्मचर्य प्रतिष्ठायां वीर्यलाभः ॥३८॥

brahma-carya pratiṣṭhāyāṁ vīrya-lābhaḥ ॥38॥

brahma-carya = பிரம்மச்சரியம்

pratiṣṭhāyāṁ = நிலை நின்றால்

vīrya = சக்தி

lābhaḥ = இலாபம், அடையலாம் ॥38॥

பிரம்மச்சாரியத்தில் நிலைத்து நின்றால், சக்தியை அடையலாம்.

என்னடா இது ஏதோ சிட்டு குருவி லேகியம் அளவுக்கு வந்து விட்டது. பிரம்மச்சாரியம் , வீரியம், இலாபம் என்று போகிறதே என்று பார்க்கிறீர்களா...பொறுமை.

பிரம்மச்சரியம் என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, சிற்றின்பத்தில் ஈடுபடாமல் இருப்பது என்பது அல்ல அர்த்தம்.

பிரம்மச்சரியம் என்றால் பிரமம் + சாரியம் = பிரம்மத்தின் வழி நடப்பவன், பிரம்மமாக நடை போடுபவன் என்று அர்த்தம். இறைவனை நோக்கிச் செல்பவன், இறைவனாகவே நடை போடுபவன் என்று அர்த்தம்.

பின் எதற்கு வீரியம் இலாபம் என்கிறார் ?

மனிதனின் சக்தியின் கீழ் நிலை பாலுணர்வு சார்ந்தது. அது ஒரு விலங்கினைப் போல  கட்டற்று வெளிப்படுவது. அபரிமிதமான சக்தி ஆனால் அது  அந்த சக்தி வீணாக விரயமாகிப் போகிறது.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.


மின்சாரம் இருக்கிறது. அதை வைத்தது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உருப்படியாக ஏதேனும் செய்யலாம். அல்லது அதை வைத்து ஊரைக் கொளுத்தலாம்.  பிரம்மச்சரியம் என்பது மனிதனின் அந்த அடிப்படை சக்தியை மேல் நோக்கி நகர்த்தி அதன் மூலம் பல அரிய காரியங்களை செய்வது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவானது மூன்று நிலைகளில் நிகழலாம்.

உடல் அளவில் உறவு இருக்கலாம்.

உடலைத் தாண்டி உடலும் மனமும் கலந்த உறவாக இருக்கலாம்.

இன்னும் ஒரு படி மேலே போய் இரண்டும் வேறல்ல, ஒன்று என்ற நிலை ஒன்று இருக்கிறது. அங்கே உறவு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உறவுக்கு இருவர் வேண்டும்.  அங்கே இரண்டும் ஒன்றாகக் கலந்து விடும்.

அர்த்த நாரி என்று கூறுவது அதைத்தான். அதை மறைமுகமாக, இரகசியமாக சொல்லி  வைத்தார்கள்.சிவனும் சக்தியும் ஒன்றென கலந்த நிலை. தெய்வீக நிலை அது.

80 வயதைத் தாண்டிய நாவுக்கரசர், இறைவனே கண்டே தீருவேன் என்று கைலாயம் புறப்பட்டார். இமயமலை அடிவாரம் வந்து  விட்டார். கால்  விட்டது. உடலால்  உருண்டு,கையால் தேய்த்து தேய்த்து செல்கிறார்.

அப்போது அசரீரி சொல்லியது "மனித உடலோடு இறைவனை காண முடியாது. மீண்டு போ" என்று. நாவுக்கரசர் கேட்கவில்லை. பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தார். அப்போது மீண்டும் அசரீரி சொல்லியது, "இங்கே இருக்கும் குளத்தில் மூழ்கி எழு . உமக்கு தரிசனம் தருவோம்" என்றது.

மூழ்கினார். மூழ்கி எழுந்த போது திருவையாறில் இருந்தார். பார்க்கிறார். உலகம் பூராவும் ஆணும் பெண்ணும் சேர்ந்த வடிவில் இருக்கிறது. அது தான் இறை தரிசனம் என்று கூறுகிறார் நாவுக்கரசர்.

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்

என்று சிலிர்க்கிறார். பத்துப் பாடல் பாடி இருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

பிரம்மச்சாரியம் என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அதை அடக்கவும் முடியாது. அந்த உணர்வுகளை, அந்த சக்தியை மேல் நிலைக்கு கொண்டு போவதுதான் பிரம்மச்சரியம்.

காமம் யாருக்கு இல்லை ?

அந்த காமத்தை ஞானம் கொண்டு கையாள வேண்டும். வெறும் அறிவு போதாது.

இராவணன் மிகக்  கற்றவன்.  ஆனால்,காமத்தை வெற்றி கொள்ளும் ஞானம் இல்லை. அழிந்தான்.

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கலாமோ ? என்று கேட்பார் கம்பர்.



சிற்றிடைச் சீதை என்னும்
    நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்றாய் நின்றால்,
    ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ?
    மறக்கலாம் வழி மற்று யாதோ?
கற்றனர் ஞானம் இன்றேல்
    காமத்தைக் கடக்கலாமோ?


ஞானத்தின் துணை கொண்டு , காமத்தை வென்று , வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.


http://yogasutrasimplified.blogspot.com/2018/04/238.html

Tuesday, March 27, 2018

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம்

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம் 



अस्तेयप्रतिष्ठायां सर्वरत्नोपस्थानम् ॥३७॥

asteya-pratiṣṭhāyāṁ sarvaratn-opasthānam ॥37॥


asteya = திருடாமை

pratiṣṭhāyāṁ = நிலையாக நின்றபின்

sarvaratn = சர்வ + ரத்தன் = அனைத்து இரத்தினங்களும் , அனைத்து செல்வங்களும்

opasthānam = உப ஸ்தானம் = கிடைக்கும், இருக்கும். ॥37॥

திருடாமை என்பது நிலை நின்றபின், அனைத்து செல்வங்களும் கிடைக்கும். 

முன்பு இதைப் பற்றி சிந்தித்தோம். செல்வத்தை திருடுவதை விட, கருத்து திருட்டு என்பது எப்படி நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று பார்த்தோம்.

அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

மற்றவர்கள் பொருளை திருட வேண்டும், அவர் அறியாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் ?

திருட வேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வருகிறது ?


முதலில், எனக்கு உள்ளது எனக்குப் போதாது என்ற எண்ணம் திருட்டின் ஆரம்ப விதை.  அங்கிருந்துதான் அது ஆரம்பமாகிறது.

இரண்டாவது, எனக்கு வேண்டியதை என்னால் உழைத்து சம்பாதிக்க முடியாது  என்ற தன்னம்பிக்கை இன்மை. தன் திறமையில், உழைப்பில், அறிவில் நம்பிக்கை இன்மை.

மூன்றாவது, நம்பிக்கை இருந்தாலும் பொறுமை இன்மை. இப்பவே வேண்டும். நாளைக்கே வேண்டும் என்ற அவசரத்தில் திருடச் சொல்கிறது. எப்படியாவது குறுக்கு வழியில்  போயாவது இன்பங்களை அடைய வேண்டும் என்ற  எண்ணம்.

நான்காவது,  மற்றவர்களின் துன்பம் பற்றி கவலைப் படாத மனது. மற்றவர்கள்  பொருளை நாம் அபகரித்துக் கொண்டால் அவர்கள் எவ்வளவு துன்பப் படுவார்கள் என்று நினைக்காத , ஈரமற்ற மனம். கருணை அற்ற உள்ளம்.

திருட்டினால் ஒருவன் தனக்குத் தானே பெரிய தீமைகள் செய்து கொள்கிறான்.

திருடு என்றால் பொருளைத் தான் திருட வேண்டும் என்று இல்லை. மற்றவர் கருத்தைத்  திருடலாம். இன்னும் சொல்லப் போனால் மற்றவர் நிம்மதியை , அமைதியை  திருடலாம். ஒன்று கிடக்க ஒன்றைச் சொல்லி, மற்றவர்களை குழப்பி, அவர்களின் நிம்மதியைத் திருடலாம்.

சில பேர் இருப்பார்கள். எப்போது அவர்களிடம் பேசினாலும் போதும், ஏதாவது சொல்லி நம் நிம்மதியை, அமைதியை குலைத்து விடுவார்கள். நம் சந்தோஷத்தை  அவர்கள் திருடிக் கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.

நான் இதுவரை திருடவே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

இந்த உலகில் அனைத்துமே ஒரு அளவுதான் இருக்கிறது. நாம் , அளவுக்கு அதிகமாக ஒன்றை எடுத்துக் கொண்டால், அது யாருக்கோ போக வேண்டியதை , அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது போலத் தான்.

ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் அரிசி உற்பத்தி ஆகும். உங்களிடம் பணம் இருக்கிறது  என்று அளவுக்கு அதிகமாக வாங்கி, அளவுக்கு அதிகமாக உண்டால், பணம் கொஞ்சமாக உள்ள யாரோ ஒருவர் பசியோடு செல்ல வேண்டி இருக்கும். அவர் உணவை நீங்கள் திருடியதாகவே அர்த்தம்.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணும் யாரும் திருடரே.


உணவு மட்டும் அல்ல. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, ஆடைகள், நகைகள் எல்லாமே திருட்டு தான்.

ரொம்ப பணம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தானம் செய்வது என்பது அந்த குற்ற உணர்வில் இருந்து விடுபடும் ஒரு முயற்சி.


உலகில் இவ்வளவு பேர் வறுமையில் வாடும் போது நான் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேனே என்ற குற்ற உணர்வு.

மற்றவர்களை விடுங்கள். நீங்கள் , உங்களிடம் இருந்து எவ்வளவு திருடுகிறீர்கள் தெரியுமா ?

என்னது ? என்னிடம் இருந்து நானே திருடுகிறேனா ? அது எப்படி முடியும் ?

உங்கள் நேரத்தை, உங்கள் சந்தோஷத்தை, உங்கள் நல்ல அனுபவங்களை, உங்கள் ஆரோக்கியத்தை, உங்கள் ஆயுளை உங்களிடம் இருந்து திருடுவதில் உங்களை விட பெரிய ஆள் யாரும் இல்லை.

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள விரும்புவீர்களா. யாருக்காவது கொடுக்க விரும்புவீர்களா ? மாட்டீர்கள் தானே.

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டு, உடற் பயிற்சி செய்யாமல், உங்கள் ஆரோக்கியத்தை , உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே.

எண்ணெய் பலகாரத்தை, இனிப்பு பலகாரத்தை ஒரு கை பார்த்தது யார் ?

நல்ல பொழுதை எல்லாம், வீணாக அரட்டையிலும், டீ வி யிலும் கழித்தது யார் ?உங்கள் நேரத்தை திருடியது நீங்கள் தான்.

மற்றவர்களைப் பார்த்து பொறாமை பட்டு, உங்கள் நிம்மதியை, உங்கள் சந்தோஷத்தை உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே ?

யோசித்துப் பாருங்கள். உங்களின் பெரிய எதிரி நீங்கள்தான் என்பது புரியும். உங்களின் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம் இவை அனைத்தையும் உங்களிடம் இருந்து பறித்து தூர எறிவது நீங்கள்தான் என்பது புரியும்.

எனவே, திருடாமை நிலையாக நின்றால், அனைத்து செல்வங்களும் உங்களிடம் இருக்கும்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/237.html

Sunday, March 25, 2018

யோக சூத்திரம் - 2.36 - சத்தியமும் செயலும்

யோக சூத்திரம்  - 2.36 - சத்தியமும் செயலும் 



सत्यप्रतिष्थायं क्रियाफलाअश्रयत्वम् ॥३६॥

satya-pratiṣthāyaṁ kriyā-phala-āśrayatvam ॥36॥

satya = சத்தியத்தில்

pratiṣthāyaṁ  =நிலை பெற்று இருந்தால்

kriyā = காரியம், காரியத்தின்

phala = வெளிப்பாடு

āśrayatvam = தானே அமையும்

சத்தியத்தில் நிலை பெற்று இருந்தால், காரியத்தின் வெளிப்பாடு தானே அமையும். 

நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அன்பு,கருணை, உதவும் மனம், அழகை போற்றும் குணம், தயை, நலிந்தவர்களை காக்கும் எண்ணம், உண்மையாக உழைக்கும் எண்ணம்,  என்று எவ்வளவோ நல்ல குணங்கள் உள்ளே இருக்கிறது. இருந்தும் அவை வெளிப்படுவது இல்லை.

ஏன் ?

நல்லவர்களாக இருந்தும், அதை வெளியில் காட்டிக் கொள்ள  முடியவில்லை. காட்டினாலும் , உலகம் நம்ப மறுக்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது.

அது மட்டும் அல்ல,  நீங்கள் யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நிதி நிலை உங்களை தயங்க வைக்கிறது. இப்படி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாமல் போகிறது.

ஏன் ?

இதை எப்படி மாற்றுவது ?

"சத்தியத்தில் நிலை  நின்றால் , காரியங்கள் தானே வெளிப்படும் " என்கிறார் பதஞ்சலி.

சத்தியத்தில் நிலை பெறுதல் என்றால், நிலையாக நிற்க வேண்டும். இங்கொரு காலும், அங்கொரு காலும் இருந்தால் நிலையாக நிற்க முடியாது.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது.

 மனமும் செயலும் ஒன்று பட வேண்டும்.

அது எப்படி முடியும். மனதில் நினைப்பதை எல்லாம்  வெளியே அப்படியே சொல்ல முடியுமா ?

முடியும், எப்போது என்றால் மனதில்  நினைப்பது வெளியில் சொல்லும்படி இருந்தால்.

சத்தியத்தில் நிலை நின்றால் என்பது உண்மை பேசுவது மட்டும் அல்ல. அது ஒரு சிறு பகுதி.

உண்மையாய் இருப்பது. முதலில் நமக்கு நாமே உண்மையாய் இருப்பது. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது. உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது.

அது எப்போதாவது ஒரு முறை அல்ல, "நிலை நிறுத்தல்" , எப்போதும் அப்படி இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், செயல் தானே வெளிப்படும். அந்த செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. அவை உங்கள் மூலம் வெளிப்படும்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், என் குடும்பத்துக்காக செய்கிறேன், என்பதெல்லாம் போய் விடும். நான் வேறு, உலகம் வேறு என்பது மறைந்து , நானும் உலகும் ஒன்றாகி விடும்.

என்னுடைய செயல் மாண்ட வா பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்பார் மணிவாசகர்.



கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

என்னுடைய செயல் என்று ஒன்று இருக்காது.

இது அவன் திரு உரு, இவன் அவன் எனவே என்பார் மணிவாசகர்.

சத்தியத்தில் நிலை நிற்கும் போது தான் என்பது மறையும்.

உள் ஒளி வெளிப்படும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/03/236.html

Saturday, March 24, 2018

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு 



अहिंसाप्रतिष्ठायं तत्सन्निधौ वैरत्याघः ॥३५॥

ahiṁsā-pratiṣṭhāyaṁ tat-sannidhau vairatyāghaḥ ॥35॥

ahiṁsā = அகிம்சை

pratiṣṭhāyaṁ  = நிலை பெறுதல்

tat = அவர்களின்

sannidhau  = சூழ்நிலையில்

vairatyāghaḥ  = வைரா (சண்டை,  எதிர் குணம்) தியாக (விட்டு விலகும்)

இவரிடத்தில் அகிம்சை நிலை பெற்று இருக்கிறதோ, அவர்களை சுற்றி எதிர் குணம் (negative feelings ) இருக்காது.

இந்த உலகம் நம்மை எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டு வந்து நம் தலையில் போடுகிறது.

நாம் ஒன்றுமே செய்யாமல் சிவனே என்று இருப்போம். இருந்தும் இந்த உலகமே நம்மை விடுவது இல்லை.

ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை ?

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ?

பதஞ்சலி சொல்கிறார்.

யார் மனதில் அகிம்சை நிலைத்து நிற்கிறதோ அவர்களை சுற்றி  வெறுப்பும்,சண்டை சச்சரவும் இருக்காது என்கிறார்.

அதற்கும் நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?


மனதில் அகிம்சை இருந்தால் வெளியே வெறுப்பும் சண்டையும் இருக்காது என்கிறார். அது எப்படி ?

என் மனதில் அகிம்சை இருந்தால் வெளியே உள்ள உலகம் எப்படி மாறும்?

உலகம் மாறினால் அல்லவா சண்டை சச்சரவு தீரும்?


இல்லை. அங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

நமக்கு நடக்கும் ஒவ்வொரு துன்பத்திற்கும் நாம் வேறு யாரையோ குறை சொல்கிறோம்.  "அந்தக் காலத்தில் , படிக்கிற காலத்தில் என்னை ஒழுங்காக படிக்க வைத்திருந்தால் " , "நல்ல இடத்தில் கட்டி கொடுத்திருந்தால் " என்று நமக்கு வரும் துன்பங்களை உலகின் மேல் ஏற்றுகிறோம். யாரும் அகப்படவில்லை என்றால்  இருக்கவே இருக்கிறார் கடவுள் அல்லது விதியின் மேல்  பழியைப் போட்டு விடுகிறோம்.

மொத்தத்தில் நாம் நல்லவர்கள். உலகம் தவறு என்று நினைக்கிறோம்.

அனைத்து சிக்கலுக்கும் அதுவே காரணம்.

நாம் நம்மை மாற்றினால் உலகம் மாறும்.

உங்களுக்கு என்ன துன்பம் என்று சிந்தியுங்கள். அதற்கு காரணம் உங்கள் மனம் தான் என்று    புரியும்.

உங்கள் பொறாமை , நீங்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் உங்களை நிம்மதியாக அனுபவிக்க  விடாது. அடுத்தவன் மனைவி அழகு என்று நினைப்பு வந்துவிட்டால், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் போய்  விடும். பக்கத்து வீட்டுக்காரன்  பிள்ளை அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்று நினைத்து விட்டால், பிள்ளை மேல் உள்ள பாசம் போய் விடும்.

உங்கள்  சந்தேகம்,கோபம், பொறாமை, வன்மம், பழி வாங்கும் குணம் போன்றவை இருக்கும் வரை உலகமும் அப்படித்தான் இருக்கும்.

உலகை பழி சொல்லி புண்ணியம் இல்லை.

உங்களை மாற்றுங்கள்

உங்கள் மனதில் அகிம்சை வந்தால், உங்களை சுற்றி வெறுப்பும் கோபமும் மறையும்.

உங்கள் மனதில் அன்பு வந்தால், உங்களைச் சுற்றி சாந்தம் தவழும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவருக்கு நல்லது செய்யச் சொல்கிறார்.

ஏன் ? அவருக்கு திருப்பி கெடுதல் செய்தால் என்ன ?

செய்யலாம். அப்படிச் செய்தால் , அவர் நம் மீது பயம் கொண்டு நம்மிடம் மீண்டும் தவறு செய்ய மாட்டார்.

ஆனால், அந்த பழி வாங்கும் குணம் நமது மனதில் ஊறி விடும். அது ஒரு நஞ்சு.

நாம் அவருக்கு கொஞ்சம் கெடுதல் செய்யலாம். ஆனால், நமக்கு நாமே நிறைய தீமை செய்து கொள்வோம்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்னார் இயேசு பிரான். ஏன், திருப்பி அடிக்க முடியாமல் இல்லை.  அந்த பழி வாங்கும் குணம் இருக்கும் வரை , நமக்கு நிம்மதி கிடையாது.

நம் மனதில் இருக்கும் ஒவ்வொரு கெட்ட குணத்துக்கும், உலகம் பதில் தரும்.

அது ஒரு கண்ணாடி போல. நாம் எப்படி இருக்கிறோமோ, பிம்பமும் அப்படியே இருக்கும்.

உங்களுக்கு அமைதி,  சந்தோஷம், நிம்மதி, அன்பு  வேண்டுமா ?

உங்கள் மனதை பாருங்கள். அதில் உள்ள அழுக்கை கழுவுங்கள். உலகம் தானாக மாறும்.

பிறரை குறை கூறுவதை நிறுத்துங்கள். இந்த உலகம் இப்படி இருக்கக் காரணம் நீங்கள்தான் என்று உணருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/135.html

Wednesday, March 21, 2018

யோக சூத்திரம் - 1.34 - எண்ணங்களும் விளைவுகளும்

யோக சூத்திரம் - 1.34 - எண்ணங்களும் விளைவுகளும் 



वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहाअपूर्वका मृदुमध्य अधिमात्रा दुःखाज्ञानानन्तफला इति प्रतिप्रक्षभावनम् ॥३४॥

vitarkā hiṁsādayaḥ kr̥ta-kārita-anumoditā lobha-krodha-moha-āpūrvakā mr̥du-madhya adhimātrā duḥkha-ajñāna-ananta-phalā iti pratiprakṣa-bhāvanam ॥34॥

vitarkā = சந்தேகம், குழப்பம்

hiṁsādayaḥ = காயப் படுத்தும்

kr̥ta = தீமை செய்பவர்

kārita = செய்ய

anumoditā  = அனுமதிப்பவர்

lobha = பேராசை

krodha = கோபம், வெறுப்பு

moha = மயக்கம், குழப்பம்

pūrvakā = முன்பு, முன்னால் (பூர்வீகம்)

mr̥du = மிருதுவாக, மென்மையாக

madhya = மத்திய, நடுத்தரமாக

adhimātrā = அதிகமாக

duḥkha = துக்கம்

ajñāna = அஞ்ஞானம்

ananta = எல்லையற்ற

phalā = வெளிப்பாடு

iti = இதுவே

pratiprakṣa =எதிர் நிலையான

bhāvanam  = மனோ பாவம் ॥34॥


வன்முறையான எண்ணங்கள் முடிவில்லா துன்பத்தையும் அறிவீனத்தையும் தரும். நீங்கள் செய்பவரா அல்லது செய்யத் தூண்டுபவரா என்பது முக்கியம் அல்ல. அல்லது அந்த வன்மையான எண்ணங்கள் பேராசை, மயக்கம், குழப்பம் போன்றவற்றால் தோன்றியதா அல்லது வேறு எதில் இருந்தும் தோன்றியதா என்பது முக்கியம் அல்ல. அது போல, அந்த எண்ணங்கள் வலிமை குறைந்ததா, வலிமையானதா, அல்லது இரண்டுக்கும் இடைப் பட்டதா என்பதும் முக்கியம் அல்ல. எது எவ்வாறாயினும் ,  நல்லது அல்லாத எண்ணங்களுக்கு மருந்து அதற்கு எதிரான நல்ல எண்ணங்களை கொள்வதுதான்.

இது ஒரு மிக மிக முக்கியமான சூத்திரம்.

கவனமாக வாசியுங்கள். ஒன்றுக்கு பல முறை வாசிக்க வேண்டும்.


முந்தைய சூத்திரத்தில், ஒரு தவறான அல்லது நெகடிவ் எண்ணங்கள் வந்தால் அதை நல்ல அல்லது பாசிட்டிவ் எண்ணங்கள் மூலம் சரி செய்யலாம் என்று பார்த்தோம்.

இங்கே அதை மேலும் விளக்குகிறார்.

எண்ணங்கள் செயலில் முடிகின்றன. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை கொண்டிருக்கிறோமோ, அந்த எண்ணங்கள் அதற்கு உண்டான செயலை , விளைவை உண்டாக்கும். கட்டாயமாக.

நான் முட்டாள், நான் முட்டாள் என்று எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் முட்டாளாகவே ஆகி விடுவோம். சர்வ நிச்சயமாக.

இதில் பதஞ்சலி மிக முக்கியமான ஒன்றை சொல்கிறார்.

அந்த எண்ணங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டாலும் சரி அல்லது மற்றவர்கள் உங்களுக்குள் ஏற்றி விட்டாலும் சரி, விளைவு ஒன்றுதான்.

கெட்ட எண்ணங்கள், தீய எண்ணங்கள், தவறான எண்ணங்கள், நன்மை தராத எண்ணங்கள் அவை கொஞ்சமாக, நடுத்தரமாக அல்லது அதிகமாக எப்படி இருந்தாலும் அதற்கேற்ப தீமை பயக்கும்.


எனவே, அவற்றை அடியோடு உடனே அழித்து ஒழிக்க வேண்டும்.

அதற்கு முந்தைய சூத்திரத்தில் கூறிய எதிர் மனோ பாவம் உதவும்.

எனவே,

எப்போதும் உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்.

பொறாமை, பயம், கோபம், வெறுப்பு, எரிச்சல், துவேஷம், சலிப்பு, சோம்பல், நம்பிக்கை இன்மை, தன்னம்பிக்கை இன்மை , சந்தேகம் என்று இது போன்ற தவறான எண்ணங்கள் இருந்தால் உடனே அதற்கு எதிர் மறையான எண்ணங்களை கொண்டு வாருங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களை எடை போடுங்கள். அவர்கள் உங்களுக்குள் விதைக்கும்  எண்ணங்களை பற்றி சிந்தியுங்கள். இதில் சிக்கல் என்ன என்றால் உங்களுக்கு மிக மிக அருகில் உள்ளவர்கள் உங்களுக்குள் விதைக்கும் எண்ணங்கள் உங்களுக்கு சட்டென்று விளங்காது.

பெற்றோர், கணவன், மனைவி, சகோதர சகோதரிகள் இவர்கள் உங்களை பற்றி உங்களிடம் சொல்லும் எண்ணங்கள் மிக இயல்பாக உங்களுக்குள் சென்று படிந்து விடும். கவனமாக இருங்கள். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று மனைவி கணவனைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது வேண்டுமானால் மிக இயல்பாக இருக்கலாம். ஆனால், அந்த நஞ்சு நாளடைவில் அவன் பல தவறுகள் செய்ய இடம் கொடுத்து விடும். ஒன்றும் தெரியாததால் தவறு செய்து விடுவான். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்காது. நன்றாகத்தானே உழைக்கிறேன் எனக்கு ஏன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று கணவன் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பான்.  காரணம் அவனுக்குள் விதைக்கப் பட்ட நஞ்சு "உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது "என்று அடிக்கடி சொல்லப்பட்டது.

உங்கள் நன்பர்கள், அலுவலக அதிகாரிகள், உறவினர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர், மாமனார், நாத்தனார், அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள்  என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். இதில் யார் யார் உங்களுக்குள் நல்ல எண்ணங்களை விதைக்கிறார்கள், யார் யார் நல்லது  அல்லாத  எண்ணங்களை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.

அடுத்தது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றவர்களுக்கு. நீங்கள் மற்றவர்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்தால் அது உங்களுக்குள்ளும் இருக்கும். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று சொல்லும் மனைவி தனக்குள்ளும் அந்த எண்ணங்களை விதைத்துக் கொள்ளுகிறாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை மறைக்க மற்றவர்களிடம் ஒன்றும் இல்லை. நான் அவர்களை விட மோசம் இல்லை என்று தனக்குத் தானே உறுதி செய்து கொள்ளும் உத்தி.

நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம், கணவன்/மனைவியிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் என்ன மாதிரி எண்ணங்களை விதைக்கிறீர்கள் என்று கவனியுங்கள். நீங்கள் விதைத்தாலும் , உங்களுக்குள் விதைக்கப்பட்டாலும் விளைவு ஒன்று தான்.

அடுத்தது, நீங்கள் வாழும் இடம் மற்றும் அதன் சூழ்நிலை. நன்றாக உங்கள் மனதை கவனித்துப் பாருங்கள். ஒரு கோவிலுக்குப் போகிறீர்கள். உள்ளே நுழைந்தவுடன் உங்கள் மனதில் ஒரு மெல்லிய மாற்றம் நிகழ்வதை கவனித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொண்டால் அந்த மெல்லிய மன மாற்றங்களை உங்களால் அறிய முடியும். "அந்த கோவிலுக்கு போய் விட்டு வந்தால் , ஏதோ ஒரு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது " என்று சொல்ல கேட்டு இருக்கிறீர்களா ? ஏன் அப்படி ? கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.  அவர்களின் எண்ணங்கள் உங்களை பாதிக்கும். ஒரு எதிர்பார்ப்போடு, ஒரு நம்பிக்கையோடு பலர் அங்கே வருவதால், அவர்களின் நம்பிக்கை எண்ணங்கள் உங்களையும் பாதிக்கும், உங்களுக்குள்ளும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும்.

மாறாக ஒரு மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள்.  உங்கள் மன நிலை வேறு மாதிரி மாறும்.

நீங்கள் வாழும் இடம், பணி புரியும் இடம், நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் மனதை பாதிக்கும். சினிமா கொட்டகை, உணவு விடுதி இங்கெல்லாம் மக்கள் தங்கள் எண்ணங்களை விட்டுச் செல்கிறார்கள். உங்களை அறியாமலேயே அவை உங்களுக்குள் செல்லும்.

எனவே தான், நாம் வாழும் இடம், நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் அடிக்கடி போகும் இடம் இவற்றை பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவை என்றால் மாற்றவும் வேண்டும்.

உங்கள் கணவரோ மனைவியோ உங்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் சொல்லித் திருத்துங்கள்.

முடியவில்லையா, அவர்கள் சொல்வதற்கு எதிர் மனோ பாவத்தை கொண்டு வாருங்கள்.

உலகை நம்மால் திருத்த முடியாது. எனவே நாம் எப்படி நம்மை சரி செய்து கொள்ளலாம் என்று பதஞ்சலி சொல்லித் தருகிறார்.

எண்ணங்களை கவனியுங்கள்.

அவை வாழ்க்கையை உண்டாக்குபவை.

தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.

நலமே அடைய வாழ்த்துக்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/134.html

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம்

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம் 


वितर्कबाधने प्रतिप्रक्षभावनम् ॥३३॥

vitarka-bādhane pratiprakṣa-bhāvanam ॥33॥

vitarka  = சந்தேகம்

bādhane = செயல்படும் போது

pratiprakṣa  = எதிர்பதம்

bhāvanam = பாவனை  ॥33॥

செயல்படும்போது சந்தேகம் வந்தால் அதற்கு எதிர்பதத்தை பாவிக்க வேண்டும்.

இதுக்கு சமஸ்கிரதமே பரவாயில்லை போல் தெரிகிறதா?

பொறுமை...பொறுமை.

உடலுக்கு நோய் வருவது போல மனதுக்கும் நோய் வரும். கோபம், தாபம், தயக்கம், பட படப்பு (anxiety ), பயம், மன அழுத்தம் (depression ), பொறாமை , என்று எவ்வளவோ மனம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும். அவற்றை எவ்வாறு சரி செய்வது ?

உடலுக்கு ஒரு சிக்கல் என்றால், அதை சரி செய்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. உடம்பு அந்த சிக்கலை தானே சரி செய்து கொள்ளும். முடியாத நேரங்களில் நாம் சில மருந்துகளை தந்து அதை குணப் படுத்தலாம்.

உதாரணமாக, நாள் பட்ட உணவை உண்டால், வாந்தி பேதி என்று வந்து உடம்பு அந்த கெட்ட உணவை வெளியே தள்ளி விடும்.

காயம் பட்டு, இரத்தம் கசிந்தால், தானே இரத்தம் உறைந்து மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்கும்.


மனதுக்கு அப்படி ஒரு வழி இல்லை. சிக்கல் வந்தால், அதை தானே சரி செய்து கொள்ளத் தெரியாது.

நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்று பதஞ்சலி சொல்கிறார்.

உங்களுக்கு எந்த விதமான மன சிக்கல் இருக்கிறதோ அதற்கு எதிரான மன நிலையை பாவித்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக,

ஒருவர் மேல் உங்களுக்கு அளவு கடந்த கோபம். ஏனோ தெரியவில்லை, அவரைப் பார்த்தாலே பத்திக் கொண்டு வருகிறது. அனால், அவர் உங்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். அவரை தவிர்க்கவும் முடியாது.

என்ன செய்யலாம் ?

கோபத்திற்கு எதிர் நிலை, அன்பு, கருணை. அவர் மேல் அன்பு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. மனதில் அன்பை வரவழைத்துக் கொள்ளுங்கள். கோபம் போய் விடும். அன்பு என்ற பாவனை கொள்ளுங்கள். மனம் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் நிலையில் இருக்க முடியாது.

அன்பு இருந்தால் , கோபம் இருக்காது. கோபம் இருந்தால் அன்பு இருக்காது.

மனம் சோர்வாக இருக்கிறதா (depression )? மிக மிக உற்சாகமாக இருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சுறு சுறுப்பாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள். உடனே நீங்கள் எழுந்து ஓட வேண்டாம். சுறு சுறுப்பாக இருந்தால் மனம் எப்படி பர பரப்பாக இருக்குமோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். சோர்வு பறந்து விடும்.

பயமாக இருக்கிறதா? மிக மிக தைரியமாக இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். தைரியம் வருகிறதோ இல்லையோ, பயம் போய் விடும்.

தயக்கம் இருக்கிறதா? உறுதியாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம் எப்படி இருக்கிறதோ, அதையே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால், அந்த மன நிலையே மேலும் உறுதிப்படும்.

வாழ்வில் எதைப் பார்த்தாலும் பயமாக இருந்தால், எல்லோரிடமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். மாறாக, "பயமா, எனக்கா, எனக்கு எதை கண்டும் பயம் இல்லை ..." என்று சொல்லுங்கள். நாளடைவில் பயம் உங்களை விட்டு விட்டுப் போய் விடும்.

பல மாணவர்களுக்கு கணக்கை கண்டால் காலனை கண்டதைப் போல பயம். எனக்கு கணக்கு வராது, கணக்கு டீச்சர் சரி இல்லை, கணக்கு புத்தகம் சரி இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். அப்படி சொல்லிக் கொண்டிருந்தால் கட்டாயம் கணக்கு வராது.

மாறாக, 'கணக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். கடினம் என்றாலும் அதில் ஒரு த்ரில் இருக்கு. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ , நான் கணக்கு போட்டு பார்ப்பேன் " என்று சொல்ல வேண்டும்.

எனக்கு வயதாகி விட்டது. நின்னா உக்கார முடியல, உக்காந்தா நிக்க முடியலை என்று ஒரு நோயாளி போல சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.

வயதான காலத்திலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அது தான், எதிர் வினை.

மனம் போல மாங்கல்யம் என்று சொல்லுவார்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கும். உலகுக்கு அல்ல, நமக்கு.

எனவே, எப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டும் மனதில் வையுங்கள்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை விட்டு தூர விலகி நில்லுங்கள்.

நல்லவர்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். மனதை உயர்ந்த சிந்தனைகளால் நிறையுங்கள்.

வாழ்வு சிறப்பாக இருக்கும்.

இருக்கட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/133.html




Tuesday, March 20, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 5

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 5



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

தூய்மை, சந்தோஷம், தவம் , தன்னை அறிவது   பற்றி சிந்தித்தோம். 

கடைசியாக சரணாகதி. ஈஸ்வர ப்ரணிதானி.

ஈஸ்வரன் என்று இங்கே குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட கடவுளை அல்ல. சிவா, விஷ்ணு, அல்லா, இயேசு என்று எந்த ஒரு கடவுளையும் குறித்து அல்ல.

சரணாகதி என்றால் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது. வாழ்வோடு சண்டை போடுவது கிடையாது. எது வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது. 

அப்படி என்றால், ஒரு முயற்சியும் வேண்டாமா ? துன்பம் வந்தால் அதை எதிர்த்து போராட வேண்டாமா ? நோய் வந்தால் அதற்கு வைத்தியம் பார்க்காமல் அந்த நோயையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அது என்ன பைத்தியகாரத் தனமாக இருக்கிறதே என்று கேள்வி எழலாம். 

அது அல்ல அர்த்தம். 

எது நடந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து மேலும் எப்படி வாழ்க்கையை மேம்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். 

சில உதாரணங்கள் தர முடியும். 

யேசுதாஸ் ஒரு பெரிய பாடகர். பல பட்டங்கள், பெருமைகள் கொண்டவர். அவர் குரலுக்கு மயங்காதவரே கிடையாது. 

அவர், திருவனந்தபுரம் வானொலியில் அறிவிப்பாளராக சேர விண்ணப்பம் செய்தார்.  அவர் குரலை கேட்டுவிட்டு, அது நன்றாக இல்லை என்று சொல்லி அவருக்கு அந்த வேலை தரவில்லை. 

நல்ல அரசாங்க உத்யோகம் போய் விட்டது. என்ன செய்வது. கையில் காலணா இல்லை. வேலையும் இல்லை. 

தோல்வி  தானே ?  வருத்தம் தானே?

அந்த வருத்தத்தோடு, வண்டி ஏறி சென்னை வந்தார். கர்நாடக சங்கீதம் பயின்றார். உலகப் புகழ் பெற்றார். 

ஒரு வேளை அவர் அந்த அறிவிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால்? 

வாழ்க்கையில் எது  வந்தாலும்,அதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் நல்லதிற்கே என்று ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். 

வேண்டத் தக்கது அறிவோய் நீ 
வேண்ட முழுவதும் தருவோய் நீ 

என்பார் மணிவாசகர். எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும் என்று வாழ்வை நடத்திச் செல்வது. 

வாழ்வோடு போராட்டம் இல்லை. வாழ்வோடு சுமுககமாகப் போவது. 

எப்படி இருந்தாலும் வாழ்விலே தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது.

மிக மிக அருமையான, இது வரை யாரும் சொல்லாது வழியைச் சொல்கிறார் பதஞ்சலி. 

கோபம், வருத்தம், சோகம், தனிமை, மன அழுத்தம் என்று வரும் போது என்ன செய்ய வேண்டும் ? அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்று இது வரை யாரும் சொல்லாத ஒன்றை சொல்கிறார். 

அது என்ன ?

http://yogasutrasimplified.blogspot.com/2018/03/132-5.html