Saturday, December 23, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 

மிக மிக முக்கியனமான சூத்திரம்.

இன்பம் வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப் படுகிறார்கள். பலப் பல காரியங்கள் செய்கிறார்கள். இருந்தும் யாரும் இன்பமாய் இருப்பதாய் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவன், திருமணம் செய்து கொண்டால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

திருமணம் செய்து கொண்டவன், திருமணம் செய்யாமல் இருந்தால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

என்ன செய்தாலும், துன்பம் மட்டுமே மிஞ்சுகிறது. ஏன் ?

பணம் உள்ளவனும் துன்பப் படுகிறான், பணம் இல்லாதவனும் துன்பப் படுகிறான்.

பிள்ளை இல்லாதவனும் வருந்துகிறான், பிள்ளை உள்ளவனும் வருந்துகிறான்.

குழந்தையாக இருக்கும் போதும் துன்பம். வயதான காலத்திலும் துன்பம்.

வாழ்க்கை என்பது துன்பம் மட்டுமே நிறைந்ததாய் இருக்கிறது. இடை இடையிடையில் இன்பம் தலை காட்டி விட்டுப் போகிறது. இன்பத்தை நிரந்தரமாய் பிடித்து வைக்க முடிவதில்லை.

ஏன் ?

இதைப் பற்றி யோசித்து இருக்கிறோமா ?

பதஞ்சலி யோசித்து இருக்கிறார்.

துன்பத்திற்கு காரணம் என்ன என்று மட்டும் அல்ல. அவற்றை எப்படி போக்குவது என்றும் யோசித்து இருக்கிறார். வழியும் சொல்லித் தருகிறார்.

முக்கியமான சூத்திரம். ஆழமான பொருள் கொண்டது.

மொத்தத்தையும் ஒன்றாக எழுதினால் படிக்கும் போது விட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பகுதி பகுதியாக பிரித்து சிந்திக்கலாம்.

என்ன, சரிதானே ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-1.html

No comments:

Post a Comment