Monday, July 31, 2017

யோக சூத்திரம் - 1.27 - அதன் பெயர் பிரணவம் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.27 - அதன் பெயர் பிரணவம் - பாகம் 2


तस्य वाचकः प्रणवः ॥२७॥

tasya vācakaḥ praṇavaḥ ॥27॥

tasya = அதன்

vācakaḥ = வாசக = வாசகம்

praṇavaḥ = பிரணவம்

பிரணவம் என்ற ஓம் தான் அந்த ஈஸ்வரனின் வாசகம்.

ஓம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த ஓம் சிறப்பித்து கூறப் படுகிறது.

அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது ?

அது ஒரு வார்த்தை - அவ்வளவுதானே. மற்ற வார்த்தைகளுக்கும் அதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது ? இப்படி கொண்டாடுகிறார்களே அதை. அப்படி என்னதான் இருக்கிறது ?

அதைப் பற்றி அறிந்து கொள்ளுமுன் மொழி, ஒலி , பொருள், சொல் இவற்றைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

உலகில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன. எவ்வளவோ மனிதர்கள் , விலங்குகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது அல்லவா ?

அம்மா,  ,அப்பா, டீவி , காபி, புத்தகம், நாய், கொசு, மேஜை , நாற்காலி என்று  ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.

சரியா ? 

ஒரு பெயர் இருக்கிறந்து என்றால் அதற்கு ஒரு பொருள் இருக்கிறது என்று அர்த்தம். பொருள் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் என்று அல்ல. அந்த பெயர் சுட்டும் ஒரு பொருள், வஸ்து , thing இருக்கும் அல்லவா.

ஒரு பொருளுக்கு பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் அந்த பொருளுக்கு  ஒரு பெயர் இருக்கும்.

பெற்ற பெண்ணை  தமிழில் அம்மா என்கிறோம், ஆங்கிலத்தில் mother என்கிறோம், ஹிந்தியில் மாதாஜி என்கிறோம், மலையாளத்தில் அம்மே என்று சொல்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் (இங்கே பொருள் என்பது  உயிர் உள்ளது, உயிர் இல்லாதது அனைத்தையும் சேர்த்தது) ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் ஒலி வடிவம் மாறலாம்.

சரி, இதுவரை பொருளுக்கும், சொல்லுக்கும் உள்ள தொடர்பை சிந்தித்தோம்.

அடுத்தது, சொல்லுக்கும் , நினைவுக்கும் உள்ள தொடர்பை சிந்திப்போம்.

ஒரு சொல் வெளியில் வர வேண்டும் என்றால், முதலில் அது மனதில் அல்லது புத்தியில் தோன்ற வேண்டும்.

அம்மாவைப் பார்த்தவுடன் அது அம்மா என்று தோன்றுகிறது. பின் , அம்மா என்ற சொல் மனதில் உதிக்கிறது. பின் அந்த சொல் ஒலி வடிவம் பெறுகிறது.

எண்ணங்களுக்கும், சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பு இது.

நம்மிடம் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

அந்த ஆயிரம் எண்ணங்களில் , ஒரு எண்ணம் சொல்லாக வெளிப்பட்டு ஒரு பொருளை குறிக்கிறது.

அது அப்படியே இருக்கட்டும். பின்னால் வருவோம்.

இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் பின்னால் ஒரு படைப்பாற்றல் இருக்கிறது என்று  கண்டோம். அதை ஈஸ்வர சக்தி என்று  குறிப்பிட்டோம்.

அந்த சக்திக்கு ஒரு பெயர் வேண்டும்.

அந்த பெயர் , அந்த சக்தியின் , அந்த படைப்பாற்றலை குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். இயற்கையான சொல்லாக இருக்க வேண்டும்.

எனவே, ஓம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஏன் ஓம் ? ஏன் வேறு ஏதாவது ஒரு சொல்லை தெரிவு செய்து இருக்கலாமே ?

ஓம் என்ற சொல்லின் சப்தம் மூன்று சப்தங்களை உள்ளடக்கியது.



ம்

என்ற மூன்று எழுத்தின் தொகுப்பு ஓம்.

இந்த மூன்று எழுத்தையும் வேகமாக கூறினால் ஓம் என்ற  வரும்.

சரி, வந்து விட்டு போகட்டும், அதனால் என்ன சிறப்பு ? ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு பிரிவு இருக்கலாம். ஓம் என்ற ஒலிக்கு இந்த பிரிவு. அதனால் ஒரு சிறப்பு வந்து விடுமா என்ன ?


இரண்டு விஷயங்கள்:

ஒன்று இயற்கை.

இரண்டு தொழிற் பெயர்.

இந்த படைப்பாற்றல் என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நாம் அதோடுதான் பிறக்கிறோம்.

அதை இந்த சொல் நினைவு படுத்துகிறது.

எப்படி ?

சும்மா வாயை திறவுங்கள் . அ என்ற சப்தம் இயல்பாக வரும். அப்படி வந்த சப்தத்தை நீண்ட நேரம் நிறுத்த முடியாது. அ என்று சொல்லும் போது  மூச்சு வெளியே போகும். சட்டென்று நின்று போகும்.

அதை இயல்பாக நிறுத்த வேண்டும் என்றால்  குவியுங்கள்.

தானாக அந்த அ என்ற சப்தம் உ என்று ஆகும்.

அதை முடிக்க வேண்டும் என்றால் குவித்த வாயை மூடுங்கள். ம் என்று முடிந்து விடும்.

இதை விட இயல்பான ஒரு சப்தத்தை  உருவாக்க முடியுமா ?

சரி, ஓம் என்பது இயல்பான சப்தம்.

இது ஏதோ கேட்பதற்கு சாதரணமாகத் தெரிகிறது.

மற்ற கடவுளர்களின் பெயர்களை சொல்லிப் பாருங்கள்...ஏதாவது எளிமையாக இருக்கிறதா ?

அடுத்தது, பெயர்கள் இரண்டு வகைப்படும்.

ஒன்று இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

அதற்கும், இந்த ஓம் என்ற பிரணவ மந்திரத்தத்துக்கும் என்ன சம்பந்தம் ?

சிந்திப்போம்


------------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------------------------------------

ஓம் என்ற சொல் காரணப் பெயர். 

அது என்ன காரணம் ?


நமக்குள்ளே இருக்கும் படைப்பாற்றத்தான் ஈஸ்வரன் என்று பார்த்தோம். 

அந்த படைப்பாற்றல் என்ன செய்யும் ?

முதலில் படைக்கும் , பின் படைத்தவற்றை காக்கும், வேண்டாத அல்லது காலாவதியான படைப்புகளை அழிக்கும். 


அழிப்பது எப்படி படைப்பாகும் ?

அதுவும் படைப்புதான். அழிக்காமல் படைக்க முடியாது. ஒன்றை அழிக்காமல் இன்னொன்றை படைக்க முடியாது. நாம் எதை படைக்க வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தி நாம் உண்ணும் உணவில் இருக்கிறது. அந்த உணவை உண்டு, ஜீரணம் செய்து, அதில் இருந்து பெற்ற சக்தியால் நாம் படைப்பை செய்கிறோம். 

மலையை உடைத்து, அதில் இருந்து கல் எடுத்து சிலை செய்கிறோம். 

இப்படி அழிப்பதும் , படைப்பதும் சேர்ந்தே நிகழ்கிறது. 

இந்த படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை மூன்று கடவுள்கள் செய்வதாக கூறுகிறார்கள். அந்த மூன்று கடவுளும் ஒன்றுதான். அந்த ஈஸ்வர சாந்நித்தியம் நமக்குள் சுடர் விட்டு  கொண்டு இருக்கிறது. 

இந்த மூன்றும் ஒரு சக்திதான் என்றால் , அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும் அல்லவா ? ஒரு பொருள் என்று இருந்தால், அதற்கு ஒரு பெயர் வேண்டும் அல்லவா ?

அதன் பெயர் பிரணவம் என்ற ஓம்.

அது எப்படி ?


அ என்று சொல்லும் போது சொல் பிறக்கிறது. 

உ என்று சொல்லும் போது அது நிலைக்கிறது. அ என்ற சப்தத்தை நீண்ட நேரம் சொல்ல முடியாது. மூச்சு காற்று வேகமாக வெளியேறி விடும். உ என்று சொல்லும் போது நீட்டி சொல்லலாம். சொல்லிப் பாருங்கள். 

ம் என்று சொல்லும் போது அது அந்த சப்தம் முடிகிறது. 

இப்படி, தோற்றம், நிலைப்பு, முடிவு என்ற மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு வார்த்தையில் சொல்வது என்றால்  அது ஓம் என்ற ஒரு வார்த்தை தான். 

ஓம் என்ற பிரணவம் இயல்பான சப்தம். 

ஓம் என்ற பிரணவம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் கூறும் ஒரு சொல். 

மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவோம்.

அம்மா என்று சொன்னால், உங்களுக்கு உங்கள் தாயின் நினைப்பு வரும் அல்லவா. லட்டு என்று சொன்னால் லட்டின் ஞாபகம் வருகிறது அல்லவா ?

சொல், அது குறிக்கும் பொருளை நமக்கு நினைவுக்கு கொண்டு வரும்.

அது மட்டும் அல்ல, அந்த பொருள் சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும்.

லட்டு என்றால், நாக்கில் எச்சில் ஊறும்.

காதலியின் பெயரைச் சொன்னால், காதலன் முகம் மலரும்.

எனவே, ஒரு சொல் அது குறிக்கும் பொருளையும், அது சம்பந்தமான உணர்வுகளையும் கொண்டு வரும்.

ஓம் என்ற சொல், நமக்குள் இருக்கும் அந்த மாபெரும் படைப்பாற்றலை குறிக்கிறது. நாம் அந்த சக்தியை உணர வேண்டும்.

மனிதன் உன்னதமானவன். உயர்ந்தவன். படைப்பின் உச்சக்கட்டம் மனிதன்.

தன்னைத் தான் அறியாததால் கீழே விழுந்து விட்டவன். தன் திறமை, ஆற்றல் தெரியாமல் தவிப்பவன்.

அவனை கை தூக்கி விட்டு, அவனுடைய திறமையை , ஆற்றலை அவனுக்கு நினைவு படுத்துவது இந்த ஓம் என்ற ஒற்றைச் சொல்.

சரி, அந்த சொல் நமக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலை குறிப்பதாக இருக்கட்டும்.

அதை எப்படி வெளியே கொண்டு வருவது ?

அடுத்த சூத்திரம் அதை விளக்குகிறது.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/127-2.html

யோக சூத்திரம் - 1.27 - அதன் பெயர் பிரணவம்

யோக சூத்திரம் - 1.27 - அதன் பெயர் பிரணவம் 


तस्य वाचकः प्रणवः ॥२७॥

tasya vācakaḥ praṇavaḥ ॥27॥

tasya = அதன்

vācakaḥ = வாசக = வாசகம்

praṇavaḥ = பிரணவம்

பிரணவம் என்ற ஓம் தான் அந்த ஈஸ்வரனின் வாசகம்.

ஓம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த ஓம் சிறப்பித்து கூறப் படுகிறது.

அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது ?

அது ஒரு வார்த்தை - அவ்வளவுதானே. மற்ற வார்த்தைகளுக்கும் அதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது ? இப்படி கொண்டாடுகிறார்களே அதை. அப்படி என்னதான் இருக்கிறது ?

அதைப் பற்றி அறிந்து கொள்ளுமுன் மொழி, ஒலி , பொருள், சொல் இவற்றைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

உலகில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன. எவ்வளவோ மனிதர்கள் , விலங்குகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது அல்லவா ?

அம்மா,  ,அப்பா, டீவி , காபி, புத்தகம், நாய், கொசு, மேஜை , நாற்காலி என்று  ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.

சரியா ?

ஒரு பெயர் இருக்கிறந்து என்றால் அதற்கு ஒரு பொருள் இருக்கிறது என்று அர்த்தம். பொருள் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் என்று அல்ல. அந்த பெயர் சுட்டும் ஒரு பொருள், வஸ்து , thing இருக்கும் அல்லவா.

ஒரு பொருளுக்கு பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் அந்த பொருளுக்கு  ஒரு பெயர் இருக்கும்.

பெற்ற பெண்ணை  தமிழில் அம்மா என்கிறோம், ஆங்கிலத்தில் mother என்கிறோம், ஹிந்தியில் மாதாஜி என்கிறோம், மலையாளத்தில் அம்மே என்று சொல்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் (இங்கே பொருள் என்பது  உயிர் உள்ளது, உயிர் இல்லாதது அனைத்தையும் சேர்த்தது) ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் ஒலி வடிவம் மாறலாம்.

சரி, இதுவரை பொருளுக்கும், சொல்லுக்கும் உள்ள தொடர்பை சிந்தித்தோம்.

அடுத்தது, சொல்லுக்கும் , நினைவுக்கும் உள்ள தொடர்பை சிந்திப்போம்.

ஒரு சொல் வெளியில் வர வேண்டும் என்றால், முதலில் அது மனதில் அல்லது புத்தியில் தோன்ற வேண்டும்.

அம்மாவைப் பார்த்தவுடன் அது அம்மா என்று தோன்றுகிறது. பின் , அம்மா என்ற சொல் மனதில் உதிக்கிறது. பின் அந்த சொல் ஒலி வடிவம் பெறுகிறது.

எண்ணங்களுக்கும், சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பு இது.

நம்மிடம் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

அந்த ஆயிரம் எண்ணங்களில் , ஒரு எண்ணம் சொல்லாக வெளிப்பட்டு ஒரு பொருளை குறிக்கிறது.

அது அப்படியே இருக்கட்டும். பின்னால் வருவோம்.

இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் பின்னால் ஒரு படைப்பாற்றல் இருக்கிறது என்று  கண்டோம். அதை ஈஸ்வர சக்தி என்று  குறிப்பிட்டோம்.

அந்த சக்திக்கு ஒரு பெயர் வேண்டும்.

அந்த பெயர் , அந்த சக்தியின் , அந்த படைப்பாற்றலை குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். இயற்கையான சொல்லாக இருக்க வேண்டும்.

எனவே, ஓம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஏன் ஓம் ? ஏன் வேறு ஏதாவது ஒரு சொல்லை தெரிவு செய்து இருக்கலாமே ?

ஓம் என்ற சொல்லின் சப்தம் மூன்று சப்தங்களை உள்ளடக்கியது.



ம்

என்ற மூன்று எழுத்தின் தொகுப்பு ஓம்.

இந்த மூன்று எழுத்தையும் வேகமாக கூறினால் ஓம் என்ற  வரும்.

சரி, வந்து விட்டு போகட்டும், அதனால் என்ன சிறப்பு ? ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு பிரிவு இருக்கலாம். ஓம் என்ற ஒலிக்கு இந்த பிரிவு. அதனால் ஒரு சிறப்பு வந்து விடுமா என்ன ?


இரண்டு விஷயங்கள்:

ஒன்று இயற்கை.

இரண்டு தொழிற் பெயர்.

இந்த படைப்பாற்றல் என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நாம் அதோடுதான் பிறக்கிறோம்.

அதை இந்த சொல் நினைவு படுத்துகிறது.

எப்படி ?

சும்மா வாயை திறவுங்கள் . அ என்ற சப்தம் இயல்பாக வரும். அப்படி வந்த சப்தத்தை நீண்ட நேரம் நிறுத்த முடியாது. அ என்று சொல்லும் போது  மூச்சு வெளியே போகும். சட்டென்று நின்று போகும்.

அதை இயல்பாக நிறுத்த வேண்டும் என்றால்  குவியுங்கள்.

தானாக அந்த அ என்ற சப்தம் உ என்று ஆகும்.

அதை முடிக்க வேண்டும் என்றால் குவித்த வாயை மூடுங்கள். ம் என்று முடிந்து விடும்.

இதை விட இயல்பான ஒரு சப்தத்தை  உருவாக்க முடியுமா ?

சரி, ஓம் என்பது இயல்பான சப்தம்.

இது ஏதோ கேட்பதற்கு சாதரணமாகத் தெரிகிறது.

மற்ற கடவுளர்களின் பெயர்களை சொல்லிப் பாருங்கள்...ஏதாவது எளிமையாக இருக்கிறதா ?

அடுத்தது, பெயர்கள் இரண்டு வகைப்படும்.

ஒன்று இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

அதற்கும், இந்த ஓம் என்ற பிரணவ மந்திரத்தத்துக்கும் என்ன சம்பந்தம் ?

சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/127.html

Friday, July 28, 2017

யோக சூத்திரம் - 1.26 - முதல் ஆசிரியன்

யோக சூத்திரம் - 1.26 - முதல் ஆசிரியன் 



स एष पूर्वेषामपिगुरुः कालेनानवच्छेदात् ॥२६॥

sa eṣa pūrveṣām-api-guruḥ kālena-anavacchedāt ॥26॥

sa = ச = அவன், அது

eṣa = ஏச = அவன்

pūrveṣām = பூர்வேஸம் = பழைய, ஆதி, தொன்மையான

api = மேலும்

guruḥ = குரு = ஆசிரியன், ஆச்சாரியன்

kālena = காலேன = காலத்தால்

anavacchedāt = அனவச்சேதத் = முடிவில்லாத, மாற்றம் இல்லாத

அந்த ஈஸ்வரனே , ஆதி ஆசிரியன். மாற்றம் இல்லாத, முடிவில்லாத தொன்மையான ஆசிரியன். 

நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் தான் ஈஸ்வர சக்தி என்று பார்த்தோம். அந்த படைப்பாற்றல் அளவில்லாதது என்றும் பார்த்தோம். நமக்குள் இருக்கும் அந்த சின்ன படைப்பாற்றலுக்கும் , ஞானத்துக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும்  வேறுபாடு இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்றும் பார்த்தோம்.

அந்த ஞானத்தைப் பற்றி மேலும் இங்கே கூறுகிறார்.

நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை எப்படி வெளியே கொண்டு வருவது ?

வீடுகளில் ஆழ் துளை கிணறு தோண்டி அதில் ஒரு பம்பு செட் வைத்து நீர் ஏற்றுவதை பார்த்து இருக்கிறீர்களா ? உங்கள் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஆழ் துளை கிணறு (borewell ) போட்டு இருப்பார்கள். இரண்டு மூணு நாள் தலை வேதனையாக இருக்கும். ஒரே சத்தம், தூசி என்று அமர்க்களப் படும்.

தோண்டிய பின், குழாயை சொருகுவார்கள். 100 அடி , 300 அடி , 500 அடி என்று நீர் இருக்கும் நிலையைப் பொறுத்து அதன் ஆழம் இருக்கும். பின் அந்த குழாயின் முடிவில் ஒரு நீர் இறைக்கும் மோட்டாரை மாட்டுவார்கள்.

பின் ?

மின் swtich ஐ போட்டால் தண்ணி வராது.

முதலில் அந்த குழாய்க்குள் நீரை ஊற்ற வேண்டும். வெளியில் இருந்து உள்ளே செலுத்த வேண்டும். அந்த குழாய் முழுவதும் நிறைந்த பின், மோட்டாரை  சுற்ற விட்டால் முதலில் நாம் ஊற்றிய தண்ணி வரும். பின் நிலத்தடி நீர் வரும்.

அது போல

நமக்குள் இருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் , முதலில் கொஞ்சம் உள்ளே செலுத்த வேண்டும். உள்ளே போனது , முதலில் வெளியே வரும். பின், உள்ளே உள்ளதை வெளியே கொண்டு வரும்.

அந்த ஆதி ஞானம் உள்ளே உறைந்து கிடக்கிறது.

அது தான் ஆதி குரு. ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர். முதல் ஆசிரியர்.

ஆனால், அந்த ஞானத்தை வெளிக் கொண்டு வர, ஒரு தூண்டுதல் வேண்டும்.

ஆழ் குழாய் கிணற்றை பார்காதவர்களுக்கு இது புரியாது.

வீட்டில் அன்றாடம் நடக்கும் ஒரு உதாரணம் பார்ப்போம்.

வீட்டில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு அல்லது ஏதாவது எண்ணெய் திரி போட்டு ஏற்றும் விளக்கு இருக்கும். அதில் திரியில் தீபம் ஏற்றியவுடன் நின்று எரியாது. ஏற்றிய தீ குச்சியால், பெண் மணிகள், அந்தத் திரியை கொஞ்சம் தூண்டி விடுவார்கள். அல்லது விரலால் சற்று தூண்டி விடுவார்கள்.

எண்ணெய் இருக்கிறது. திரி இருக்கிறது. தீபம் இருக்கிறது. இருந்தும் அது சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும் என்றால் ஒரு தூண்டு கோல் வேண்டும்.

தூண்டி விட்டால் நின்று எரியும்.

அது போல, நாம் இருக்கிறோம், நமக்குள் ஞானம் இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர ஒரு குரு வேண்டும், ஆசிரியன், ஆசாரியன் வேண்டும்.

திரி தன்னைத் தானே தூண்டிக் கொள்ள முடியாது.

ஆசாரியன் இருந்தால் மட்டும் போதாது. அவன் சொல்படி பயிற்சியும் செய்ய வேண்டும்.

ஆசாரியன் என்பது ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்று இல்லை.

இந்த வடிவில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

ஞானத்தை தேடுபவனை தேடி ஆசாரியன் வருவான் என்பது நம்பிக்கை.

கோவில் கட்ட போன மாணிக்க வாசகரைத் தேடி சிவன் வந்தான். வந்த சிவனை ஆச்சாரியனாக அறியவில்லை மணிவாசகர். தவற விட்டு விட்டு வாழ் நாள் எல்லாம் புலம்பினார். அந்த புலம்பல் தான் திருவாசகம்.

கல்வி வேறு. அறிவு வேறு.

கல்வி எனபது வெளியில் இருந்து உள்ளே செல்வது.

அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.

அதனால் தான் கல்விக்கு ஒரு அதிகாரம், அறிவுடைமைக்கு ஒரு அதிகாரம் வைத்தார் வள்ளுவர்.

அந்த ஆதி ஞானத்தை வெளிக் கொணர பதஞ்சலியின் யோக சூத்திரம் வழி காட்டுகிறது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/126.html

Thursday, July 27, 2017

யோக சூத்திரம் - 1.25 - அனைத்து அறிவும் உங்களுக்குள்

யோக சூத்திரம் - 1.25 - அனைத்து அறிவும் உங்களுக்குள் 



तत्र निरतिशयं सर्वज्ञबीजम् ॥२५॥

tatra niratiśayaṁ sarvajña-bījam ॥25॥

Ishavara is unmatched and is the source of all knowledge. ||25||

முந்திய பிளாகில் ஈஸ்வரனின் தன்மை பற்றி சிந்தித்தோம்.  மனக் கிலேசங்களால் அந்த படைப்பு சக்தியானது பாதிக்கப் படுவது இல்லை என்று கண்டோம்.

இந்த பிளாகில் பதஞ்சலி ஒரு மிகப் பெரிய உண்மையை சொல்கிறார்.


அதற்கு முன்னால் ஒரு சின்ன கதை.

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன், அந்த ஊரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்து வந்தான். வேறு எங்கும் போக மாட்டான். அந்த மரத்தடிதான் அவன் இருப்பிடம். அங்கேயே படுத்து தூங்குவான். அவன் சாமான்கள் , கோணிப்பை எல்லாம் அந்த மரத்தின் அடியில் வைத்து இருப்பான்.

கொஞ்ச நாளில் அவன் வயதாகி இறந்து போனான். ஊர் மக்கள் கூடி, அவன் பல காலம் இருந்த அந்த மரத்தின் அடியிலேயே அவனை புதைத்து , ஒரு சின்ன சமாதி ஒன்று கட்டலாம் என்று முடிவு செய்தார்கள். புதைக்க குழி தோண்டிய போது , அந்தக் குழியில் ஒரு குடம் கிடைத்தது. அந்த குடம் நிறைய  பொற் காசுகள் இருந்தது.

பெரிய புதையலின் மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் முழுவதும் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.

வெளியே நீட்டிய கையை கீழே நீட்டியிருந்தால் பத்து தலைமுறைக்கு வாழ புதையல் கிடைத்திருக்கும்.

அவன் அறியாமை புதையலின் மேல் அமர்ந்து கொண்டு பிச்சை எடுக்க வைத்தது.

அது போல, நமக்குள் இருக்கும் அறிவின், ஞானத்தின் ஆற்றலை நாம் அறியாமல் இருக்கிறோம் என்கிறார் பதஞ்சலி.

அளவற்ற ஞானம்  நமக்குள் குவிந்து கிடக்கிறது. அதை நாம் அறியாமல் ஞானத்தை நாம் வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம்.


tatra = தத்ர = அங்கே (அந்த ஈஸ்வரனுள் )
nir = நிர் = இல்லை
atiśayam = அதிசயம் = அதிசயம் என்றால் சமஸ்கிருதத்தில் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம்.
nir-atiśayam = நிர் அதிசயம் = தனக்கு நிகரில்லாத, தனக்கு மேல் ஒன்றும் இல்லாத
sarvajña = சர்வ ஞான = அனைத்து ஞானங்களும் , அனைத்து அறிவும்
bījam = பீஜம் = விதையாக இருக்கிறது

நமக்குள் இருக்கும் அந்த படைப்பாற்றலில் , அத்தனை அறிவின் மூலமும் அங்கேதான் இருக்கிறது.

இதை எப்படி நம்புவது ? நமக்குள் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லையே.

நாம் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டோம் இதுவரை.

அனைத்து ஞானங்களின் மூலம் அந்த படைப்பாற்றலில் பொதிந்து கிடக்கிறது என்றால் நம்ப முடியவில்லையே.

பொறுமையாக சிந்திப்போம்.

ஒரு பெரிய இசை அமைப்பாளர் , ஒரு அருமையான இசையை அமைக்கிறார். அந்த இசை எங்கிருந்து வந்தது. அவருக்குள் ஏதோ ஒன்று தோன்றுகிறது. இப்படி செய்தால் என்ன என்று செய்து பார்க்கிறார். அது நன்றாக இருக்கிறது.

அவரிடம் போய் , உலகத் தரம் வாய்ந்த இசை அமைப்பது என்று கேட்டுப் பாருங்கள். முழிப்பார். "அது அந்த நேரத்தில தோணும்...அது படி அமைக்கிறேன் " என்பார்.


எத்தனையோ அறிவியல் உண்மைகள், ஓவியங்கள், சிற்பங்கள் , காவியங்கள், பாடல்கள், இசை, கணித கோட்பாடுகள், உயிரியல் சித்தாந்தங்கள் எல்லாம் ஏதோ மனிதனின் சிந்தனையில் உதித்தது தானே ?

அந்த மனிதனுக்கும் உங்களுக்கும் அடைப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை.

அதே மூளை, இரண்டு கண், இரண்டு காது, கை கால்கள் எல்லாம் ஒன்றுதான்.

அவரால் முடிவது உங்களால் ஏன் முடியாது ?

அந்த கேள்வி அப்படியே இருக்கட்டும்.

ஒரு இசை அமைப்பாளாரால் சிற்பம் செதுக்க முடியாது. படைப்பாற்றல் இருக்கும் என்றால் எல்லாம் செய்ய வேண்டியது தானே ?

பதஞ்சலி கூறுகிறார் "அனைத்து ஞானங்களின் மூலம் " அந்த படைப்பாற்றலில் இருக்கிறது என்று.

ஒவ்வொருவர் , ஒவ்வொரு மாதிரி அந்த ஆற்றலை வெளிக் கொணர்கிறார்கள்.

சிலர் இசையாக, சிலர் பாடலாக, சிலர் நடனமாக என்று.

அளவிட முடியாத ஞானம் உங்களுக்குள் புதைந்து  கிடைக்கிறது.

"நீங்கள் சொல்வது சரி மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும், எனக்குள் அப்படி ஒன்று இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லையே ...எனக்குத் தெரிந்தது எல்லாம் ஏதோ இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம் என்று சில பல தகவல்கள், கொஞ்சம் அனுபவம்...எல்லாம் சேர்த்து கொஞ்சம் அறிவு அவ்வளவுதான் ...இதில் அளவற்ற ஞானம் எங்கிருந்து வந்தது ...புரியலையே...கொஞ்சம் புரியும்படி விளக்க முடியுமா " என்று பதஞ்சலியிடம் கேட்டால் அவர் இப்படி விளக்கம் தருவார்......

ஒரு காகிதத்தில் ஒரு புள்ளியை வையுங்கள். அந்த புள்ளியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

அது ஒரு சின்ன புள்ளி. கறுப்பாக இருக்கிறது.

அந்த சின்ன புள்ளி இருக்க வேண்டும் என்றால், அது ஒரு பெரிய காகிதத்தில் இருக்க  வேண்டும் என்று புரிகிறது அல்லவா ?

உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் , ஒரு ஊரின் பெயரைச் சொல்வீர்கள் அல்லவா ?

அது ஒரு சின்ன ஊர்தான். ஆனால் அந்த ஊர் , ஒரு நாட்டில் இருக்கிறது, அந்த நாடு இந்த பூமியில் இருக்கிறது, இந்த பூமி சூரிய குடும்பத்தில் இருக்கிறது, அது இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று புரிகிறது அல்லவா ?


அதே போல கால அளவை எடுத்துக் கொண்டாலும், ஒரு வினாடி என்பது ஒரு நிமிடத்துள் அடக்கம், ஒரு நிமிடம் என்பது மணிக்குள் அடக்கம்...மணி நாளில் அடக்கம், நாள் வாரத்தில், மாதத்தில், வருடத்தில், யுகத்தில் என்று விரிந்து கொண்டே போகிறது அல்லவா.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது. எந்த ஒரு சிறிய ஒன்றும் ஒரு மிகப் பெரிய ஒன்றின் கூறு என்று நம்மால் சிந்திக்க முடியும்.

சரி, அடுத்த நிலையில் சிந்திப்போம்.

உங்கள் ஊரும், இந்த பிரபஞ்சமும் தனித்தனியாக இருக்கிறதா ? நிமிடமும் , மணியும், நாளும் தனித்தனியாக இருக்கிறதா ?

இல்லை. இரண்டும் ஒன்றுதான்.

மிகப் பெரிய பிரபஞ்சத்தில் ஒரு பகுதி உங்கள் ஊர்.


அது போல, அளவற்ற ஞானத்தில் ஒரு புள்ளி உங்கள் தற்போதைய ஞானம். அந்த புள்ளி  , அந்த அளவற்ற ஞானத்தில் இருந்து பிரிந்து வந்தது அல்ல. இரண்டுமே பிரிக்க முடியாதது. காகிதமும் புள்ளியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. காகிதத்தில் இருந்து புள்ளியை தனியே பிரித்து எடுக்க முடியாது.

அளவற்ற ஞானத்தில் இருந்து உங்கள் சிற்றறிவை பிரிக்க முடியாது. சிற்றறிவும் , பேரறிவும் ஒன்றுதான். அவற்றை பிரிக்க முடியாது. நாம் புள்ளியை மட்டும் பார்க்கிறோம். காகிதத்தை பார்ப்பது இல்லை.

பேரறிவு உங்களுக்குள் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா ?

அதை எப்படி அடைவது என்று பின்னால் சொல்லித் தருகிறார் பதஞ்சலி.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/125.html

Wednesday, July 26, 2017

யோக சூத்திரம் - 1.24 - ஈஸ்வரத்தன்மை

யோக சூத்திரம் - 1.24 - ஈஸ்வரத்தன்மை 



क्लेश कर्म विपाकाअशयैःअपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ॥२४॥

kleśa karma vipāka-āśayaiḥ-aparāmr̥ṣṭaḥ puruṣa-viśeṣa īśvaraḥ ॥24॥

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைக்கும் ஆற்றல் தான் ஈஸ்வரன் என்று சிந்தித்தோம். அந்த படைக்கும் ஆற்றல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படம் வரைவது, இசை அமைப்பது, சிற்பம் செதுக்குவது என்று மட்டும் அல்ல....சமைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, குளியல் அறையில் பாடுவது, வண்டி ஓட்டுவது, பேசுவது ...எல்லாமே படைப்புதான். தாய் பாடும் தாலாட்டும் ஒரு படைப்புதான். பாத்திரம் கழுவுவதும் ஒரு படைப்புதான். உள்ளிருந்து ஏதோ தூண்டுவதால் தானே எந்த செயலும் எழுகிறது. அந்த தூண்டும் சக்தியே ஈஸ்வரன்.

அந்த ஈஸ்வர சக்திக்கு செய்யும் செயல்களை அர்ப்பணித்து விடுவது சமாதி அடைய இன்னொரு வழி என்றும் சிந்தித்தோம்.

சரி, அப்படியே சமர்ப்பித்தால், நாம் செய்யும் செயல்களின் விளைவுகள், தன்மைகள், நல்லது கெட்டது அந்த ஈஸ்வர சக்தியை பற்றாதா ? அது நமது சித்தத்தில் சலனங்களை தோற்றுவிக்காதா என்ற கேள்வி எழும் அல்லவா ?

அந்த கேள்விக்கு இங்கே பதில் தருகிறார்.


kleśa =  கிலேசம் = தடைகள், துன்பங்கள், அவற்றிற்கான காரணங்கள்
karma = கர்மா = கர்ம வினைகள்
vipāka = விபக = வினைப் பயன்கள்
āśayaiḥ = அசைய = வினையில் இருந்து எழும் எண்ணங்கள். வினை முடிந்த பின் எழும் ஆசைகள், அது பற்றிய எண்ணங்கள்
aparāmr̥ṣṭaḥ = அபரம்ரிஸ்த = அவற்றால் எந்த பாதிப்பும் இல்லாமல்
puruṣa = புருஷா = அந்த அனுபவங்களை ஏற்பவன்
viśeṣa = விசேஷ = சிறப்பான, தனியான
īśvaraḥ = ஈஸ்வரா = ஈஸ்வரன்


ஒன்றை நாம் அடைய விரும்பும் போது , சில தடைகள் வரும். அந்தத் தடைகள் சின்னதாக இருக்கலாம் அல்லது பெரியதாக இருக்கலாம். அந்தத் தடைகளை வென்று எடுத்தால்தான் நாம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

தடைகளோடு போராடும்போது பல அனுபவங்கள் நமக்கு நிகழ்கின்றன.

நாம் விரும்பியதை அடைகிறோமோ இல்லையோ, அதை அடையும் முயற்சியில் நாம் ஈடுபடும்போது பல காரியங்களை செய்கிறோம். அந்த காரியங்களுக்கு , வினைகளுக்கு பலன் இருக்கும். விரும்பியதை அடைவது மட்டும்தான் வினைப் பயன் இல்லை. வினை செய்யும் போது உண்டாகும் அனுபவமும், வினைப் பயந்தான்.

செய்யும் முயற்சியின் அளவு, யார் நமக்கு உதவி செய்தார்கள், யார் நமக்கு எதிராக நின்றார்கள், யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது, நம் திறமையின் அளவு என்ன என்றெல்லாம் நாம் அறிய முடியும். இவையும் வினைப் பயன் தான்.

இந்த வினை பயனில் இருந்து நமது எதிர்கால சிந்தனை மற்றும் செயல்கள் அமைகின்றன.

அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம். எப்படி செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது, யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று அறிந்து அதன் படி நமது எதிர்கால திட்டங்களை அமைக்கிறோம்.

ஒவ்வொரு வினையும் நம் எதிர் காலத்தை தீர்மானிக்கின்றன. கர்ம வினை.


கர்ம வினை என்பதை பாவ புண்ணியம் என்று பார்க்காமல் இப்படி பார்த்தால் என்ன ?  கர்மங்கள் அனுபவங்களை உண்டாக்குகின்றன. அனுபவங்கள் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.

அது மட்டும் அல்ல, ஒரு ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு அது முடிந்து விடுவது இல்லை.

அந்த ஆசையில் இருந்து இன்னொரு ஆசை முளைக்கிறது. மீண்டும் அது வேண்டும் என்று மனம் நினைக்கிறது. அதை விட மேலும் வேண்டும் என்று நினைக்கிறது.

இப்படி ஆசைகள், வினைகள், அனுபவங்கள், அதில் இருந்து எழும் எதிர்கால வாழ்வின் விதை என்று வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுத்தி சுத்தி வருகிறது.

இந்த சூழலில் இருந்து எப்படி விடுபடுவது ?

செயலின் பலன்களை ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்து விட வேண்டும்.

செயல் ஈஸ்வர சக்தியில் இருந்து விளைந்தது. அந்த செயலின் பலன்கள் அந்த ஈஸ்வர சக்திக்கே என்று அர்ப்பணித்து விட வேண்டும்.

அப்படி செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.

நாம் ஒரு பெரிய படைப்பாற்றலின் ஒரு கூறு என்று அறிவோம். நாம் நம்மை தனிமை படுத்திக் கொள்வதால்தான் இத்தனை போராட்டம். ஆற்றின் நீரோடு செல்லும் போது மிக எளிதாக இருக்கும். எதிர் நீச்சல் போடும் போது தளர்ந்து போகிறோம். வாழ்க்கை போராட்டமாகத் தெரிகிறது. நாம் ஆற்று வெள்ளத்தில் ஒரு துளி என்று அறிந்து கொண்டால் போராட்டம் இல்லை.

அப்படி செய்யும் போது அந்த ஆசை , கர்மா, வினை, வினைப் பயன், வினையின் விளைவுகள் நம்மை பாதிக்காது என்று யோக சூத்திரம் சொல்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/124.html

Tuesday, July 25, 2017

யோக சூத்திரம் - 1.23 - எல்லாம் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் -பாகம் 2

யோக சூத்திரம் - 1.23 - எல்லாம் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் -பாகம் 2

ईश्वरप्रणिधानाद्वा ॥२३॥

īśvara-praṇidhānād-vā ॥23॥

நான் முன்பே கூறியது போல, வார்தைகளை நிதானமாக சிந்திக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அர்த்தம் தான் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ள கூடாது.

உதாரணமாக, "அவன் கிட்ட எந்த திருக்குறளை கேட்டாலும் அசால்டாக சொல்லி விடுவான் " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

அசால்ட் என்றால் ஆங்கிலத்தில் சண்டை, அடி தடி என்று அர்த்தம். நமது மனதில் அசால்ட் என்றால் எளிதாக என்று அர்த்தம் படிந்து இருக்கிறது.

எனவே, நாம் நினைத்துக் கொண்டு இருப்பது தான் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

சரி, இப்போது சூத்திரத்தை பார்ப்போம்.

நீங்கள் ஒரு புதிய ஊருக்குப் போய் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் ஏதோ ஒரு இடத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள ஒருவரிடம் எப்படி , நீங்கள் போக வேண்டிய இடத்தை சொல்லி , அங்கு எப்படி போவது என்று கேட்கிறீர்கள்.

அதற்கு அவர், "அந்த இடமா, அதுக்கு நீங்க இப்படி போகலாம் , அப்படியும் போகலாம் " என்று வழி சொல்கிறார். நீங்கள் அவரை கொஞ்சம் குழப்பமாக பார்க்கிறீர்கள். புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.

அவர் உங்கள் குழம்பிய முகத்தை பார்த்துவிட்டு, "இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் இல்லேனா ஒண்ணு செய்யுங்க ...."

என்று மூன்றாவது ஒரு வழியை சொல்லத் தொடங்குகிறார்.

அந்த "இல்லேனா " என்பதற்கு பின்னால், சில விஷயகள் இருக்கிறது.

ஒன்று, அவர் நீங்கள் ஊருக்குப் புதியவர், சொன்ன வழி ஒன்றும் உங்களுக்கு புரியவில்லை என்று அவர் புரிந்து கொண்டார்.

இரண்டாவது, முதலில் சொன்ன வழிகளை விட, சுருக்கமான , எளிமையான வழி ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைத்து , புதிதான ஒன்றை சொல்ல நினைக்கிறார்.

மூன்றாவது, நீங்களும் , முதலில் சொன்ன வழிகள் எல்லாம் சிக்கல் போல இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு எளிய வழியை சொல்லப் போகிறார் என்று ஆவலோடு கேட்கத் ஆர்வமாய் இருப்பீர்கள் அல்லவா.

அது போல,

சித்த வ்ருத்தி நிரோதம் பற்றி பல வழிகளை சொல்லி வந்தார் பதஞ்சலி.

அதெல்லாம் ரொம்ப கஷ்டமான வழி போல தோன்றும். அது மட்டும் அல்ல, நீண்ட நாள் பயிற்சி செய்ய வேண்டும் போல இருக்கும். அப்படியே செய்தாலும், சரியாக செய்கிறோமா என்று தெரியாது. கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் செய்ய வேண்டும். நடக்குமா என்ற சந்தேகம் வரும் அல்லவா.

எனவே, "அப்படியில்லேனா ஒண்ணு பண்ணுங்க " என்று இந்த ஸ்லோகத்தில் ஒரு மிக மிக  எளிமையான வழியை சொல்கிறார்.

அது என்ன வழி ?

īśvara-praṇidhānād-vā

"வ" என்றால் அல்லது (or  என்று ஆங்கிலத்தில் சொல்வோமே ) என்று அர்த்தம்.

நீங்கள் முன்பு கூறிய எல்லாம் செய்யுங்கள். "அல்லது" என்று இன்னொரு புது வழியை சொல்கிறார்.

அது

"īśvara-praṇidhānād" = ஈச்வர ஈஸ்வர ப்ரநிதானத்

என்ற வழி.

அது என்ன வழி ?

ப்ரநிதானத் என்றால் ஒரு அர்பணிப்பு (டெடிகேஷன்), பக்தி (devotion ) என்று அர்த்தம்.

ஈஸ்வர என்றால் உருவாக்கும் சக்தி. ஈஸ்வரன் என்றால் ஏதோ ஒரு கடவுள், பனி மலையில், பாற்கடலில் இருக்கும் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

வீட்டில் , பொதுவாக, பெண்கள் சமையல் செய்வார்கள். செய்து முடித்த பின் நாம் அந்த உணவை பார்க்கிறோம்.

அந்த உணவு தயாராவது முன்னால் எப்படி இருந்தது ? வாணலியில் வரு பட்டு, வேக வைக்கப் பட்டு, தாளிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது.

அதற்கு முன்னால் ?

கழுவப்பட்டு, நறுக்கப் பட்டு, சுத்தம் செய்யப் பட்டுக் கொண்டு இருந்தது.

அதற்கு முன்னால் ?

இன்னைக்கு என்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்று அந்த பெண் மனதில் சிந்தித்துப் பார்த்து இருப்பாள் அல்லவா ?

அந்த சிந்தனை, அந்த படைக்கும் ஆற்றல், அது தான் ஈஸ்வரன்.

அது புத்தகம் எழுதும் ஆசிரியராகட்டும், இசை அமைக்கும் இசை அமைப்பாளராகட்டும், புது சித்தாந்தங்களை படைக்கும் அறிவியல் அறிஞர் ஆகட்டும் , சமைக்கும் ஒரு சமையல் ஆளாக இருக்கட்டும் யாராக இருந்தாலும், ஒன்றை செய்வதற்கு முன்னால் அதை செய்யும் சிந்தனை, ஆற்றல் இருக்கிறது அல்லவா ? அந்த ஆற்றல் மற்றும் படைப்புத் திறன் தான் ஈஸ்வரன் என்று அழைக்கப் படுகிறது.

அந்த ஈஸ்வரனுக்கு , அந்த திறனுக்கு, அர்ப்பணம் செய் என்கிறார்.

இது என்ன புது கதையாக இருக்கிறது.

எனக்கு நானே அர்ப்பணம் செய்து கொண்டால் , அது எப்படி என் சித்த சலனங்களை போக்கும் ?

புரியலையே ......

மேலும் சிந்திப்போம்.

--------------------------------------------- பாகம் 2 -------------------------------------------------------------

எதற்காக அர்பணம் செய்ய வேண்டும் ? நாம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் செய்கிறோம், பின் அதை ஏன் அர்ப்பணம் செய்ய வேண்டும் ?

மிக உன்னிப்பாக கவனித்தால் ஒன்று புரியும்.

நாம் காரியம் செய்யும் போது , "நான்" இதைச் செய்கிறேன் , இதன் பலன் "எனக்கு" கிடைக்க வேண்டும் என்று நினைத்து செய்யும் போது , "நான்" என்ற அகந்தையே மேலோங்கி நிற்கும்.

"நான்" என்ற அந்த உணர்வு கெடுதலா ? ஈகோ என்று சொல்வார்களே அது கெடுதலா ? அது எப்படி கெட்ட ஒன்றாக இருக்க முடியும் ? நான் நல்லவன் தானே. பின் எப்படி நான் என்ற அந்த உணர்வு, அந்த படிவம் தவறென்று சொல்ல முடியும் ?

அது தவறல்ல. ஆனால் தடை.

எதற்குத் தடை ?

உண்மையை கண்டறிய , நான் என்ற அந்த ஒன்று தடையாக நிற்கும்.

எப்படி ?

நான் என்பது என்ன ? எனக்கு சொல்லப் பட்ட அறிவுரைகள், நான் படித்த புத்தகங்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரும் எனக்குள் திணித்த செய்திகளின் தொகுப்பே நான்.

இவை எல்லாம் சரி என்று சொல்ல முடியாது. நான் வேறு நாட்டில், வேறு மாதத்தில் , வேறு குடும்பத்தில் பிறந்திருந்தால் நான் வேறொன்றாக இருப்பேன்.

அப்படியென்றால், இந்த கும்பல் எனக்குள் இருந்து கொண்டு, என்னை ஆட்டுவிக்கின்றன.

நான் உலகை அறிவது, அதனோடு தொடர்பு கொள்வது, அதில் இருந்து வரும் உணர்வுகள் மற்றும் செய்திகளுக்கு உள்ளாகி , பாதிக்கப்பட்டு செயல் படுவது என்பது எந்த கும்பல்களின் தொகுப்பால்.

உண்மையான நான் யார் என்று அறிய இவை ஒரு தடை. இது ஒரு கண்ணாடி மாதிரி. சிலருக்கு சிவப்பு கண்ணாடி, சிலருக்கு பச்சை கண்ணாடி. இந்த கண்ணாடி மூலம் பார்ப்பதன் மூலம் நாம் உலகை சிவப்பாகவோ, பச்சையாகவோ காண்கிறோம். உண்மையான உலகை காண வேண்டும் என்றால், கண்ணாடியை தூக்கிப் போட்டு விட வேண்டும்.

எனவே, நான் என்பது உண்மையின் தன்மையை அறிய ஒரு பெரிய தடை.

எனவே , இந்த நான் என்ற உணர்வை விட வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

பதஞ்சலி சொன்ன மாதிரி அபிப்யாசம், விதர்க்கம், விசாரம் என்று செய்யும் போது என்ன ஆகிறது ?

நான் செய்கிறேன், நான் மிதமாக/மத்யமாக/கடினமாக பயிற்சி செய்கிறேன். நான் குறிக்கோளை அடைவேன்.

இப்படி, எவ்வளவுக்கெவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்களவு "நான்" என்ற இந்த உணர்வு வலுப் பெறுகிறது.

நான் பத்து வருடம் விடாமல் யோகா செய்கிறேன் என்று கூறும்போது நான் என்ற அந்த உணர்வு மிக வலுப்பெற்று விளங்குகிறது.

இந்த நான் என்பது உண்மையை அடைய தடை.

பயிற்சி செய்தால் நான் என்பது வலுப்பெறுகிறது.

அப்ப என்ன தான் செய்வது ?

எனவே, பதஞ்சலி சொல்கிறார், "நான் செய்கிறேன் , என் முயற்சி, என் வலிமை  என்று நினைக்காதே."

செய்வன எல்லாம் அந்த ஈஸ்வர சக்தியின் வெளிப்பாடு என்று நினைத்து, நல்லதோ கெட்டதோ எல்லாம் அந்த சக்தியையே சாரும் என்று விட்டு விடு. அதற்கே அர்ப்பணித்து விடு.

யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும்,

செயல் தெரியும்.
செயலுக்கு முந்தைய சித்தனை தெரியும்
அந்த சிந்தனையை தூண்டியது யார் ? அந்த சிந்தனையை வழி நடத்தியது யார் ?

அந்த படைக்கும் சக்தியின் வெளிப்பாடுதான் அத்தனையும்.

நாத விந்து கலாதி நமோ நாம என்பார் அருணகிரிதாந்தர்.

நாதம் என்பது சப்தம் - நமக்கு கேட்கிறது.

விந்து என்பது சப்தம் வெளியே வரும்முன் பாடகனின் மனதில், குரலில் ஏற்படும் மாற்றங்கள்.

அதற்கு முன்னால் என்ன நிகழ்கிறது ?

நமக்குத் தெரியாது.

அதுதான் "கலை "

அந்த சக்தியின் வெளிப்பாடுதான் அனைத்தும்.

நாம் ஒரு கருவி. அவ்வளவுதான். நம் மூலம் அது வெளிப்படுகிறது.

இசை வீணையில் இருந்து வரவில்லை. வீணையின் மூலம் வருகிறது.

இசை வீணையை மீட்டும் விரலில் இருந்து வரவில்லை. அந்த விரலின் மூலம் வருகிறது.

இசை வீணை வாசிக்கும் கலைஞனில் இருந்து வரவில்லை. அவன் மூலம் வெளிப்படுகிறது.

அது புரியும்போது , அனைத்து முயற்சிகளும் , வினைகளும் அந்த சக்தியின் வெளிப்பாடு என்று  நாம் உணர முடியும்.

உணர்ந்தால், செயலின் விளைவு நமக்கு அல்ல, அந்த சக்திக்குத்தான் என்று அர்ப்பணிப்பு தானாக வரும்.

சிந்தித்துப் பாருங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/123-2.html

Monday, July 24, 2017

யோக சூத்திரம் - 1.23 - எல்லாம் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் -பாகம் 1

யோக சூத்திரம் - 1.23 - எல்லாம் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் -பாகம் 1 


ईश्वरप्रणिधानाद्वा ॥२३॥

īśvara-praṇidhānād-vā ॥23॥

நான் முன்பே கூறியது போல, வார்தைகளை நிதானமாக சிந்திக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அர்த்தம் தான் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ள கூடாது.

உதாரணமாக, "அவன் கிட்ட எந்த திருக்குறளை கேட்டாலும் அசால்டாக சொல்லி விடுவான் " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

அசால்ட் என்றால் ஆங்கிலத்தில் சண்டை, அடி தடி என்று அர்த்தம். நமது மனதில் அசால்ட் என்றால் எளிதாக என்று அர்த்தம் படிந்து இருக்கிறது.

எனவே, நாம் நினைத்துக் கொண்டு இருப்பது தான் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

சரி, இப்போது சூத்திரத்தை பார்ப்போம்.

நீங்கள் ஒரு புதிய ஊருக்குப் போய் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் ஏதோ ஒரு இடத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள ஒருவரிடம் எப்படி , நீங்கள் போக வேண்டிய இடத்தை சொல்லி , அங்கு எப்படி போவது என்று கேட்கிறீர்கள்.

அதற்கு அவர், "அந்த இடமா, அதுக்கு நீங்க இப்படி போகலாம் , அப்படியும் போகலாம் " என்று வழி சொல்கிறார். நீங்கள் அவரை கொஞ்சம் குழப்பமாக பார்க்கிறீர்கள். புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.

அவர் உங்கள் குழம்பிய முகத்தை பார்த்துவிட்டு, "இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் இல்லேனா ஒண்ணு செய்யுங்க ...."

என்று மூன்றாவது ஒரு வழியை சொல்லத் தொடங்குகிறார்.

அந்த "இல்லேனா " என்பதற்கு பின்னால், சில விஷயகள் இருக்கிறது.

ஒன்று, அவர் நீங்கள் ஊருக்குப் புதியவர், சொன்ன வழி ஒன்றும் உங்களுக்கு புரியவில்லை என்று அவர் புரிந்து கொண்டார்.

இரண்டாவது, முதலில் சொன்ன வழிகளை விட, சுருக்கமான , எளிமையான வழி ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைத்து , புதிதான ஒன்றை சொல்ல நினைக்கிறார்.

மூன்றாவது, நீங்களும் , முதலில் சொன்ன வழிகள் எல்லாம் சிக்கல் போல இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு எளிய வழியை சொல்லப் போகிறார் என்று ஆவலோடு கேட்கத் ஆர்வமாய் இருப்பீர்கள் அல்லவா.

அது போல,

சித்த வ்ருத்தி நிரோதம் பற்றி பல வழிகளை சொல்லி வந்தார் பதஞ்சலி.

அதெல்லாம் ரொம்ப கஷ்டமான வழி போல தோன்றும். அது மட்டும் அல்ல, நீண்ட நாள் பயிற்சி செய்ய வேண்டும் போல இருக்கும். அப்படியே செய்தாலும், சரியாக செய்கிறோமா என்று தெரியாது. கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் செய்ய வேண்டும். நடக்குமா என்ற சந்தேகம் வரும் அல்லவா.

எனவே, "அப்படியில்லேனா ஒண்ணு பண்ணுங்க " என்று இந்த ஸ்லோகத்தில் ஒரு மிக மிக  எளிமையான வழியை சொல்கிறார்.

அது என்ன வழி ?

īśvara-praṇidhānād-vā

"வ" என்றால் அல்லது (or  என்று ஆங்கிலத்தில் சொல்வோமே ) என்று அர்த்தம்.

நீங்கள் முன்பு கூறிய எல்லாம் செய்யுங்கள். "அல்லது" என்று இன்னொரு புது வழியை சொல்கிறார்.

அது

"īśvara-praṇidhānād" = ஈச்வர ஈஸ்வர ப்ரநிதானத்

என்ற வழி.

அது என்ன வழி ?

ப்ரநிதானத் என்றால் ஒரு அர்பணிப்பு (டெடிகேஷன்), பக்தி (devotion ) என்று அர்த்தம்.

ஈஸ்வர என்றால் உருவாக்கும் சக்தி. ஈஸ்வரன் என்றால் ஏதோ ஒரு கடவுள், பனி மலையில், பாற்கடலில் இருக்கும் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

வீட்டில் , பொதுவாக, பெண்கள் சமையல் செய்வார்கள். செய்து முடித்த பின் நாம் அந்த உணவை பார்க்கிறோம்.

அந்த உணவு தயாராவது முன்னால் எப்படி இருந்தது ? வாணலியில் வரு பட்டு, வேக வைக்கப் பட்டு, தாளிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது.

அதற்கு முன்னால் ?

கழுவப்பட்டு, நறுக்கப் பட்டு, சுத்தம் செய்யப் பட்டுக் கொண்டு இருந்தது.

அதற்கு முன்னால் ?

இன்னைக்கு என்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்று அந்த பெண் மனதில் சிந்தித்துப் பார்த்து இருப்பாள் அல்லவா ?

அந்த சிந்தனை, அந்த படைக்கும் ஆற்றல், அது தான் ஈஸ்வரன்.

அது புத்தகம் எழுதும் ஆசிரியராகட்டும், இசை அமைக்கும் இசை அமைப்பாளராகட்டும், புது சித்தாந்தங்களை படைக்கும் அறிவியல் அறிஞர் ஆகட்டும் , சமைக்கும் ஒரு சமையல் ஆளாக இருக்கட்டும் யாராக இருந்தாலும், ஒன்றை செய்வதற்கு முன்னால் அதை செய்யும் சிந்தனை, ஆற்றல் இருக்கிறது அல்லவா ? அந்த ஆற்றல் மற்றும் படைப்புத் திறன் தான் ஈஸ்வரன் என்று அழைக்கப் படுகிறது.

அந்த ஈஸ்வரனுக்கு , அந்த திறனுக்கு, அர்ப்பணம் செய் என்கிறார்.

இது என்ன புது கதையாக இருக்கிறது.

எனக்கு நானே அர்ப்பணம் செய்து கொண்டால் , அது எப்படி என் சித்த சலனங்களை போக்கும் ?

புரியலையே ......

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.com/2017/07/123-1.html

Sunday, July 23, 2017

யோக சூத்திரம் - 1.22 - பயிற்சியின் மூன்று நிலைகள்

யோக சூத்திரம் - 1.22 - பயிற்சியின் மூன்று நிலைகள் 



मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ॥२२॥

mr̥du-madhya-adhimātratvāt-tato'pi viśeṣaḥ ॥22॥

பயிற்சி என்பது கடை, இடை, மேல் என்று மூன்று நிலைகளில் உள்ளது. 

mr̥du = மிருது = மென்மையாக

madhya = நடுத்தரத்தில்

adhimātrat = அதிமாத்ரத் = தீவிரமாக

vāt = அது

tato = ததோ = இந்த

'pi =  அபி = மேலும்

viśeṣaḥ = விசேஷ = நிலைகள், படிகள்


ஒரு இளைஞன் , ஒரு புத்த துறவியை அடைந்து, "நான் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்...சுமார் எத்தனை நாள் ஆகும் " என்று கேட்டான்.

குரு: என்ன ஒரு பத்து வருடம் ஆகும்

இளைஞன்: பத்து வருடமா, அவ்வளவு நாள் எல்லாம் பொறுக்க முடியாது. நான் எவ்வளவு மணி வேண்டுமானாலும் பயிற்சி செய்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியுமா ? என்று கேட்டான்.

குரு: அப்படியென்றால் , பதினைந்து வருடம் ஆகும் என்றார்.

இளைஞன்: என்ன குருவே இப்படி சொல்கிறீர்கள். நான் அதிகம் பயிற்சி செய்கிறேன் என்கிறேன் நீங்கள் அப்படி செய்தால் இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகம் ஆகும் என்கிறீர்களே. நான் விடுமுறையை எடுக்காமல் பயிற்சி செய்கிறேன்.  இந்த பத்து வருடத்தை கொஞ்சம் குறைத்து ஒரு இரண்டு மூணு ஆண்டுகளில் முடிக்க முடியுமா ? என்று கேட்டான்.

குரு: ஓ அப்படியா . அப்படி என்றால் இருபது வருடம் ஆகும் என்றார்.

புரிகிறதா ?

அவசரப் பட்டால் , காரியம் நடக்காது. எந்த பயிற்சியும் , காலம் பிடிக்கும். ஒரே நாளில் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் ஒன்றும் நடக்காது.

உடற் பயிற்சி கூடத்தில் சேர்ந்த ஒரே வாரத்தில் பத்து கிலோ எடை குறைய வேண்டும் என்று நினைப்பது.

இசை பயிற்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் உலக தரம் வாய்ந்த இசை கலைஞனாக ஆக வேண்டும் என்று நினைப்பது.

இதெல்லாம் நடக்காத காரியம்.

எந்த பயிற்சியை எடுத்துக் கொண்டாலும், மிகுந்த உற்சாகத்தில் முதல் சில நாளில் ரொம்ப செய்ய வேண்டியது. அதனால் உடம்பில் அங்கே இங்கே வலிக்கும். தசை (muscles ) பிடித்துக் கொள்ளும். வலிக்கும். "இது நமக்கு சரிப் படாது " என்று விட்டு விடத் தோன்றும்.

எதை எடுத்தாலும் அவசரப் படக்கூடாது.

மென்மையாக ஆரம்பிக்க வேண்டும்.

உடம்பும் மனமும் பயிற்சியில் ஒன்றி பழகிய பின், அடுத்த நிலைக்குப் போக வேண்டும்.

மென்மையான பயிற்சியில் இருந்து கொஞ்சம் கடினமான பயிற்சியை செய்ய வேண்டும்.

அடுத்து கடினமான பயிற்சியை செய்ய வேண்டும்.

எடுத்தவுடன் நேரே கடினமான பயிற்சியை செய்யக் கூடாது.

அதற்காக காலம் பூராவும் மென்மையான பயிற்சியே செய்து கொண்டு இருக்கக் கூடாது .

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.

மனமும், உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு ஒரு படியாக முன்னேற வேண்டும்.

அப்படி செய்தாலும், எந்த வேலையிலும் வெற்றி பெறலாம்.

http://yogasutrasimplified.blogspot.com/2017/07/122.html


Saturday, July 22, 2017

யோக சூத்திரம் - 1.21 - தீவிர முனைப்பு

யோக சூத்திரம் - 1.21 - தீவிர முனைப்பு 


तीव्रसंवेगानामासन्नः ॥२१॥

tīvra-saṁvegānām-āsannaḥ ॥21॥

பலர் "நிறைய வேலை இருக்கு செய்ய. ஆனா , எங்க நேரம் இருக்கு ?" என்று அலுத்துக் கொள்வதை பார்க்கிறோம்.

வார இறுதியில் (weekend ) நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்போம். வீட்டை ஒழுங்கு படுத்த வேண்டும், நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும், பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று பலப் பல வேலை பட்டியல் இருக்கும்.

திங்கள் கிழமை காலையில் பார்த்தால் செய்ய நினைத்த பாதி கூட நடந்திருக்காது.

ஏன் ? என்ன ஆயிற்று ?

செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முனைப்பு இருந்தது. ஆனால், செயலில் அந்த வீரியம் இல்லை.

ஆர்வமும், முனைப்பும் மட்டும் இருந்தால் போதாது. செயலிலும் வேகம் வேண்டும். கொஞ்சம் செய்து விட்டு, "...ஸ்ஸ்ஸ் அப்பாட , மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் " என்று  சோம்பி இருந்து விடக் கூடாது.

நிறைய பேர் இப்படித்தான் அதை கற்றுக் கொள்ளப் போகிறேன், இதை கற்றுக் கொள்ளப் போகிறேன்  என்று ஆரம்பிப்பார்கள். முதலில் கொஞ்ச நாள் ஆர்வமாக செய்வார்கள். அப்புறம், ஆர்வமும், முனைப்பும் குறையும், வேலையில் உள்ள தீவிரம் குறையும். அப்புறம் விட்டு விடுவார்கள்.

எடை குறைய வேண்டும் என்று உடற் பயிற்சி கூடத்தில் சேர்வது. அப்புறம் ஒரு மாதத்தில் எடை நினைத்த அளவு குறையவில்லை என்றால், விட்டு விடுவது.

புது வருட முடிவுகள் (new year resolution ) என்று நிறைய முடிவு செய்வது, பின் அதை எல்லாம் மறந்து விடுவது.

நாம் நித்தம் காணும் காட்சிகள் இவை.

எடுத்த ஒன்றில் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பதஞ்சலி கூறுகிறார்.

~"செய்யும் செயலை நம்பிக்கையோடு தீவிர முனைப்போடு செய்ய வேண்டும்."~

tīvra = தீவிர = வேகம், செயலில் வீரியம், முனைப்பு

saṁvegānām =  பயிற்சி, நம்பிக்கை மற்றும்  உற்சாகத்துடன் செய்யும் பயிற்சி

āsannaḥ  = அருகில், சமீபத்தில் , நெருக்கத்தில்

எந்த செயலிலும் வெற்றி அடைய இரண்டு வேண்டும்.

ஒன்று - செய்யும் செயலில் நம்பிக்கை, அசைக்க முடியாத நம்பிக்கை

இரண்டாவது - செயலில் வேகம், ஆழம், முனைப்பு

இதில் ஒன்று இருந்து , இன்னொன்று இல்லாவிட்டால் காரியம் கை கூடாது.

பயிற்சி செய்யும்போது மித வேகத்தில் ஆரம்பிக்க வேண்டும், பழக பழக அதை கொஞ்சம்  மத்திய வேகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்புறம், அதி வேகம்.

ஆரம்பிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு சூரிய நமஸ்காரம் செய்வதே கடினமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக முயன்று, ஒன்றை இரண்டாக்க வேண்டும், இரண்டு நாலாக வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் செயல்களில் திறமை கூடிக் கொண்டே போக வேண்டும். முன்னேற்றம் இருக்க வேண்டும்.

அடுத்தது, "என்ன செஞ்சு என்ன ஆகப் போகுது " என்று ஒரு உற்சாகம் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல் வேலை செய்யக் கூடாது.

எவ்வளவு வேகமாக செய்தாலும், நம்பிக்கையும், உற்சாகமும் இல்லாமல் செய்தால்  அது வெற்றியாக முடியாது.

வேகம் என்று எடுத்துக் கொண்டால் - மிதம் , மத்யம் , அதி வேகம்

நம்பிக்கை, உற்சாகம் என்று எடுத்துக் கொண்டால் - அதிலும் இந்த குறைவான நம்பிக்கை, மிதமான நம்பிக்கை, அதிக நம்பிக்கை என்று மூன்று பிரிவாக பிரித்த்துக் கொள்ளலாம்.

ஆக மொத்தம் 9 வகைகள் உள்ளன.

இரண்டிலும் மிதமான ஒன்றில் ஆரம்பித்து , இரண்டிலும் உயர் நிலையை அடைய வேண்டும்.

செயலில் வேகம்,

நம்பிக்கையில் உறுதி

வெற்றி உங்களுடையதே.

வாழ்த்துக்கள்.

http://yogasutrasimplified.blogspot.com/2017/07/121.html

Friday, July 21, 2017

யோக சூத்திரம் - 1.20 - மெய்யறிவை அடையும் வழி

யோக சூத்திரம் - 1.20 - மெய்யறிவை அடையும் வழி 


श्रद्धावीर्यस्मृति समाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ॥२०॥

śraddhā-vīrya-smr̥ti samādhi-prajñā-pūrvaka itareṣām ॥20॥

முந்தைய சூத்திரத்தில் எப்படி புற வேறுபாடுகளை நீக்கி (விதேகம், தேகம் = உடல், தோற்றம்) , அனைத்திலும் இருக்கும் சக்தி ஒன்றுதான் அறிந்தால் அலை பாயும் மனம் அமைதியுற்று தெளிவு பிறக்கும் என்று பார்த்தோம்.

சிலருக்கு சொன்னால் புரியும். ஆனால் அதை செயல் படுத்துவது எப்படி என்று தெரியாது.

வடிவங்கள்தான் வேறு, உள்ளுறையும் சக்தி ஒன்றுதான் என்று அறிவளவில் புரிகிறது. ஆனால், நடை முறை வாழ்க்கை என்று வரும்போது, படித்தது மறந்து விடுகிறது அல்லது அதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தவிப்போம். ஒருவேளை, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லையோ ? ஒரு வேளை இதெல்லாம் சாமியார்களுக்குத்தான் ஒத்துவருமோ ? நம்மை போல குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் சரிப்படாதோ என்று பல சந்தேகங்கள் வரும்.

நேரடியாக செயல்படுத்த முடியாதவர்களுக்கு , படிப் படியாக அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று வழிமுறைகளை சொல்லித் தருகிறார் பதஞ்சலி.

அது என்ன வழி முறை.

śraddhā  = நம்பிக்கை, உறுதி, நிச்சய தன்மை.

இதை நாம் அடைவோம் என்ற நம்பிக்கை வேண்டும். அடைந்தே தீருவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும். இப்படி செய்தால் , அது நிகழும் என்ற நிச்சய தன்மை வேண்டும்.

இது யோக சமாதிக்கு மட்டும் அல்ல. வாழ்வில் எதை செய்தாலும் இந்த நம்பிக்கை, உறுதி, நிச்சய தன்மை வேண்டும்.

நடக்குமா ? இது சரிதானா ? இப்படி செய்யலாமா ? இன்னும் ஒரு முன்னேற்றமும் வரலையே ? இதைவிட அது நல்ல வழியாக இருக்குமோ ? என்று  எப்போதும் சந்தேகப் பட்டுக்கொண்டே இருந்தால் ஒன்றும் நடக்காது.

எண்ணித் துணிக கருமம் என்பார் வள்ளுவர்.

துணிந்து, நம்பிக்கையோடு , உறுதியோடு இறங்க வேண்டும்.


vīrya - உற்சாகமாக, வலுவோடு, , சக்தியோடு

வீர்யம் என்றால் முழு சக்தியும் , உற்சாகமாக, வலுவோடு உபயோகப் படுத்த வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் எந்த காரியமும் சித்தி ஆகாது. "செஞ்சு பார்ப்போம், வந்தால் வரட்டும், வராட்டியும் பரவாயில்ல " என்று எதையும் செய்யக் கூடாது. முழு உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.

smr̥ti - நினைவோடு, ஞாபகத்துடன், செய்கிறோம் என்ற உணர்வோடு

பலபேருடைய வாழ்க்கை முழுவதும் ஏதோ இயந்திரம் போல நிகழும். காலையில் எழுந்திருப்பது, குளிக்கணும், சிற்றுண்டி, அலுவலகம், சாப்பாடு, வீடு, தூக்கம் என்று உயிர்ப்பு இல்லாமல் இருக்கும். எதைச் செய்தாலும் ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், எப்படி செய்கிறோம், இதை இன்னும் எப்படி சிறப்பாக செய்யலாம், என்று என்ன செய்கிறோம் என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

சிலர் சாப்பிடும்போது கூட, எதையோ நினைத்துக் கொண்டு அல்லது டிவி பார்த்துக் கொண்டு, பேப்பர் வாசித்துக் கொண்டு உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்வதை பார்க்கிறோம்.

அதை விடுத்து, அந்த உணவை கண்ணால் கண்டு, கையால் உணர்ந்து, அதன் மணத்தை நுகர்ந்து, அதை வாயில் போட்டு அதன் சுவையை இரசித்து சாப்பிட்டால்  அது தனி சுகம்.

மனைவியிடம் இருக்கும் போதும் அலுவலகத்தை நினைத்துக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கை சுகமானதா ?

Mindful என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். எதை செய்தாலும், மனதை அதில் செலுத்தி முழுமையாக ஈடுபட்டு செய்ய வேண்டும்.

samādhi = சமாதி

சமாதி நிலையை அடைய முடியும். ஒவ்வொரு செயலையும் முன்பு கூறிய மாதிரி செய்தால், மனம் மீண்டும் மீண்டும் ஏங்காது. எல்லாம் அறை குறையாக செய்வதால், ஒரு திருப்தி இருப்பது இல்லை. மீண்டும் மீண்டும் அது வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. எதையும் முழுமையாக , ஈடுபாட்டோடு செய்யும் போது மனம் முழுதுமாக திருப்தி அடைகிறது. அது வேண்டும், இது வேண்டும் என்ற அலை பாய்வது குறையும்.

prajñā =உண்மையான அறிவு, மெய் அறிவு

அந்த சமாதி நிலையில் உண்மையான அறிவை நாம் அடைவோம். நாம் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருப்பது என்பது வெறும் தகவல் தொகுப்பு. உலகின் உண்மை நிலையை நாம் அறிவதில்லை.


pūrvaka = பூர்வக, மேலே சொன்னவை, முன்பே சொன்னவை

itareṣām  = மற்றவர்களுக்கு

எல்லாம் ஒன்றுதான் என்று அறிய முடியாத மற்றவர்களுக்கு, மேலே சொன்னவற்றை கடை பிடித்தால் அவர்களும் அறிய முடியும்.

எதை செய்தாலும் ஆர்வத்துடன், உறுதியுடன், நிச்சய தன்மையுடன், முழு மூச்சாக, செய்கிறோம் என்ற உணர்வோடு செய்து பழகுங்கள்.

உண்மையான அறிவை அடைய அதுவே வழி.

http://yogasutrasimplified.blogspot.com/2017/07/120.html

Thursday, July 20, 2017

யோக சூத்திரம் - 1.19 - இரண்டற கலத்தல்

யோக சூத்திரம் - 1.19 - இரண்டற கலத்தல் 



भवप्रत्ययो विदेहप्रकृतिलयानम् ॥१९॥

bhava-pratyayo videha-prakr̥ti-layānam ॥19॥

bhava = பாவம் குற்றம் என்ற தொனியில் வருவது அல்ல. பாவித்தல், நடன பாவம் என்று கூறுவோம் அல்லவா, அந்த பாவம். தமிழில் ஒரு பா தான் இருக்கிறது.  மனதில் கொள்ளுதல் . பாவித்துக் கொள்ளுதல்.

pratyayo = ஒரே சிந்தனை

videha = தேகம் என்றால் உடம்பு. விதேகம் என்றால் உடம்பு இல்லாத. (நாயகன் என்றால் தலைவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்)

prakr̥ti = ப்ர என்றால் உயர்ந்த, சிறந்த, பழமையான என்று அர்த்தம். (நாம் சாப்பிடுவது சாதம். இறைவனுக்கு படைப்பது ப்ர - சாதம்) க்ரிதி என்றால் உருவாக்குவது. (creation ). ப்ர + க்ரிதி என்றால் உருவாகும் ஆதி சக்தி. அல்லது இயற்கை சக்தி.

layānam = இலயனம். லயித்து இருப்பது. ஒன்றாக இருப்பது. கலந்து இருப்பது. இரண்டற கலந்து இருப்பது.

தேகத்தை கடந்து சிந்தித்தால் (பாவித்தால்), இந்த உலகம் அனைத்தும் ஒரே சக்தியால் ஆனது என்று புரியும். 

நான் முன்பே கூறியது போல, சமஸ்க்ரித சொற்களை மற்ற மொழிகளில் மாற்றுவது என்பது மிக மிக கடினமான செயல். அதிலும், தமிழில் கொண்டு வருவது இன்னும் சிக்கல் ஏன் என்றால், சமஸ்கிருத சொற்களை போலவே சில தமிழ் சொற்கள் உண்டு. ஆனால், இரண்டுக்கும் அர்த்தம் வேறு. தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது  ஒரு சிக்கல். ஒரு சமஸ்க்ரித சொல்லை கேட்டவுடன் , அது போன்ற தமிழ் சொல்லை நினைத்துக் கொள்கிறார்கள். அர்த்தம் மாறிப் போகிறது.  எனவே, அவசரப் படாமல் , சமஸ்க்ரித சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சரி, சூத்திரத்துக்கு வருவோம்.

சித்த விருத்தி நிரோதம் - சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

எண்ணங்கள் சிதறுவதற்கு என்ன காரணம் ? பலப் பல எண்ணங்கள் ஓயாமல் மனதில் அலை போல வந்து வந்து போவதற்கு என்ன காரணம் ?

நாம் வேறு , இந்த உலகம் வேறு என்று நினைப்பதால் (பாவித்துக் கொள்வதால்) இது நிகழ்கிறது.

ஒரு தளத்தில் இருந்து பார்த்தால் அது வேறு வேறாகத்தான் தெரியும். நாம் அந்தத் தளத்தில் தான் இருக்கிறோம்.

இன்னொரு தளத்திற்கு சென்றால், அந்த வேறுபாடு மறையும்.

அது என்ன தளம் ?

சாலையில் செல்லும் போது அதில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிகிறது. குண்டும் குழியும் தெரிகிறது. அதுவே, விமானத்தில் 35000 அடி உயரத்தில் பறப்பவனுக்கு சாலையின் மேடு பள்ளம் தெரியாது. அவனுக்கு மலையும் , பள்ளத்தாக்கும் தெரியும். அதுவே செயற்கை கோளில் இருந்து பார்த்தால் , இந்த  பூமி பூராவும் ஒரு அழகிய நீல பந்து போல தெரியும்.

எனவே, பார்க்கும் இடம் மாறினால், பார்க்கப் படும் பொருள்களில் உள்ள வேறுபாடுகள் மறையும் என்கிறது தெரிகிறது அல்லவா ?

அது போல, நாம் உடல் என்ற தளத்தில் இருந்து உலகை அணுகுகிறோம். உடல் என்று சொன்னால்  உடலும், அதன் ஐந்து புலன்களும், அதன் நினைவுகளும் எல்லாம் சேர்ந்தது.

நான் என்பது இந்த உடல் இல்லை என்று வைத்துப் பார்த்தால் ?

இந்த உலகம் அனைத்தும் ஒன்றே , ஒரே சக்தியால் ஆனது என்று புரியும்.

அது சரிதான், ஆனால், அது எப்படி ஒன்றாகும் ? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே.

ஒரு கடைக்குப் போகிறோம். லட்டு ஒரு தட்டில் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கிறது. நமக்கு ஒரு கிலோ லட்டு வாங்க வேண்டும். கடைக்காரரிடம் "லட்டு நல்லா இருக்குமா "

"சாப்பிட்டு பாருங்கள் " என்று ஒரு சின்ன துண்டு லட்டை தருகிறார். நாமும் சுவைத்துப் பார்த்து விட்டு, "ம்ம்...நல்லா இருக்கு, ஒரு கிலோ போடுங்க" என்கிறோம்.

நாம் சுவைத்த துண்டும் , மற்ற லட்டுகளும் ஒரே மாதிரி இருக்குமா ? இதுவும் அதுவும் ஒன்று  என்று அறிவு சொல்கிறது அல்லவா ?

அது போல, நமக்குள் இருக்கும் சக்தியை நாம் அறிந்து கொண்டால், அதே சக்திதான் அனைத்திலும் இருக்கிறது என்று தெரியும்.

அனைத்து மக்களுக்குள்ளும் , விலங்குகள், செடி கொடிகள் அனைத்திலும் இருப்பது  ஒன்றுதான் தெரியும்.

டப்பா தான் வேறு. உள்ளிருக்கும் லட்டு எல்லாம் ஒன்றுதான், நாம் சுவைத்த அந்த லட்டுதான் எல்லா டப்பாவுக்குள்ளும் இருக்கிறது.

சரி, அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்று தான் என்றே வைத்துக் கொள்வோம், அது எப்படி ஆசையை கட்டுப் படுத்த, சித்த சலனங்களை நிறுத்த உதவும் ?

மீண்டும் லட்டுக்கே வருவோம்.

ஒரு துண்டு சுவைத்துப் பார்த்தோம். வேண்டுமானால் ஒரு முழு லட்டும் சுவைத்துப் பார்க்கலாம். வாங்கிய ஒரு கிலோ லட்டும் சுவைத்து பார்க்க வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா ?

மாட்டார்கள்.

ஏன் ?

ஒன்றில் என்ன இருக்கிறதோ, அதே தான் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதால் ஒன்று போதும் என்று நிறுத்தி விடுகிறோம்.

இதே இன்னும் விரித்துப் பார்த்தால், எல்லா இனிப்பிலும் அதே சர்க்கரை, நெய், மாவு தான் என்று தெரிந்தவர்கள், ஒரு இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் எல்லாம் சாப்பிட்ட மாதிரிதான் என்று புரிந்து கொள்வார்கள்.

அதே போல, உடலைத் தாண்டி, அனைத்தும் ஒன்றுதான் என்று புரிந்து கொண்டால், ஆசை,  பொறாமை,கோபம், பயம் இதெல்லாம்  போகும்.

மனம் பர பரவென்று  அலையாது.

சலனமின்றி  இருக்கும்.அமைதி  பெறும்.

தெளிந்த, அமைதியான மனதில் ஆனந்தம் பெருகும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/119.html

Wednesday, July 19, 2017

யோக சூத்திரம் - 1.18 - எண்ணங்களை நிறுத்த

யோக சூத்திரம் - 1.18 - எண்ணங்களை நிறுத்த 


|
विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ॥१८॥

virāma-pratyaya-abhyāsa-pūrvaḥ saṁskāra-śeṣo-'nyaḥ ॥18॥

விரமா ப்ரதியாய அப்பியாச பூர்வா ஸம்ஸ்கார செஸோந்ய

மனதில் எண்ண அலைகளே வராமல் தடுப்பதன் மூலம் மனதில் உள்ள பழைய சுவடுகளை அழித்து இன்னொரு வகையான சமாதி நிலையை அடைய முடியும்.

முந்தைய சூத்திரத்தில் எப்படி சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையை அடைவது என்று பார்த்தோம்.

அதாவது, விதர்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதா என்ற பல்வேறு நிலைகளின் மூலம் சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையை அடையலாம் என்று சிந்தித்தோம்.

அந்த சம்ப்ரஜானத் என்ற சமாதி நிலையில் சித்தம் இறுதியில் ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அது மட்டும் அல்ல, வெளியில் உள்ள அனுபவங்கள் நமது சித்தத்தில் ஏற்படுத்தும் சலனங்களை நாம் நிறுத்தப் பயிலலாம். ஆனால், நமது சித்தத்தில் , ஆதியில் இருந்தே சில படிமானங்கள், சுவடுகள் படிந்து கிடக்கின்றன.  அவை எப்போது வேண்டுமானாலும் சித்தத்தில் அலைகளை கிளப்பி விடலாம். அவற்றை எவ்வாறு நீக்குவது ?

அதற்கும் வழி சொல்கிறார் பதஞ்சலி.

விரமா - நிறுத்துவது. முடிவுக்கு கொண்டுவருவது.
ப்ரத்யாய - சித்தத்தில் உள்ளவற்றை
அப்பியாச = பயிற்சியின் மூலம்
பூர்வாஹ் = பழைய, முன்பிருந்த, ஆதியில் இருந்தே இருக்கும் , பழமையான
ஸம்ஸ்கார = அனுபவ பதிவுகள் , ஆழ்மன பதிவுகள் (sub subconsious )
சேஷ = மீதி இருப்பது, இறுதியில் இருப்பது
அந்ய = மற்ற ஒன்று

அந்ய என்று இங்கே சொல்வது மற்ற ஒரு விதமான சமாதியை.

நமது மனதில் ஓயாமல் ஏதோ ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கனவுகள், பயங்கள் , ஆசைகள், குற்ற உணர்வு, பொறாமை, கோபம், காமம், ஆசை , பக்தி, காதல் , என்று ஒன்று மாத்தி ஒன்றாக எண்ணங்கள் ஓடிய வண்ணம் இருக்கின்றன.

இப்படி இடைவிடாமல் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தால், மனம் சலனம் அடைந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்ல, எதிலும் ஒரு தெளிவு இருக்காது.

இந்த சலனங்களை நிறுத்த இரண்டு வழி சொல்கிறது யோக சூத்திரம்.

ஒன்று, பலப் பல எண்ணங்களில் இருந்து மனதை ஒருமுகமாக ஒரே ஒரு எண்ணத்தில், சிந்தனையில் நிலை கொள்ளச் செய்வது. பின், அந்த எண்ணத்தின் ஆணி வேரை அறிந்து கொள்வதன் மூலம், அனைத்து எண்ணங்களின் தன்மையை புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணச் சிதறல்கள் அடங்கி, தெளிவு பெற்று மனம் ஆனந்தம் அடையும்.

இது ஒரு வழி.

இன்னொரு வழி, எப்போது எந்த எண்ணம் , சிந்தனை வந்தாலும் அதை உடனே நிறுத்துவது. மனதால் சிந்தனைகளே இல்லாமல் செய்வது. எந்த சிந்தனை வந்தாலும், அது நல்லதோ, கெட்டதோ , உயர்ந்ததோ, தாழ்ந்ததோ...பாகுபாடின்றி உடனே அவற்றை நிறுத்துவது.

"விரம" என்றால் நிறுத்துவது.

அப்படி நிறுத்துவதால் என்ன நிகழும் என்று பார்ப்போம்.

"பூர்வ சமஸ்கார " - பழைய எண்ண பதிவுகள்.

நமது மனதில் ஏற்கனவே பல படிமானகள் , சுவடுகள் இருக்கின்றன. அறிந்தோ , அறியாமலோ அவற்றை நாம் நம் மனதில் பதிய வைத்து இருக்கிறோம். இவை பிறப்பிலேயே வந்தாக இருக்கலாம். அல்லது நாம் மிக மிக சிறிய வயதில் இருக்கும் போது நம் மனதில் மற்றவர்களால் ஏற்றப் பட்டதாக இருக்கலாம். பின், நாமே தேடி கொள்வதும் உண்டு - புத்தகங்கள், சினிமா, டிவி, செய்தித் தாள்கள், பத்திரிகைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், அண்டை அயல், உயர்வு என்று ஆயிரம் வழிகளில் நமக்கு எண்ணப் பதிவுகள் உண்டாகின்றன.

இவை கடவுள், மதம், ஆண் பெண் பற்றிய சிந்தனைகள், நாடு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சொர்கம் நரகம் , பாவம் புண்ணியம், என்று பலவேறு துறை சம்பந்தப் பட்டவைகளாக இருக்கும்.

இவை அனைத்தையும் பட்டியல் போட்டு, ஒவ்வொன்றாக அழிப்பது என்பது நடக்காத காரியம்.

இவை அனைத்தையும் மொத்தமாக அழிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ?

இந்த பழைய எண்ண சுவடுகள் , புதிதாக வரும் அனுபவங்களால் மேலும் மேலும்  வலுப்பெறுகின்றன. புதிய செய்திகள், அனுபவங்கள் நம்முடைய பழைய பதிவுகளோடு ஒத்துப் போகலாம் அல்லது அதற்கு எதிரான ஒன்றாக இருக்கலாம். இரண்டுமே பழைய எண்ணங்களை வலுப் பெற செய்கின்றன.

எனவே, புதிய சிந்தனைகள் வரும்போது அவற்றை உடனே நிறுத்த வேண்டும். குரங்கு தேங்காயை உருட்டிக் கொண்டு இருப்பதைப் போல, உள்ளே வரும் ஒவ்வொரு சிந்தனையையும் வைத்து உருட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. "இது சரியா , தவறா ? நல்லதா, கெட்டதா " என்று ஆராய்ச்சி செய்வதன் மூலம் பழைய சிந்தனைகள் வலுப் பெறுகின்றன.

எனவே, மனதில் எந்த சிந்தனை எழுந்தாலும் அவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

சரி, இப்படி செய்து கொண்டே இருந்தால், நாம் புதிதாக ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாதே. முட்டாளாகவே இருந்து விடுவோமே. நல்லதோ , கெட்டதோ, அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டாமா ? உலக அறிவு இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்துவது ?

நாம் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருப்பது எல்லாம், தகல்வல்களை சேர்த்து வைப்பது தான்.

அந்த கிரிக்கெட் போட்டியில் அவர் வென்றார், இந்த படத்தில் இவர் நடித்தார், பங்கு சந்தை இத்தனை புள்ளிகள் மேலே போனது, மழை வரும், வராது, இரண்டொரு பாட்டு, என்று தகல்வல்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். நிறைய தகவல் உள்ளவர் அறிவுள்ளவர் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம்.

அறிவென்பது தகவல் அல்ல.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு.

உண்மையை கண்டு அறிவதே அறிவு.

இப்படி மனதில் எழும் எண்ணங்களை உடனே நிறுத்துவதன் மூலம், மனம் தெளிந்த நிலையை அடையும். உண்மை அதில் பிரதிபலிக்கும்.

விவேகானந்தர் ஒரு உதாரணம் சொல்லுவார் இதற்கு.

திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி அதில் காட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. திரை நினைக்கிறது அந்த காட்சி எல்லாம் உண்மை என்றும் அவை தனக்கு நிகழ்வதாகவும்.  பட பெட்டியை நிறுத்தினால், காட்சிகள் நிற்கும். திரை நிர்மலமாக இருக்கும். அது தான் அதன் உண்மை நிலை. காட்சிப் பதிவுகள் உண்மை அல்ல. தன் மேல் ஓடும் காட்சிகள் உண்மை என்றும், அவற்றை தன்னோடு தொடர்பு படுத்திக் கொண்டு திரை அழுகிறது, சிரிக்கிறது, ஆனந்தம் அடைகிறது, கோபம் கொள்கிறது....

நமது படப் பெட்டி இந்த உலகம். நம்மால் இந்த உலகத்தை நிறுத்த முடியாது. அது அனுபவங்களை தந்து கொண்டே இருக்கும்.

அந்த காட்சிகள் நமக்குள் விழுந்து கொண்டே இருக்கும். விழுந்தவுடன், நமக்குள் ஒரு சிந்தனை பிறக்கும். "அட இது நல்லா இருக்கே, இது நல்லாவே இல்ல,  இவன் நல்லவனா தெரியிறான், இது சுவையாக இருக்கிறது " என்ற எண்ணங்கள் பிறக்கும்.

இந்த எண்ணங்களோடு நாம் ஒன்றி விடுகிறோம். "இது நல்லா இருக்கே" என்ற எண்ணத்தில் இருந்து "எனக்கு இது வேண்டும்" என்று அதனோடு நாம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

"ஆஹா இவ அழகா இருக்கிறாள் " என்ற எண்ணத்தில் இருந்து "இவள் எனக்கு வேண்டும், இவள் எனக்கு மட்டும் தான், அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று எண்ணங்கள் நம்மை மாற்றுகின்றன.

எனவே, எண்ணங்கள் எழும்போதே அவற்றை நிறுத்தப் பழக (அப்பியாசம்)  வேண்டும்.

ரொம்ப ஆழமான சிந்திக்க வேண்டிய விஷயம்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/118.html

Monday, July 17, 2017

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 2


वितर्कविचाराअनन्दास्मितारुपानुगमात्संप्रज्ञातः ॥१७॥

vitarka-vicāra-ānanda-asmitā-rupa-anugamāt-saṁprajñātaḥ ॥17॥

அறிவு படிப்படியாக விதர்கா, விசாரா, அநந்தா , அஸ்மிதா என்ற நிலைகளில் செல்கிறது.

இந்த தமிழ் உரை , மூல சமஸ்கிரத உரைக்கு வலு சேர்ப்பதாக அமையவில்லை.

இப்போதைக்கு அறிவு  படிப்படியாக முன்னேறுகிறது என்று தெரிந்து கொள்ளுவோம். அவை என்னென்ன படிகள் என்று ஆராய்வோம். முழுவதும் படித்த பின்னால், இந்த சூத்திரத்தின் அர்த்தம் விளங்கலாம்.

அதற்கு முன் சமாதி என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

சமாதி என்றால் ஏதோ இறந்தபின் , ஒருவரை புதைத்து அதற்கு மேல் கட்டும் ஒன்று என்று  நினைத்துக் கொள்ளக் கூடாது.

எப்படியோ அந்த சொல், இறந்தவரை புதைத்த இடத்திற்கு பெயராகி விட்டது.

அதை கொஞ்சம் தள்ளி வைப்போம்.

சமாதி என்றால் சமம் + ஆதி.  ஆதி என்றால் முதலில் எப்படி இருந்தோமோ அதோடு அல்லது அதற்கு சமாக இருப்பது.

ஆதி என்றால் , முதலில் நாம் தோன்றியபோது எப்படி இருந்தோம் ?

 ஒரு குழந்தைக்கு நல்லது, கெட்டது , உயர்வு, தாழ்வு,  பணக்காரன், ஏழை என்ற பாகுபாடும் கிடையாது.

நாளடைவில் இவற்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

இவற்றை அறிந்த பின்னும், அந்த குழந்தை மனம் போல் இருப்பது சமாதி.

இருமை அகன்று ஒருமையில் நிலைப்பது சமாதி.


கல்லார்க்கும் கற்றவர்க்கும்  களிப்பருளும் களிப்பே என்பார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

என்பது திருவருட்பா

‘கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே  நோக்குவார்.’’

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஒன்றாக காண்பதுவே காட்சி என்பார் ஒளவையார்

இப்படி இருமை (duality ) மறைந்து , ஒருமை நிலை அடைவதுதான் சமாதி.

அந்த சமாதி இரண்டு வகைப்படும்.

ஒன்று  ஸம்ப்ரஜானதா இன்னொன்று அஸம்ப்ரஜானதா

இதில் ஸம்ப்ரஜானதா என்றால் என்ன என்று இங்கு சிந்திக்க இருக்கிறோம்.

தர்க்கம் என்றால் ஆராய்ச்சி, ஆராய்தல், அலசுதல், சரி எது தவறு எது என்று வாதம் செய்து உண்மையை நிலை நிறுத்துதல்.

நாம்  எதை  ஆராய்ச்சி செய்கிறோமோ , அவை , அவற்றினுள் இருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, நாம் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த அணு எப்படி வேலை செய்கிறது, அதனுள் என்னென்ன இருக்கிறது, அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்றெல்லாம் போக போக புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அதே போல நம் உடலை பற்றி ஆராயத் தொடங்கினால் , அதன் உறுப்புகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன, அதில் வரும் நோய்கள், அவற்றை எப்படி குணப் படுத்துவது என்றெல்லாம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா ?

இது வெளி உலகை ஆராயும் போது நாம் அறிந்து கொள்ளும் முறை.

இது விதர்கம்.

மற்றவற்றையும் ஒவ்வொன்றாக அறிவோம்.

------------------------- பாகம் 2 ------------------------------------------------------------------------------------------------------

விதர்கம் என்றால் வெளி உலகை பற்றி ஆராய்வது என்று பார்த்தோம். 

அடுத்தது விசாரம்.

விசாரம் என்றால் என்ன ? 

விதர்கம் என்றால் அறிவை வெளி உலக பொருள்களின் மேல் செலுத்தி அவற்றை ஆராய்வது. விசாரம் என்றால்  அந்த பொருளை அல்லது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்வது. 

விதர்கம் என்றால் அறிவு ஒரு பொருளை பற்றும் பின் விட்டு விடும். விசாரம் என்றால் எப்போதும் அந்த பொருள்  மனதிலேயே இருக்கும். பின் புலத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். 

"அவ இப்ப என்ன செஞ்சுகிட்டு இருப்பா ? தூங்கியிருப்பாளா ? சாப்டுகிட்டு இருப்பாளா ? டிவி பாத்துக்கிட்டு இருப்பாளா " என்று ஒரு காதலன் எந்நேரமும் காதலியை நினைத்துக் கொண்டே இருப்பதைப் போல. 

பக்தர்கள் இறைவனை எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். 

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

என்பார் மணிவாசகர். 

அது விசாரம். 

ஒரு பொருள் என்பது இருக்க வேண்டும் என்றால் அதற்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் வேண்டும். 

ஒன்று காலம். இன்னொன்று இடம். 

ஒரு பேனா என்றால், அது எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். எப்போது அங்கே இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு பொருளை பற்றி நாம் கூற முடியாது. 

"மீண்டும் சந்திப்போமா " என்று சொன்னால், எப்போது , எங்கு என்ற கேள்வி எழும். அந்த இரண்டையும் சொல்லாமல்  வெறும் சந்திப்பு என்பது முடியாத காரியம். 

விசாரம் என்பது பொருளை அந்த காலம் மற்றும் இடத்தில் இருந்து நீக்கி மனதுக்குள் கொண்டு வருவது. 

உலகில் எத்தனை ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. பொருள்கள் மட்டும் அல்ல, மனிதர்கள் , உறவுகள்,  அனுபவ தேடல் என்று மனம் ஒன்றில் இருந்து ஒன்றிற்கு எப்போதும் தாவிக் கொண்டே இருக்கிறது. அந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் ? இந்த மாதிரி ஒரு கார் இருந்தால், இப்படி ஒரு பெண் நமக்கு கிடைத்தால், அடடா, இப்படி ஒரு இடத்துக்கு டூர் போனால் எப்படி இருக்கு, ஆஹா என்ன ஒரு உணவு அதை ருசித்தால் எப்படி இருக்கும் என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. 

இதை எப்படி நிறுத்துவது என்றால், அதில் ஒன்றை பற்றி விசாரம் செய்வது. அதை மனதுக்குள் கொண்டு வந்து விடுவது. நம்மால் பல விஷயங்களை மனதில் நிறுத்த முடியாது. 

எனவே, எந்நேரமும் மனதில் நிறுத்துவது என்றால், ஓடும் மனதை ஏதோ ஒன்றின் மேல் எப்போதும் நிலை நிறுத்துவது. 

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஒன்றே  ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். . 

அப்படி இருக்கும் போது என்ன ஆகும் என்றால், மனம் ஆயிரக்கணக்கான விஷயங்களின் பின்னால் அலையாமல் ஒன்றின் மேலே இலயிக்கும்.

குளத்தில் பல கற்களை எறிந்து கொண்டே இருந்தால், அலை ஓயவே ஓயாது. 

ஒரே ஒரு கல்லை எறிந்தால் , அலை எழும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அது வலுவிழந்து அலை அடிப்பது நின்று விடும். 

அப்படி, அலை நிற்கும் போது என்ன நிகழ்கிறது. ? அந்த ஒன்றின் ஆழ்ந்த உண்மை (insight ) புலப்படும். 

அடுத்தது "ஆனந்தா".

ஒன்றையே பற்றிக் கொண்ட மனம், நாளடைவில் சலனங்கள் எல்லாம் அடங்கி, அந்த ஒன்றின் உண்மையான ஆழ்ந்த அர்த்தம் (insight ) புலப்படும்போது , ஒரு அமைதி மற்றும் ஆனந்தத்தை அறியும். 

இதன் அடுத்த கட்டம் அஸ்மிதா.

அஸ்மிதா என்றால் எல்லாம் ஒடுங்கி "அனைத்தும் நான்" என்று அறிவது. 

வெளியில் உள்ளவை மட்டும் அல்ல, என் நம் எண்ணங்கள், அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்வது. 

நான் வேறு , நீ வேறு அல்ல. 

அனுபவம் கொள்பவன் வேறு , அனுபவிக்கப்படுவது வேறு அல்ல இரண்டும் ஒன்று என்று அறிவது. 

பார்ப்பவனும், பார்க்கப்படுவதும் ஒன்று. 

இந்த ஒன்றான காட்சியே அஸ்மிதா என்று அழைக்கப் படுகிறது. 

"அஸ்மிதா ரூப " . ரூபம் என்றால் வடிவம், இயற்கை.  

இயற்கை, அதன் அத்தனை வடிவங்களும் , தோற்றங்களும் என்னுள் ஒடுக்கம், அனைத்தும் நான்  என்ற ஞானம் பிறக்கும். 

anugamāt-- இவற்றில் இருந்து , இவற்றை கடைபிடிப்பதன் மூலம் , இந்த் விதர்கம், விசாரம், ஆனந்த , அஸ்மித ரூப என்ற இவற்றை செய்வதன் மூலம் 


saṁprajñātaḥ = உண்மையான அறிவு பிறக்கும். Awareness என்று சொல்லுவார்களே அது.     உண்மையின் தரிசனம் கிடைக்கும். 

விதர்கம் =    ஆராய்ச்சி 
விசாரம் = உள் நுண்ணறிவு (insight )
ஆனந்த =   அறிவினால் வரும் ஆனந்தம் 
அஸ்மித ரூப  = ஒன்றே அனைத்தும் என்ற ஞானம் 
அனுகமத் ஸம்ப்ரஜனதா = இவற்றை கடை பிடிப்பதால் வரும் 

வரட்டும் 

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/117-2.html