Monday, August 14, 2017

யோக சூத்திரம் - 1.31 - தெளிவின்மையின் நான்கு காரணங்கள்

யோக சூத்திரம் - 1.31 - தெளிவின்மையின் நான்கு காரணங்கள் 



दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासाः विक्षेप सहभुवः ॥३१॥

duḥkha-daurmanasya-aṅgamejayatva-śvāsapraśvāsāḥ vikṣepa sahabhuvaḥ ॥31॥

Suffering, depression, nervousness, and agitated breathing are signs of this lack of clarity. ||31||

ஒன்பது விதமான உபாதைகளால் எப்படி நம் சித்தம் கலக்கம் அடைகிறது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த உபாதைகள் எப்படி நம்மை பாதிக்கின்றன என்று இங்கே பார்ப்போம்.

அந்த ஒன்பது உபாதைகள் , நான்கு விதங்களில் நம்மை பாதிக்கின்றன.

அவை

duḥkha = வலி, துக்கம்
daurmanasya = சோகம், மன அழுத்தம்
aṅgam = அங்கங்கள் , உடல் உறுப்புகள்
ejayatva = இயல்பாக இல்லாமல் இருத்தல்
aṅgam+ejayatva = உடல் நடுக்கம்
śvāsa-praśvāsaḥ = தவறான முறையில்  மூச்சு இழுப்பதும், வெளி விடுவதும்
vikṣepa = தெளிவின்மை
sahabhuvaḥ = இவை வெளிப்பாடுகள்


நோய் மற்றும் ஆரோக்கியமின்மையில் இருந்து வலியும் துக்கமும் வருகிறது. வலி இருக்கும் போது நம் சிந்தனை , செயல் அனைத்தும் அந்த வலியில் இருந்து எப்படி விடுபடுவது என்பதிலேயே இருக்கும். மனம் வேறு எதையும் தெளிவாக சிந்திக்க முடியாது.  எனவே, உண்மையை அறிய வேண்டும் என்றால், உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். உடல் , இயல்பாக ஆரோக்கியமாக இருந்தால்தான் எதையும் தெளிவாக அறிய முடியும்.

சரியான உணவு முறை, தேவையான உடற் பயிற்சி, ஓய்வு,  பாதுகாப்பாய் இருத்தல்  என்று உடலை போற்றி பாதுகாக்க வேண்டும்.

சில சமயம், உடல் சரியாக இருக்கும் ஆனால் மனம் சரியாக இருக்காது. ஏதேதோ கவலைகள், மன அழுத்தம், சோகம் என்று மனம் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மன ஆரோக்கியமும். மனதை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டும். கோபம், அதீத காமம், பொறாமை, பேராசை என்ற நோய்கள் மனதை பிடிக்கும். மன அழுக்குகளை நீக்கி மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஒரு படபடப்பு இருக்கும். எதை எடுத்தாலும் ஒரு படபடப்பு, ஒரு தவிப்பு. இந்த பரபரப்பு எதையும் தெளிவாக சிந்திக்க முடியாது. உடல் படபடப்பாக இருக்கும் போதும் மனமும் படபடப்பாக இருக்கும்.


மனமும், உடலும் இயங்க அடிப்படை பிராணவாயு. மூச்சு நின்றால் உயிர் போகும். ஆரோக்கியமான உடல், மனம் எல்லாம் சில நிமிடம் மூச்சு இல்லை என்றால்  உயிர் போய் விடும். மூச்சு தவறாக வந்து சென்றாலும் உடலும் மனமும் சலனம் அடையும். எனவே மூச்சு சீராக இருக்க வேண்டும்.


இவை அனைத்தும் ஒரு தெளிவின்மையை உருவாக்கும்.

உடல் ஆரோக்கியம்
மன ஆரோக்கியம்
சீரான மூச்சு

இவை அடிப்படை.

சிந்திப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/08/131.html

No comments:

Post a Comment