Tuesday, August 8, 2017

யோக சூத்திரம் - 1.30 - தடைகள்

யோக சூத்திரம் - 1.30 - தடைகள் 



व्याधि स्त्यान संशय प्रमादाअलस्याविरति भ्रान्तिदर्शनालब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपाः ते अन्तरायाः ॥३०॥

vyādhi styāna saṁśaya pramāda-ālasya-avirati bhrāntidarśana-alabdha-bhūmikatva-anavasthitatvāni citta-vikṣepāḥ te antarāyāḥ ॥30॥

These obstacles (antaraya) (illness; inertia; doubt; neglect; sloth; desire; blindness; a lack of goals; irresoluteness) obscure that which is immutable in human beings (chitta). ||30||

பிரணவத்தை அறிந்து, உணர்ந்து ஓதினால் பல தடைகளை கடக்கலாம் என்று பெரிய பட்டியல் தருகிறார் பதஞ்சலி.

vyādhi = நோய்

styāna = மனச் சோர்வு

saṁśaya = சந்தேகம் , தயக்கம்

pramāda =  கவனமின்மை

ālasya = சோம்பல்

avirati = பேராசை

bhrānti-darśana = தவறான எண்ணங்கள்

alabdha-bhūmikatva = நடு நிலைமை இன்மை , நிலை தடுமாறுதல்

anavasthitatvāni = தீர்க்கம் இன்மை

citta vikṣepaḥ = மனக் குழப்பங்கள்

te = இவை

antarāyaḥ = தடைகள்



இன்பமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், யாருமே இன்பமாக இல்லை. அப்படியே  இருந்தாலும், அது சிறிது காலம் தான்  இருக்கிறது. துன்பம், குழப்பம்,  ஏக்கம் எல்லாம் எங்கிருந்தோ வந்து  ஒட்டிக் கொள்கிறது.


இதில் இருந்து எப்படி விடுபடுவது ?

இந்தத் துன்பங்களுக்கு என்ன காரணம் ?

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

ஏதாவது புத்தகங்களை படிக்கலாமா ? இராமாயணம், பாரதம், கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்கலாமா ?

இல்லை, பெரியவர்கள் சொல்லும் உபன்யாசங்களை கேட்கலாமா ?

அல்லது,  பூஜை,கோவில், தீர்த்த யாத்திரை என்று போகலாமா ?

அல்லது, தான தர்மங்கள்,  வேள்வி, என்று செய்யலாமா ?

எதுவும் உதவாது என்கிறார் பதஞ்சலி.

உங்களுக்கு யாரும் உதவ முடியாது. நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு உதவ முடியும்.

சித்த விருத்த நிரோதம்  - உங்கள் சித்தம் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். துன்பத்தில் இருந்து விடுபட முடியும்.


அந்த சித்த சலனம் எதனால் வருகிறது ? அந்த அமைதியை அடைய எதெல்லாம் தடையாக இருக்கிறது ?

நோய்  - ஆரோக்கிய குறைவு. உடல் சரி இல்லை என்றால் மனம் சரியாக இருக்காது. உடலை பேணி காக்க வேண்டும். உடம்பை நல்ல விதமாக போற்றி நோய் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் கெட்டால் மனம் கெடும்.


மனச் சோர்வு - உடல் ஆரோக்கியமாக இருக்கும். திடகாத்திரமாய் இருக்கும். ஆனால், மனம் ஆரோக்கியமாக இருக்காது. எப்பப் பார்த்தாலும் ஒரு சோர்வு. எதிலும் ஒரு  பற்று இல்லாமல் இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

சந்தேகம்  - எதிலும் நம்பிக்கை இன்மை.

கவனமின்மை = எதைச் சொன்னாலும் சரியாக காது கொடுத்து கேட்பது இல்லை. மனம் எங்கோ ஓடிக் கொண்டிருக்கும்.

சோம்பல் = அப்புறம் செய்யலாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பல்.

பேராசை = காண்பதெல்லாம் வேண்டும் என்ற பேராசை

தவறான எண்ணங்கள் = குற்ற எண்ணங்கள். குறுக்கு புத்தி.

நடு நிலைமை இன்மை , நிலை தடுமாறுதல் = எது சரி, எது தவறு என்று தெரியாத குழப்பம்.

தீர்க்கம் இன்மை = முடிவு எடுத்தால் , அதில் உறுதியாக இல்லாமல் அலை பாய்வது.

மனக் குழப்பங்கள் = எல்லாவற்றையும் போட்டு மனதை எந்நேரமும் குழப்பிக் கொண்டே இருப்பது.


கண் மூடி யோசித்துப் பாருங்கள். உங்களுக்குள் இதில் எத்தனை இருக்கிறது என்று. ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.  இவற்றை களைய என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

பிரணவத்தை ஜெபிப்பதன் மூலம் இவை நீங்கும் என்கிறார். அது நடக்கட்டும் ஒரு புறம். நீங்கள் இவற்றை பற்றி சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

இன்னும் பட்டியல் முடியவில்லை.


http://yogasutrasimplified.blogspot.in/2017/08/130.html

No comments:

Post a Comment