Saturday, February 24, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 3

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 3



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இதில் மூன்றாவதாக வரும் ஆசனம் பற்றி நேற்று சற்று சிந்தித்தோம். 


தற்போது எங்கு பார்த்தாலும் யோகா நிலையங்கள் இருக்கின்றன. ஏதேதோ பெயர் சொல்கிறார்கள். அந்த யோகா , இந்த யோகா என்று புது புது பெயரெல்லாம்  வருகிறது.


பத்தாதற்கு youtube , மற்றும் யோகாசன கலை என்று பல புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் யோகாசனம் கற்றுக் கொள்ள முடியுமா ?


முடியாது. 

 காரணம் என்ன ?

இயம நியமங்களை சரியாக கடை பிடிக்காமல்  மூன்றாவது அங்கமான யோகத்திற்குள் அடி எடுத்து வைக்க முடியாது. 

பணம் கட்டி சேர்ந்தவுடன் யோகா படித்துவிட முடியாது. 

அப்படியே படித்தாலும் அதனால் பலன் ஒன்றும் அதிகம் இருக்காது.   


உடம்பு வேண்டுமானால் கொஞ்சம் வளைந்து கொடுக்கும். சில பல தசைகள் வலுப் பெறலாம்.  ஆனால், அது உங்களை அடுத்த உயர்  நிலைக்கு கொண்டு செல்லாது. 

வெறும் ஆசனம் மட்டும் படித்தால் போதாது. வாழ்க்கை முறை மாற வேண்டும். ஆசனம் என்பது தனியாக செய்யும் ஒன்று அல்ல. 

இயம நியமங்களை கை கொண்ட பின் ஆசனம் செய்யப் பழக வேண்டும். 

கள்ளுண்ணாமை, பொய் பேசாமை, கோபம் கொள்ளாமை , நடுவு நிலைமை போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். 

நாளும் பொய், புரட்டு, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று என்று செய்து கொண்டு, ஆசனம் படிக்கிறேன் என்று சொன்னால் அதனால் என்ன பலன் இருக்கும். 

உணவு கட்டுப்பாடு கிடையாது, புகை பிடிப்பது, காப்பி , டீ குடிப்பது, இரவு வெகு நேரம் விழித்து இருப்பது, பகலில் நீண்ட நீரம் தூங்குவது, இதற்கிடையில் யோகா பயிற்சி என்றால் சரியாகுமா ?

இயமம், நியமம், ஆசனம் இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. யோகம் என்ற உடலின் அங்கங்கள். ஒன்றை விட்டு விட்டு ஒன்றை செய்ய முடியாது.

ஆசனம் பழகுவதற்கு முன், அன்றாட வாழ்க்கையை நெறி படுத்த வேண்டும்.

அவற்றை செய்யாமல் ஆசனம் பழகவும் முடியாது. பழகினாலும் பயன் தராது.

யோக நெறியில் போவதாக முடிவு செய்து விட்டால், வாழ்க்கை ஒரு கட்டுக்குள் வர வேண்டும். நல்லவற்றை செய்து பழக வேண்டும். அல்லனவற்றை விலக்க வேண்டும்.

அது வசமானபின் , ஆசனத்திற்கு போக வேண்டும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-3.html










No comments:

Post a Comment