Thursday, February 22, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 2



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

மூன்றாவது, "ஆசனம்". 

ஆசனம் என்றால் உடலை சரியான நிலையில் வைத்திருத்தல். 

அது என்ன சரியான நிலை?

இன்பப் பெருக்கோடு வாழ்வதற்கு மனதையும், உடலையும் தயார் செய்வது ஆசனம். 

சற்று ஆழமாக சிந்திப்போம். 

நம் மனதை நாம் கட்டுப் படுத்த முடியாது. ஒரு நிமிட நேரம் நாம் சொல்வதைக் கேட்காது. அது பாட்டுக்கு அலையும்.  ஒரு சிந்தனையில் இருந்து இன்னொரு சிந்தனைக்கு தாவும். பயம், ஆசை, கோபம், ஏக்கம், காமம் என்று மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கும். 

அந்த மனதை அமைதிப் படுத்தாவிட்டால், வாழ்வில் நிம்மதி இருக்காது. 

மனதை எப்படி அமைதி படுத்துவது? 

மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கின்றன. 

உடலை அசைத்தால், மனம் அசையும். 

கார் ஓட்டும் போது , நம்மால் காரின் என்ஜினை நேரடியாக வேலை செய்ய வைக்க முடியாது. ரொம்ப கடினம். நாம் என்ன செய்கிறோம், accelarator ஐ அழுத்துகிறோம். வண்டி நகர்கிறது.  அது எப்படி  வேலை செகிறது என்று கூட நமக்குத் தெரியாது. 

Send என்ற button ஐ அழுத்தினால் e  மெயில் போய் சேர வேண்டிய இடத்துக்குப் போய் விடுகிறது. எப்படி என்று நமக்குத் தெரியாது. 

அது போல, மனதை சரி செய்ய வேண்டும் என்றால், உடலை சரி செய்ய வேண்டும். உடல் சரியானால், மனமும் சரியாகும். 

உதாரணமாக, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மார்பு விரிந்து, உடல் நேராக இருக்கும். 

சோகமாக இருக்கும் போது , தலை லேசாக கவிழ்ந்து, தோள் கீழே இறங்கி, கைகள் தளர்ந்து இருக்கும். 

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், சந்தோஷமாக இருக்கும் போது , தலையை தொங்கப் போட்டு, கைகளை தளர்த்தி, தோள்களை தொய்ய விட்டு ...எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சந்தோஷம் போய் விடும். 

அதே போல் சோகமாக இருக்கும் போது , நிமிர்ந்து நின்று, முதுகு தண்டை நேராக்கி, தலையை நிமிர்த்தி, மார்பை விரிவாக்கி நின்று பாருங்கள்...முடியாது. சோகம் போய் விடும். 

இன்பமாக இருக்கும் போது உடல் ஒரு மாதிரி இருக்கும். 

துன்பமாக இருக்கும் போது உடல் வேறு ஒரு நிலையில் இருக்கும். 


யோகத்தின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்றால், உடலின் நிலையை மாற்றினால், மனதின்  நிலையை மாற்ற முடியும் என்பதுதான். 

இன்பத்தில் உடல் ஒரு நிலையில் இருக்கும் என்றால், உடலை அந்த நிலையில் வைத்தால் இன்பம் , சந்தோஷம் தானாகவே வந்து விடும். 

எப்போதும் இன்பமாக இருக்க வேண்டுமா ? உடலை எப்போதும் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்தால் போதும்.

யோகத்தின் குறிக்கோள் நாம் அளவற்ற இன்பத்தில் எப்போதும் இருப்பது தான்.

அதற்கு உடலும், மனமும் ஒன்று பட வேண்டும். உடலை ஒழுங்கு படுத்தினால் மனம்  வசப்படும்.

சரி. இந்த ஆசனங்கள் செய்ய என்ன செய்ய வேண்டும்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு யோகா நிலையம் இருக்கிறது. அங்கு போய் இந்த ஆசனங்களை கற்றுக் கொள்ளலாமா ?

Power Yoga , 1000 யோகா, என்றெல்லாம் பல யோகா நிலையங்கள் இருக்கின்றன. நிறைய ஆசனம் எல்லாம் சொல்லித் தருகிறார்களாம். போய் கற்றுக் கொள்ளலாமா ?

அல்லது, 30 நாட்களில் யோகா, lightning யோகா போன்ற புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாமா ?

அல்லது, youtube போன்றவற்றில் பார்த்து பயிற்சி செய்யலாமா ?

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-2.html






No comments:

Post a Comment