Saturday, August 24, 2019

யோக சூத்திரம் - 2.51 - பிராணாயாமத்தை கடந்து

யோக சூத்திரம் - 2.51 - பிராணாயாமத்தை கடந்து 



बाह्याअभ्यन्तर विषयाक्षेपी चतुर्थः ॥५१॥

(bahya abhyantara vishaya akshepi chaturthah)


bāhya = வெளிவிடுதல்
abhyantara = உள்ளிழுத்தல்
viṣayā = விஷயம்
ākṣepī = அவற்றை கடந்து , அதையும் தாண்டி
caturthaḥ = நான்காவது

உள் இழுப்பது, வெளியே விடுவது, இடையில் மூச்சை நிறுத்துவது என்ற மூன்று நிலைகளை பார்த்தோம்.

இவற்றை தாண்டி, நான்காவதாக ஒன்று இருக்கிறது உஎன்று பதஞ்சலி கூறுகிறார்.

ஆனால், அது என்ன என்று அவர் கூறவில்லை.

இந்த மூன்றையும் கடந்தால்தான் அது புரியும் என்று விட்டு விட்டார் போல் இருக்கிறது.

நீண்ட இடைவெளி விட்டு விட்டு எழுதுவதால்இதுவரை என்ன படித்தோம், எங்கே விட்டோம் என்ற  சிக்கல் இருக்கலாம்.

எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றை ஒரு தொகுப்பாக தர எண்ணம்.

ஏன் என்றால்,  இந்த சுலோகம் தாண்டி, பதஞ்சலி வேறு ஒரு புதிய உலகுக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறார்.

அங்கே போகும் முன், இதுவரை படித்தவற்றை ஒரு முறை சிந்தித்து விடுவோம்.

என்ன , சரியா ?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/251.html

No comments:

Post a Comment